search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிமங்கலம் அரசு பள்ளியில் ஓவிய கண்காட்சி
    X

    மாணவ -மாணவிகளின் ஓவிய படைப்புகளை படத்தில் காணலாம். 

    குடிமங்கலம் அரசு பள்ளியில் ஓவிய கண்காட்சி

    • நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பழனிச்சாமி தலைமை தாங்கினார்.
    • மாணவ -மாணவிகளின் விதவிதமான ஓவிய படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள சித்திர கூடத்தில் ஓவிய கண்காட்சி நடந்தது. இதில் மாணவ -மாணவிகளின் விதவிதமான ஓவிய படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் ஜோதிமணி வரவேற்று பேசினார்.

    இதில் சிறப்பு விருந்தினராக திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா கலந்து கொண்டு மாணவ- மாணவிகளின் ஓவிய படைப்புகளை பார்வையிட்டு வாழ்த்துக்கள் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். முடிவில் உயர்நிலை உதவி தலைமை ஆசிரியர் சக்திவேல் ராஜா நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை ஓவிய ஆசிரியர் தியாகராஜன் செய்து இருந்தார்.

    Next Story
    ×