search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டுமான பணிகள்"

    • காலையில் கிரேன் முலம் துறைமுக அலை தடுப்பு சுவர் பழுதடைந்த பகுதியில் இருந்து கற்களை அகற்ற தொடங்கினர்.
    • தொடர்ந்து அதிகாரிகள் கூறுகையில் வரும் 10 நாட்களுக்கு பணிகள் சிறிது தாமதமாக நடைபெறும் எனவும், அதன் பிறகு முழு வீச்சில் பணிகள் தொடரும் என கூறினர்.

    கன்னியாகுமரி, ஆக.12-

    தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகம் சரியான முறையில் கட்டுமான பணிகள் நடைபெறாமல் முடிக்கப்பட்டதால் துறைமுக முகத்துவாரத்தில் அடிக்கடி கடல்சீற்றத்தில் சிக்கி படகுகள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டன.

    இதனை சீரமைக்க கோரி கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக மீனவ மக்கள் பலதரப்பட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். இதனையடுத்து மறு சீரமைப்புக்காக ரூ.240 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியானது. இதுவரை எந்த பணிகளும் துவங்காமல் துறைமுக முகத்துவாரம் அப்படியே கிடக்கிறது.

    இதற்கிடையில் கடந்த ஒரு சில வாரங்களாக தொடர் விபத்துகள் துறைமுக முகத்துவாரத்தில் ஏற்பட்டு வந்தது. ஒரே நாளில் பல படகுகள் கவிழ்வதும், உடைந்து சேதமடைவதும் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று காலை நாட்டு படகு ஒன்று துறைமுக முகத்துவாரத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் படகில் இருந்த பூத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த சைமன் (வயது 48) என்ற மீனவர் பலியானார். இதை தொடர்ந்து பூத்துறை மீனவ கிராமத்தில் பொதுமக்கள் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. மேலும் போராட்டம் முடிவுக்கு வரும் வரையிலும் துறைமுகத்தில் மீன் இறக்குதல் உள்ளிட்ட எந்த பணியும் செய்வதில்லை எனவும், இனயம், தூத்துர் மண்டலத்தை சேர்ந்த 15 மீனவ கிராமங்களில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிகளை புறக்கணிப்பது எனவும், பெரு நிறுவனங்கள் உட்பட கடைகள் அனைத்தும் அடைப்பது என தீர்மானிக்கப்பட்டது.

    இதையடுத்து சப்-கலெக்டர் அலர்மேல் மங்கை சம்பவ இடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சு வார்த்தையில் பொது மக்களுடன் ராஜேஷ்குமார் எம். எல்.ஏ. மீனவர் சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இன்று உடனடியாக துறைமுக பணி ஆரம்பிக்கப்படும் என மீன்வளத் துறை இணை இயக்குனர் எழுத்து பூர்வமாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

    இதை தொடர்ந்து இன்று தேங்காய்பட்டணம் மீன்பிடி துறை முகத்தில் பணிகள் தொடங்க அதிகாரிகள் சம்பவ இடம் விரைந்தனர்.

    காலையில் கிரேன் முலம் துறைமுக அலை தடுப்பு சுவர் பழுதடைந்த பகுதியில் இருந்து கற்களை அகற்ற தொடங்கினர். தொடர்ந்து அதிகாரிகள் கூறுகையில் வரும் 10 நாட்களுக்கு பணிகள் சிறிது தாமதமாக நடைபெறும் எனவும், அதன் பிறகு முழு வீச்சில் பணிகள் தொடரும் என கூறினர்.

    • சரவணன் எம்.எல்.ஏ. ஆய்வு
    • மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு

    திருவண்ணாமலை:

    கலசப்பாக்கம் அடத்த ஜவ்வாதுமலையில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில்ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை பெ.சு.தி. சரவணண் எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க ஆலோசனை வழங்கினார்.

    ஜவ்வாதுமலையில் வாழும் பழங்குடியின மலைவாழ் மக்கள் ஜமுனாமரத்தூரில் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டி பெ.சு.தி.சரவணன் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர்.

    இதனை தொடர்ந்து திருவண்ணாமலை தொகுதி சி.என்.அண்ணாதுரை எம்.பி. தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.15 லட்சமும், கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மொத்தம் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஜமுனாமரத்தூரில் புதிய பஸ் நிலையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை கலசப்பாக்கம் பெ.சு.தி.சரவணன் எம்.எல்.ஏ. இன்று காலை ஜவ்வாதுமலையில் உள்ள ஜமுனாமரத்தூர் சென்று கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் ஜவ்வாது மலையில் வாழும் பழங்குடியின மலைவாழ் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின் போது ஊரக உள்ளாட்சி துறை அதிகாரிகளும், உள்ளாட்சி பிரதிநிதிகளும், பொது மக்களும் கலந்து கொண்டனர்.

    • பண்டாரவாடை ஊராட்சியில் நடைபெற்று வரும் பயணியர் நிழற்குடை கட்டுமான பணிகளை ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
    • நிழற்குடை கட்டுமான பணிகளை ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பாபநாசம்:

    பாபநாசம் ஒன்றியம் பண்டாரவாடை ஊராட்சியில் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2021-2022 இன் கீழ் கட்டப்பட்டு வரும் பயணியர் நிழற்குடை கட்டுமான பணிகளை ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின் போது தி.மு.க தஞ்சை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் கோவி. அய்யாராசு, த.மு.மு.க, ம.ம.க, தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் ரஹ்மத் அலி, தி.மு.க பாபநாசம் தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர், ஒப்பந்ததாரர் திருமலை நடராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

    ×