search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒருங்கிணைந்த மருத்துவ முகாம்"

    • மாற்றுத்திறனாளி சிறார்களுக்கான கல்வி மற்றும் சேர்க்கை நடைபெறும்.
    • தனியார் துறை வேலைவாய்ப்பு மற்றும் தொழில் திறனை மேம்படுத்த பயிற்சி வழங்கப்படும்.

    வீரபாண்டி :

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வட்டாரஅலுவலகத்தில் இன்று முதல் 24-9-2022 (சனிக்கிழமை) வரை மாற்றுத்திறனாளிக்கான அனைத்து நலத்திட்டங்களுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

    இதில் மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல்.மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த(UDID CARD) அடையாள அட்டை ஆன்லைனில் பதிவு செய்தல், 10வயத்திற்கு மேற்பட்ட அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கு நலவாரியத்தில் பதிவு செய்தல், இளம் மாற்றுத்திறனாளி சிறார்களுக்கான கல்வி மற்றும் சேர்க்கை நடைபெறும்.

    தனியார் துறை வேலைவாய்ப்பு மற்றும் தொழில் திறனை மேம்படுத்த பயிற்சி வழங்கப்படும்.வருவாய்துறை மற்றும் மாற்றுத்திறனாளிக்கான மாதந்திர உதவி தொகை , மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் ,ஆவின் பாலகம் அமைத்தல் , மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு பள்ளிகள் மற்றும் இல்லங்கள், மாற்றுத்திறனாளிக்கான நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவி மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் அந்தந்த வட்டாரத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் நலஅலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ×