search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கமூடிகள்"

    • அ.தி.மு.க. எதிரிகளின் முகமூடிகள் கிழிக்கப்பட்டு விட்டது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
    • பொதுக்குழுவை எதிர்த்து சிலர் உச்சநீதிமன்றம் சென்றனர்.

    மதுரை

    அ.தி.மு.க. பொதுச்செய லாளர் எடப்பாடி பழனி சாமியின் 69-வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை மேற்கு-தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில். அன்ன தான நிகழ்ச்சி அலங்கா நல்லூர் அருகே உள்ள அரியூரில் நடை பெற்றது.

    அன்னதானத்தை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார் தொடங்கி வைத்தார். இதில் பேரவை மாநில துணைச்செயலாளர் வெற்றிவேல், முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் உதயகுமார் பேசியதாவது:-

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் விழாவாக அம்மா பேரவையின் சார்பிலும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பிலும் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    1½கோடி தொண்டர்க ளின் எண்ணத்தை நனவாக்கும் வண்ணம், அ.தி.மு.க. பொதுக்குழுவில் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து பொதுக்குழுவை எதிர்த்து சிலர் உச்சநீதிமன்றம் சென்றனர். அதில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார்.

    தற்போது தேர்தல் ஆணையம் முழுமையாக பொதுக்குழு தீர்மா னங்களை அங்கீகரித்து ள்ளது. இதன் மூலம் எதிரிகளின் முகமூடிகள் கிழிக்கப்பட்டு விட்டது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×