search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒற்றை யானையை"

    • ஒற்றை காட்டு யானையை பிடித்து வேறு வனப்பகுதிக்குள் விடலாம் என்று வனத்துறையினர் முடிவு செய்தனர்.
    • வனத்துறையினர் அந்த யானையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அடுத்த கள்ளிப்பட்டி அருகே உள்ள பெருமுகை ஊராட்சி அந்தியூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒற்றை ஆண் காட்டு யானை வெளியேறி வரப்பள்ளம் ஆற்றங்கரையோர விவசாய தோட்ட பகுதியில் சுற்றி திரிந்தது.

    இதை தொடர்ந்து அடசபாளையம் பகுதியில் விவசாய தோட்டத்தில் புகுந்து விவசாய கூலி வேலை செய்து கொண்டிருந்த துரை என்ற சித்தேஷ்வரன் என்பவரை மிதித்து கொன்றது.

    இதனையடுத்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு அறிவுறுத்தலின் பேரில் அந்தியூர் வனச்சரகர் உத்திரசாமி மற்றும் டி.என்.பாளையம் வனச்சரகர் கணேஷ் பாண்டியன் தலைமையிலான வனத்துறையினர் அந்த ஒற்றை காட்டு யானையை பெருமுகை வனப்பகுதி க்குள் விரட்டி அனுப்பினர்.

    அந்த காட்டு யானை மீண்டும் ஊருக்குள் வந்து உயிர் சேதத்தை ஏற்படுத்தி விடுமோ என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

    இதையடுத்து அந்த ஒற்றை காட்டு யானையை பிடித்து வேறு வனப்பகுதிக்குள் விடலாம் என்று வனத்துறையினர் முடிவு செய்தனர்.

    இதனால் முதுமலை யானைகள் முகாமில் இருந்து நேற்று முன்தினம் லாரிகளில் பொம்மன், சீனிவாசன் என்ற 2 கும்கி யானைகளை பெருமுகை சஞ்சீவிராயன் கோவில் அருகே உள்ள உரம்பு கிணறு மாரியம்மன் கோவில் பகுதிக்கு கொண்டு வந்தனர்.

    பின்னர் வனத்துறையினர் அந்த யானையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் டிரோன் கேமரா மூலமாக அந்த ஒற்றை காட்டு யானை நடமாட்டம் உள்ளதா என வனத்துறையினர் கண்கா ணித்தனர். ஏற்கனவே அங்கு முகாமிட்டு இருக்கும் வன கால்நடை மருத்துவ குழுவினர் மூலமாக மயக்க ஊசி செலுத்தியவுடன்,

    தயாராக இருக்கும் 2 கும்கி யானைகளை கொண்டு காட்டு யானையை லாரியில் ஏற்றி வேறு வனப்பகுதிக்குள் கொண்டு செல்ல இருப்பதாக வனத்துறை யினர் தெரிவித்து உள்ளனர்.

    இதையடுத்து அட்டகாசம் செய்யும் அந்த ஒற்றை யானையை பிடிக்க கொண்டு வரப்பட்ட 2 கும்கி யானைகளுக்கு தேவையான சோளப்பயிர் உள்ளிட்ட உணவுகளை வனத்துறையினர் வழங்கி வருகின்றனர்.

    இந்த நிலையில் டிரோன் மூலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 3-வது நாளாக அந்த ஒற்றை காட்டு யானையை தொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    மேலும் பெருமுகை அடுத்த சேத்துக்காட்டு புதூர், கரும்பாறை குளத்துக்காடு, சஞ்சீவிராயன் கோவில் பகுதிகளில் இன்று வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதையடுத்து ஒற்றை யானை சுற்றி திரிவதால் பொதுமக்கள் வனப்பகுதி வழியாகவும், அதையொட்டிய பகுதிகளில் செல்லும் போது எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் கேட்டு கொண்டுள்ளனர்.

    • கடம்பூர் அடுத்த தட்டப் பள்ளம் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.
    • ஆக்ரோஷத்துடன் பின் தொடர்ந்து அவர்களை ஒற்ைற யானை விரட்டியது.

    சத்தியமங்கலம், 

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் குன்றி மலைப்பகுதியை சேர்ந்தவர் பொம்மேகவுடர் (55) விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் சித்துமரி (65) கூலி தொழிலாளி.

    நேற்று மதியம் பொம்மேகவுடர் மாக்கம்பாளையத்தில் மளிகை பொருட்களை வாங்கி கொண்டு நண்பர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்றார்.

