search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாளை நடக்கிறது நாகேஸ்வரராவ் பூங்காவில் ஓவிய கண்காட்சி
    X

    நாளை நடக்கிறது நாகேஸ்வரராவ் பூங்காவில் ஓவிய கண்காட்சி

    • கொரோனா தொற்று காரணமாக சில வருட இடைவெளிக்கு பிறகு கண்காட்சி நடைபெறுகிறது.
    • ஓவியர்கள் வாட்டர் கவர், ஆக்ரிவிக், டிஜிட்டல் ஓவியம் மற்றும் சிறிய சிற்பங்களை காட்சிப் படுத்துகிறார்கள்.

    சென்னை:

    சென்னை மயிலாப்பூரில் உள்ள நாகேஸ்வரராவ் பூங்காவில் நாளை (ஞாயிற்றுக்கி ழமை) ஓவிய கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக சில வருட இடைவெளிக்கு பிறகு இந்த கண்காட்சி நடைபெறுகிறது.

    இதில் 83 ஓவியர்கள் தங்கள் ஓவியங்களை காட்சிப்படுத்துகின்றனர். ஓவியங்களை காட்சிப்படுத்த ஒவ்வொருவருக்கும் இடவசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை, மதுரை, கோவை, நாகர்கோவில் ஆகிய இடங்களில் இருந்து வரும் ஓவியர்கள், வாட்டர் கவர், ஆக்ரிவிக், டிஜிட்டல் ஓவியம் மற்றும் சிறிய சிற்பங்களை காட்சிப் படுத்துகிறார்கள்.

    பூங்காவில் நடைபயிற்சி செய்பவர்களுக்கும், உடற்பயிற்சி செய்பவர்களுக்கும் எந்தவித இடையூறும் இல்லாத வகையில் இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது நாளை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை இந்த கண்காட்சி நடைபெறுகிறது.

    Next Story
    ×