search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏற்காட்டில் மழை"

    • குளிரை தாங்க முடியாமல், குழந்தைகள், வயதானவர்கள், சுற்றுலா பயணிகள் சிரமப்படுகின்றனர்.
    • பனி மூட்டம் காரணமாக அவ்வப்போது வானில் இருந்து மேக கூட்டங்கள் ஏற்காடு மலையில் படர்ந்து வருவது கண்கொள்ளா காட்சியாக உள்ளது.

    ஏற்காடு:

    சுற்றுலா தலங்களில் பிரசித்தி பெற்ற ஏற்காட்டில் வானுயர்ந்த மரங்கள், காபி செடிகள், அரியவகை தாவரங்கள், உள்ளன. இங்கு கிளியூர் நீர்வீழ்ச்சி, பூங்கா, ஏரி என பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. இதை காண தினமும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதையொட்டி ஏற்காட்டில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் 2 மணிக்கு பெய்ய தொடங்கிய சாரல் மழை நள்ளிரவு 1.30 மணி வரை நீடித்தது. இதனால் தாழ்வான இடங்களில் குளம்போல் மழை தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    இதனிடையே குளிர்ந்த காற்றும் வீசி வருகிறது. இரவில் நடுங்க வைக்கும் அளவுக்கு குளிர் நிலவுகிறது. காலையில் சூரிய வெளிச்சம் நன்கு பரவிய பின்னரே பொதுமக்களால் வெளியே நடமாட முடிகிறது.

    குளிரை தாங்க முடியாமல், குழந்தைகள், வயதானவர்கள், சுற்றுலா பயணிகள் சிரமப்படுகின்றனர். மேலும் தண்ணீர் மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால், பருகுவதற்கும், குளிப்பதற்கும் வெந்நீரையே பயன்படுத்துகின்றனர்.

    தினமும் காலை 11 மணி வரை பனி மூட்டம் காணப்படுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பனி மூட்டதால், மலை பகுதிகளில் உள்ள சாலைகள் தெளிவாக காண முடியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சாலையில் மெல்ல ஓட்டிச் செல்கின்றனர்.

    பனி மூட்டம் காரணமாக அவ்வப்போது வானில் இருந்து மேக கூட்டங்கள் ஏற்காடு மலையில் படர்ந்து வருவது கண்கொள்ளா காட்சியாக உள்ளது. வெளியூர் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வந்துள்ள சுற்றுலா பயணிகள் மேக கூட்டங்களால் நிலவிய குளுகுளு சூழலை ரசித்தவாறு சுற்றுலா தலங்களை சுற்றி பார்க்கின்றனர். இந்த குளுகுளு சீசனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவில் தொடர் மழை பெய்தது.
    • இன்று விடியற்காலையில் இருந்து மாநகர பகுதிகளில் சாரல் மழை பெய்தவாறு இருந்தது. இதனால் குளிர்ச்சியான சீதோஷணம் நிலவுகிறது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவில் தொடர் மழை பெய்தது. இன்று விடியற்காலையில் இருந்து மாநகர பகுதிகளில் சாரல் மழை பெய்தவாறு இருந்தது. இதனால் குளிர்ச்சியான சீதோஷணம் நிலவுகிறது.

    ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இத னால் குளிர்ச்சியான சீதோஷணம் நிலவி வருகிறது.

    இந்நிலையில், நேற்று இரவு முதல் ஏற்காடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கன மழை கொட்டித் தீர்த்தது. விடிய விடிய பெய்த மழை, விடிந்த பிறகும் விடாமல் சாரல் மழையாக பெய்து வருகிறது.

    மேலும் பனிமூட்டத் துடன் மழை பெய்து வருவதால் ஏற்காடு பகுதியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டுள்ளது.

    பொதுவாக ஏற்காடு சுற்றுவட்டார பகுதிகளில் நவம்பர், டிசம்பர் மாதங் களில் பனியின் தாக்கம் அதிகமாக காணப்படும். அப்போது குளிர் வாட்டி வதைக்கும். ஆனால் தற்போது அதிக மழை பொழிவு, பனி மூட்டம் காரணமாக குளிர் அதிகள வில் காணப்படுகிறது. இதனால் மக்கள் ஜெர்கின், ஸ்வெட்டர் மற்றும் குல்லா அணிந்தும், குடை பிடித்தபடியும் நடமாடினர்.

    ஏற்காடு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மலைகிராம மக்கள் காபி விவசாயத்தை நம்பியுள்ளனர். தற்போது பெய்து வரும் மழையால் காபி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே ஏற்காட்டில் பெய்து வரும் மழையால், மலை பாதை யில் உள்ள நீரூற்றுகளில் தண்ணீர் கொட்ட தொடங்கி உள்ளது. இதனை ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

    மாவட்டத்தில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்): ஏற்காடு-3.88, சேலம்-2.8, ஓமலூர்-1.6, எடப்பாடி-1, காடையாம்பட்டி-0.5 என மொதத்தம் 9.7 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    ×