search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கரிய காளியம்மன்"

    • தேர் திருவிழாவில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பக்தர்கள் 15 நாட்கள் விரதம் இருந்து குண்டம் இருந்து நேர்த்தி க்கடன் செலுத்துவது வழக்கம்.
    • தொடர்ந்து கரும்பு, விறகுகள் கொண்டு குண்டம் திறப்பு விழா செய்யப்பட்டு குண்டத்திற்கு தீ மூட்டப்பட்டது.

    கோபி

    கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கோரக்காட்டூர் கரிய காளியம்மன் கோவில் குண்டம் தேர் திருவிழா வருடம் தோறும் தை மாதம் முதல் வாரம் தொடங்கும்.

    இந்த குண்டம் தேர் திருவிழாவில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பக்தர்கள் 15 நாட்கள் விரதம் இருந்து குண்டம் இருந்து நேர்த்தி க்கடன் செலுத்துவது வழக்கம்.

    அந்த வகையில் இந்த ஆண்டிற்கான குண்டம் தேர் திருவிழா கடந்த மாதம் 18-ந் தேதி பூச்சாட்டுகளுடன் தொடங்கியது. தொடர்ந்து தீர்த்தம் கொண்டு வருதல், முதல் கால பூஜை, காப்பு கட்டுதல், கொடியேற்றம், சந்தன காப்பு, சுமங்கலி யாக பூஜை, உள்ளிட்டு பல்வேறு வழிபாடுகள் செய்யப்பட்டது.

    பின்னர் நேற்று இரவு மாடு கரும்பு கொண்டு வருதல், மாவிளக்கு பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து கரும்பு, விறகுகள் கொண்டு குண்டம் திறப்பு விழா செய்யப்பட்டு குண்டத்திற்கு தீ மூட்டப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதனை யொட்டி அதிகாலை அம்மை அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின் குதிரையிடம் வாக்கு கேட்ட பின்பு திருகோடி ஏற்றப்பட்டது.

    அதனை தொடர்ந்து தலைமை பூசாரி சதீஷ்குமார் குண்டத்திற்கு பூஜை செய்து இறங்கி தொடங்கி வைத்தார். தொடர்ந்து கோரக்காட்டூர், கடுக்காயம்பாளையம், கொளத்துப்பாளையம், புளியகாட்டூர், ஐய்யம்புதூர், வெள்ளாங்கோவில் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என ஏராளமானோர் கையில் வேப்பிலையுடனும், அக்கினி சட்டியுடன் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்தனர்.

    • கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கலிங்கியம் கரிய காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.
    • அதை தொடர்ந்து மகா அபிஷேகம், மகா அலங்காரம், தச தரிசனம், தசதானம், மகா தீபாராதனை நடைபெற்றது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கலிங்கியம் கரிய காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.

    இதையொட்டி கடந்த 6-ந் தேதி கணபதி ஹோமம், பவானி நதியில் இருந்து புனித தீர்த்தம் எடுத்து வருதல் நிகழ்ச்சியும் மூல மந்திர ஹோமமும் நடை பெற்றது.

    7-ந் தேதி 2-ம் கால யாக பூஜையும் மகாபூர்ண குதியும், தீபாராதனையும், அதைத் தொடர்ந்து 3-ம் காலயாக பூஜை அஷ்ட பந்தன மருந்து சான்றுதல் நிகழ்ச்சி ஆகியவை நடை பெற்றன.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் இன்று காலை 8.15 மணி அளவில் நடைபெற்றது. இதில் கோபுரகலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபி ஷேகத்தை நடத்தி வைத்தனர்.

    அதை தொடர்ந்து மகா அபிஷேகம், மகா அலங்காரம், தச தரிசனம், தசதானம், மகா தீபாராதனை நடைபெற்றது.

    இந்த கும்பாபிஷேக விழாவில் கலிங்கியம், கோபி, அவ்வையார் பாளையம், நல்ல கவுண்டன்பாளையம், கரட்டடிபாளையம் உள்பட பல கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டு சென்றனர்.

    பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது.

    ×