search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓவிய கண்காட்சி"

    • நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பழனிச்சாமி தலைமை தாங்கினார்.
    • மாணவ -மாணவிகளின் விதவிதமான ஓவிய படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள சித்திர கூடத்தில் ஓவிய கண்காட்சி நடந்தது. இதில் மாணவ -மாணவிகளின் விதவிதமான ஓவிய படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் ஜோதிமணி வரவேற்று பேசினார்.

    இதில் சிறப்பு விருந்தினராக திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா கலந்து கொண்டு மாணவ- மாணவிகளின் ஓவிய படைப்புகளை பார்வையிட்டு வாழ்த்துக்கள் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். முடிவில் உயர்நிலை உதவி தலைமை ஆசிரியர் சக்திவேல் ராஜா நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை ஓவிய ஆசிரியர் தியாகராஜன் செய்து இருந்தார்.

    • கொரோனா தொற்று காரணமாக சில வருட இடைவெளிக்கு பிறகு கண்காட்சி நடைபெறுகிறது.
    • ஓவியர்கள் வாட்டர் கவர், ஆக்ரிவிக், டிஜிட்டல் ஓவியம் மற்றும் சிறிய சிற்பங்களை காட்சிப் படுத்துகிறார்கள்.

    சென்னை:

    சென்னை மயிலாப்பூரில் உள்ள நாகேஸ்வரராவ் பூங்காவில் நாளை (ஞாயிற்றுக்கி ழமை) ஓவிய கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக சில வருட இடைவெளிக்கு பிறகு இந்த கண்காட்சி நடைபெறுகிறது.

    இதில் 83 ஓவியர்கள் தங்கள் ஓவியங்களை காட்சிப்படுத்துகின்றனர். ஓவியங்களை காட்சிப்படுத்த ஒவ்வொருவருக்கும் இடவசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை, மதுரை, கோவை, நாகர்கோவில் ஆகிய இடங்களில் இருந்து வரும் ஓவியர்கள், வாட்டர் கவர், ஆக்ரிவிக், டிஜிட்டல் ஓவியம் மற்றும் சிறிய சிற்பங்களை காட்சிப் படுத்துகிறார்கள்.

    பூங்காவில் நடைபயிற்சி செய்பவர்களுக்கும், உடற்பயிற்சி செய்பவர்களுக்கும் எந்தவித இடையூறும் இல்லாத வகையில் இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது நாளை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை இந்த கண்காட்சி நடைபெறுகிறது.

    ×