search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏவி ராஜு"

    • என்னைப்பற்றி நீங்கள் கூறிய அவதூறு கருத்துக்கள் எனக்கு மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.
    • தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களில் விளம்பரம் மூலமாகவும், டி.வி., யூடியூப் மற்றும் சமூக ஊடகங்கள், சமூக வலைதளங்களின் மூலம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட சேலம் மாவட்ட அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஏ.வி. ராஜு நடிகை திரிஷா பற்றி அவதூறு கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

    இந்த விவகாரம் 2 நாட்களாக பெரும் சர்ச்சையாக வெடித்தது. குஷ்பு, சேரன், காயத்ரி ரகுராம் உள்பட பல திரை உலக பிரமுகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    திரிஷாவும், ராஜுவுக்கு கண்டன கருத்துக்களை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

    இந்நிலையில் நடிகை திரிஷா சார்பில் ஏ.வி. ராஜுக்கு வழக்கறிஞர்கள் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-

    என்னைப்பற்றி நீங்கள் கூறிய அவதூறு கருத்துக்கள் எனக்கு மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.

    நீங்கள் என் மீது கூறப்பட்ட கருத்துக்களுக்கு 24 மணி நேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். அதை தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களில் விளம்பரம் மூலமாகவும், டி.வி., யூடியூப் மற்றும் சமூக ஊடகங்கள், சமூக வலைதளங்களின் மூலம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

    தவறினால் உங்கள் மீது கிரிமினல் மற்றும் சிவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

    • அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று விருப்ப மனு வழங்கும் பணியில் நிர்வாகிகள் ஈடுபட்டனர்.
    • நடிகைகள், பெண்மையை இழிவுப்படுத்தி பேசக்கூடாது.

    சென்னை:

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று விருப்ப மனு வழங்கும் பணியில் நிர்வாகிகள் ஈடுபட்டனர்.

    அப்போது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் அதிமுக முன்னாள் நிர்வாகி சர்ச்சை பேச்சு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது:

    * ஏ.வி.ராஜு மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    * நடிகைகள், பெண்மையை இழிவுப்படுத்தி பேசக்கூடாது.

    * ஏ.வி.ராஜுவின் பேச்சை நிச்சயமாக ஏற்க முடியாது என்று கூறினார்.

    ×