search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டுமானப்பணி"

    • நேரடியாக விற்பனை செய்வதற்கு வசதியாக வாழப்பாடியில் உழவர் சந்தை அமைக்க வேண்டுமென விவசாயிகள்,
    • பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

    வாழப்பாடி:

    வாழப்பாடி பகுதி கிரா மங்களில் விளை விக்கப்ப டும் தக்காளி, தேங்காய் உள்ளிட்ட அனைத்து ரக காய்கறிகள், வாழைத்தார் மற்றும் பல்வேறு வகையான பூக்கள் உள்ளிட்ட விவசாய விளைபொருட்களை வாழப்பாடியில் இயங்கும் தனியார் ஏல மண்டிகளிலேயே விற்பனை செய்து வருகின்றனர்.

    எனவே விவசாயிகள் அன்றாடம் அறுவடை செய்யும் காய்கறிகளை , நுகர்வோரிடம் நேரடியாக விற்பனை செய்வதற்கு வசதியாக வாழப்பாடியில் உழவர் சந்தை அமைக்க வேண்டுமென விவசாயிகள், பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதனையடுத்து அரசு வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை வாழப்பாடி யில் உழவர் சந்தை அமைக்க முன் வந்தது. விவசாயிகள் மற்றும் நுகர்வோர்கள் வந்து செல்வதற்கு பொருத்தமான இடத்தை தேர்வு செய்ய வாழப்பாடியில் பல இடங்களை அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் குழுவினர் பார்வையிட்ட னர். இறுதியாக, வாழப்பாடி கிழக்கு பள்ளக்காடு பகுதி யில் கடலுார் சாலையில் தனியார் பள்ளிக்கு அருகிலுள்ள அரசு பாதை புறம்போக்கு நிலத்தில் உழவர் சந்தை அமைக்க முடிவு செய்யப்பட்டு திட்ட முன்வரைவு தயாரிக்கப்பட்டது.

    நிதி ஒதுக்கீடு

    இதற்கு வேளாண் விற்பனை மற்றும் வணிக வரித்துறை இசைவு தெரி வித்ததால், கட்டுமானப்பணி களுக்கு நிதி ஒதுக்கப்பட்டது.

    இதனையடுத்து, வாழப்பாடியில் உழவர் சந்தை கட்டுமானப்பணிகள் முழுவீச்சில் தொடங்கி யுள்ளது. இதனால், வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளும், நுகர்வோர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    உழவர் சந்தை அமைப்ப தற்கு வழிவகை செய்த முன்னாள் எம்.எல்.ஏ.

    எஸ்.ஆர்.சிவலிங்கம், வட்டார ஆத்மா குழு தலை வர் எஸ்.சி. சக்கரவர்த்தி, பேரூராட்சி மன்ற தலைவர் கவிதா உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், சேலம் மாவட்ட கலெக்டர் கார்மே கம், வாழப்பாடி தாசில்தார் கோபாலகிருஷ்ணன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகளுக்கும், விவ சாயிகளும், பொதுமக்களும் நன்றி தெரிவித்துள்ளனர்.  

    • 1.13 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
    • தொழில்நுட்ப ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

    அவிநாசி :

    தமிழகத்தில் உள்ள கூட்டுறவு விற்பனை சங்கங்களில், 7 கூட்டுறவு விற்பனை சங்கங்களில், இ- டிரேடிங் முறையில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு அனுமதித்து நிதி ஒதுக்கீடும் வழங்கியுள்ளது.பருத்தி ஏலம் சார்ந்த அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் இதை மேற்கொள்ள 1.13 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

    இதற்கான கட்டிட கட்டுமானப்பணி துவங்கியுள்ளது.சங்க நிர்வாகிகள் கூறுகையில், புதிதாக கட்டப்படும் கட்டடத்தில் கம்ப்யூட்டர் உள்ளிட்ட இ -டிரேடிங் நடவடிக்கைக்கு தேவையான உபகரணங்கள் பொருத்தப்பட்டு பருத்தி ஏலம் தொடர்பான விலை, அளவு உள்ளிட்ட விவரங்கள் கம்ப்யூட்டர் திரையில் விவசாயிகளுக்கு தெரியப்படுத்துவதுடன் விவசாயிகளின் மொபைல் எண்ணுக்கும் அதுகுறித்த தகவலை அனுப்பி வைக்கும் வகையிலான தொழில்நுட்ப ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இப்பணி 6 மாதத்தில் நிறைவு பெறும் என்றனர்.

    இச்சங்கத்தில் அவிநாசி, சத்தி, கோபி, தாராபுரம், ஈரோடு என மாநிலத்தின் பல இடங்களில் உள்ள 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.தாங்கள் விளைவிக்கும் பருத்தியை இச்சங்கம் மூலம் விற்கின்றனர். வாரந்தோறும் புதன்கிழமை பருத்தி ஏலம் நடத்தப்படுகிறது.

    ×