search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கணவன் புகார்"

    • சுகுமார் சென்னையில் கொத்தனார் வேலை செய்து வருகிறார்.
    • சுடர் கடந்த 2-ந் தேதி, வீட்டு அலமாரியில் இருந்த சில பொருட்களை எடுத்துகொண்டு வெளியில் சென்றுள்ளார்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த நெடுங்காடு பஞ்சாட்சபுரம் கீழபுத்தரகம் பகுதியைச்சேர்ந்தவர் சுகுமார். இவரது மனைவி சுடர் (வயது30). இவர்களுக்கு சுஷ்மிதா (3), சுபிஷா (2) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். சுகுமார் சென்னையில் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், சுடர் கடந்த 2-ந் தேதி, வீட்டு அலமாரியில் இருந்த சில பொருட்களை எடுத்துகொண்டு வெளியில் சென்றதாக சுகுமாரின் தாய் பானு, சுகுமாருக்கு போன் மூலம் தகவல் கொடுத்துள்ளார். முன்னதாக, உறவினர் திவாகர் என்பவர் சுடரிடம் தனியாக பேசிவிட்டு சென்றதாகவும் தெரிவித்துள்ளர். தொடந்து, சுகுமார் காரைக்கால் திரும்பி, காரைக்கால் மாவட்டம் முழுவதும் தேடியும் சுடர் மற்றும் குழந்தைகள் இருப்பிடம் தெரியாததால், நெடுங்காடு போலீசில் சுகுமார் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, சுடர் மற்றும் 2 குழந்தைகளை தேடிவருகின்றனர்.

    ×