என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கட்சி கீதம்"
- தேர்தலில் வென்றால் அயோத்தி ராமர் கோயிலுக்கு இலவச சுற்றுலா.
- இதையெல்லாம் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை.
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று தனது கட்சியின் புதிய கீதத்தில் இருந்து "ஜெய் பவானி" மற்றும் "இந்து" என்ற வார்த்தைகளை நீக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்திடம் (ECI) நோட்டீஸ் வந்துள்ளதாகவும், ஆனால் அதைக் கடைப்பிடிக்கப் போவதில்லை என்றும் கூறினார்.
இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய உத்தவ் தாக்கரே, "கீதத்திலிருந்து 'ஜெய் பவானி'யை நீக்கக் கோருவது மகாராஷ்டிராவை அவமதிக்கும் செயலாகும்" என்றார்.
இதுகுறித்து உத்தவ் தாக்கரே கூறியதாவது:-
மத்திய பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா தேர்தல்களில் 'பஜ்ரங் பலி கி ஜெய்' எனச் சொல்லி பிரதமர் மோடி வாக்கு சேகரித்தார்.
தேர்தலில் வென்றால் அயோத்தி ராமர் கோயிலுக்கு இலவச சுற்றுலா அழைத்துச் செல்வோம் என பிரசாரங்களில் அமித்ஷா பேசி வருகிறார்.
இதையெல்லாம் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. ஆனால், எங்கள் தேர்தல் பிரசார பாடலில் இருந்து 'இந்து', 'ஜெய் பவானி' ஆகிய வார்த்தைகளை நீக்கச் சொல்லி எங்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நான் தேர்தல் ஆணையத்திடம் கூறிக்கொள்ள விரும்புவது...
அந்த வார்த்தைகளை நாங்கள் நீக்க மாட்டோம்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்