    இதேபோல் குன்றி மலைப்பகுதியில் இருந்து சித்துமரி வேறு ஒரு மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து கொண்டு மாக்கம்பா–ளையம் நோக்கி வந்தார்.

    அப்போது அவர்கள் கடம்பூர் அடுத்த தட்டப் பள்ளம் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் வனப்பகுதி யில் இருந்து வெளியேறிய ஒரு ஒற்றை யானை திடீரென சாலைக்கு வந்தது.

    யானையை பார்த்ததும் மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேரும் அதிர்ச்சியடைந்து மோட்டார் சைக்கிளை கீழே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர்.

    இதில் ஆக்ரோஷத்துடன் பின் தொடர்ந்து அவர்களை ஒற்றை யானை விரட்டியது. ஒரு கட்டத்தில் பொம்மேகவுடர், சித்துமரி ஆகியோரை யானை துதிக்கையால் தூக்கி வீசி காலால் மிதித்து அடித்து கொன்றது.

    மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    இதுபற்றி தெரிய வந்ததும் கடம்பூர் போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து யானை தாக்கி இறந்த 2 பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிேசாதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர்க ளது உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படை க்கப்படுகிறது.

    இதனால் பலியானவர்களின் உறவினர்கள் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் அதிக அளவில் குவிந்துள்ளனர்.

    மேலும் யானை தாக்கிய பலியானவர்களின் குடும்பத்துக்கு வனத்துறை சார்பில் தலா ரூ.50 ஆயிரம் நிதி உதவியும் வழங்கப்படுகிறது.

    இதற்கிடையே 2 பேரை அடித்து கொன்ற ஒற்றை யானையை கண்காணித்து விரட்ட கடம்பூர் வனச்சரகர் இந்துமதி தலைமையில் வனத்துறையினர் குழு அமைத்துள்ளனர். அவர்கள் யானையின் நடமாட்டத்தை கண்டறிந்து வனப்பகுதி க்குள் விரட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    மேலும் ஒற்றை யானை நடமாட்டம் இருப்பதால் மாக்கம்பாளையம் சுற்று வட்டார பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் கேட்டு கொண்டுள்ளனர்.

    • இன்று 3-வது நாளாக ஒற்றை யானையை விரட்டும் பணியில் கும்கி யானைகள் ஈடுபட்டு உள்ளன.
    • கும்கி யானைகள் நடமாட்டம் இருந்தால் காட்டு யானைகள் அடர்ந்த வனப்பகுதிக்கு சென்று விடும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்கு கள் வசித்து வருகின்றன.

    வனவிலங்குகள் உணவு, தண்ணீர் தேடி விவசாய நிலத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது.

    அதேபோல இந்த ஒற்றையானை ஆசனூர் தேசிய நெடுஞ்சாலையிலும் முகாமிட்டு வாகன ஓட்டிகளை துரத்துகிறது.

    இதனால் அச்சமடைந்த விவசாயிகள், வாகன ஓட்டிகள் அட்டகாசம் செய்யும் ஒற்றையானை விரட்ட வேண்டும் என வனத்துறையினரிடம் முறையிட்டனர்.

    இதையடுத்து பொள்ளாச்சி டாப்சிலிப்பில் இருந்து சின்னதம்பி, ராமு ஆகிய 2 கும்கி யானைகள் நேற்று முன்தினம் வரவழைக்கப்பட்டு ஆசனூரில் தங்க வைக்கப்பட்டுள்ளது.

    நேற்று மதியம் யானைகள் அங்குள்ள ஓடைகளுக்கு அழைத்து செல்லப்பட்டு குளிக்க வைத்தனர்.

    பின்னர் மாலை 4 மணியளவில் 2 கும்கி யானைகளையும் ஒற்றை காட்டு யானை நடமாட்டம் உள்ள அரேபாளையம், ஒங்கல்வாடி கிராமம் மற்றும் வனப்பகுதி சாலையில் அழைத்து சென்றனர்.

    கும்கி யானைகள் நடமாட்டம் இருந்தால் காட்டு யானைகள் அடர்ந்த வனப்பகுதிக்கு சென்று விடும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    இந்நிலையில் இன்று 3-வது நாளாக ஒற்றை யானையை விரட்டும் பணியில் கும்கி யானைகள் ஈடுபட்டு உள்ளன.

    காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ள கிராமப்பகுதியில் இந்த 2 கும்கி யானைகளையும் வனத்துறையினர் அழைத்து சென்று காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

    ×