search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கறவை மாடுகள்"

    • கால்நடைகளுக்கு பரவி வரும் லம்பி நோயானது அம்மை காய்ச்சலாகும்.
    • நோய் பரவலை கட்டுப்படுத்த கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

    குடிமங்கலம்:

    திருப்பூர், கோவை மாவட்டத்தில் கால்நடைகளுக்கு லம்பி எனும் புதிய வகை வைரஸ் நோய் தொற்று பரவி வருகிறது.கடந்த சில மாதங்களில் ஆடுகளுக்கு மர்மக்காய்ச்சல் ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது கறவை மாடுகளுக்கு நோய் பாதிப்பு தீவிரம் அடைந்துள்ளது. இந்நோய் பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும் என கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து கோவை மண்டல கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் பெருமாள்சாமி கூறியதாவது:-

    கால்நடைகளுக்கு பரவி வரும் லம்பி நோயானது அம்மை காய்ச்சலாகும். கொசு, ஈ மற்றும் உண்ணிகள் வாயிலாக இந்நோய் பரவுகிறது. இந்நோய் பாதித்தால் கால்நடைகளுக்கு உடலில் கட்டிகள் ஏற்படும். தாய் பசுவிடம் இருந்து பால் குடித்தால் கன்றுகளுக்கும் பரவும் தன்மை கொண்டது.நோய் பரவலை கட்டுப்படுத்த கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

    ×