search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடிதம் எழுதும் போட்டி"

    • தபால்துறை சார்பில் புதிய இந்தியாவுக்கான டிஜிட்டல் இந்தியா எனும் தலைப்பில் கடிதம் எழுதும் பிரசாரம் மற்றும் போட்டி நடக்கிறது.
    • விவரங்களுக்கு அருகில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தை நாடலாம் என திருப்பூர் தலைமை தபால் கோட்ட கண்காணிப்பாளர் விஜயதனசேகர் தெரிவித்துள்ளார்.

    திருப்பூர்:

    தபால்துறை சார்பில் புதிய இந்தியாவுக்கான டிஜிட்டல் இந்தியா எனும் தலைப்பில் கடிதம் எழுதும் பிரசாரம் மற்றும் போட்டி நடக்கிறது.இப்போட்டியில் 'ஏ4' தாளில், கையால் எழுதப்படும் கடிதம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். தாளில் அனுப்புவது ஆயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இன்லாந்து லெட்டரில் அனுப்பும் கடிதம் 500 வார்த்தைகளுக்குள் இருத்தல் வேண்டும்.

    கடிதங்களை தமிழ், ஆங்கிலம் இந்திய மொழிகளில் எழுதி அனுப்பலாம். போட்டியில் பங்கு பெறுபவர், பெயர், இருப்பிட முகவரியை கட்டாயம் குறிப்பிட வேண்டும். 18 வயது நிறைவு பெற்றவர், பெறாதவர் என்பதை அறிய நிச்சயம் வயது சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்.கடிதங்களை அனுப்ப வேண்டிய முகவரி: முதன்மை தபால் துறைத் தலைவர், சென்னை 600 002. கடிதங்கள் அக்டோபர் மாதம் 31ந் தேதிக்குள் சென்று சேர வேண்டும். அதன் பின் வரும் கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

    தேசிய அளவில் முதல் பரிசு பெறுவோருக்கு ரூ. 50 ஆயிரம், இரண்டாவது பரிசு 25 ஆயிரம், மூன்றாவது பரிசு 10 ஆயிரம். மாநில அளவில் முதல் பரிசு ரூ. 25 ஆயிரம், இரண்டாவது மற்றும் மூன்றாவது பரிசு முறையே 10 ஆயிரம் மற்றும் 5,000 ரூபாய்.மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தை நாடலாம் என திருப்பூர் தலைமை தபால் கோட்ட கண்காணிப்பாளர் விஜயதனசேகர் தெரிவித்துள்ளார்.

    • உலகெங்கிலும் உள்ள அனைத்து சாலைகளையும் குழந்தைகளுக்கு பாதுகாப்பானதாக மாற்றுவதே உங்கள் நோக்கம்.
    • கூடுதல் தகவல்க ளை இந்திய அஞ்சல் துறையின், www.indiapost.gov.in தளத்தில் அறிய லாம்.

    ஈரோடு:

    ஈரோடு அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணி ப்பாளர் கருணாகர பிரபு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    'நீங்கள் ஒரு சூப்பர் ஹீரோ என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். உலகெங்கிலும் உள்ள அனைத்து சாலை களையும் குழந்தைகளுக்கு பாதுகாப்பானதாக மாற்றுவதே உங்கள் நோக்கம்.

    உங்கள் இலக்கை அடைய என்னென்ன சக்திகள் தேவை' என்பதை விளக்கி ஒருவர் ஒரு கடிதம் எழுதலாம்.கட்டாயமாக, 15 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் பங்கேற்கலாம். 800 வார்த்தைகளுக்கு மிகாத கிடதமாக எழுத வேண்டும்.

    ஆங்கிலம், தமிழ் மற்றும் அங்கீகரிக்க ப்பட்ட மொழியில் எழுதலாம். இப்போட்டியில் சர்க்கிள் அளவில் முதல், 3 பரிசு பெறுவோருக்கு முறையே, 25,000 ரூபாய், 10,000 ரூபாய், 5,000 ரூபாயும், சர்வதேச அளவிலான போட்டியில் முதல், 3 பரிசு பெறுவோருக்கு முறையே, 50,000 ரூபாய், 25,000 ரூபாய், 10,000 ரூபாய் பரிசாக வழங்கப்படும். தேசிய அளவில் சிறந்த கடி தங்கள் தேர்வு செய்யப்பட்டு, சர்வதேச போட்டிக்கு ஏற்கப்படும்.

    அதற்கான விண்ணப்பத்துடன், ஒரு போட்டோ, பிறந்த தேதி அல்லது ஆதார் அட்டை நகல் அல்லது பள்ளியில் வழங்கிய பிறந்த தேதிக்கான சான்றுடன், 'எஸ்.பி.ஓ., – ஈரோடு கோட்டம், ஈரோடு – 638001' என்ற முகவரியில் வரும், 13-க்குள் கிடை க்கும்படி வழங்க வேண்டும்.

    கூடுதல் தகவல்க ளை இந்திய அஞ்சல் துறையின், www.indiapost.gov.in தளத்தில் அறிய லாம்.இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    ×