search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Yercaud rain"

    • குளிரை தாங்க முடியாமல், குழந்தைகள், வயதானவர்கள், சுற்றுலா பயணிகள் சிரமப்படுகின்றனர்.
    • பனி மூட்டம் காரணமாக அவ்வப்போது வானில் இருந்து மேக கூட்டங்கள் ஏற்காடு மலையில் படர்ந்து வருவது கண்கொள்ளா காட்சியாக உள்ளது.

    ஏற்காடு:

    சுற்றுலா தலங்களில் பிரசித்தி பெற்ற ஏற்காட்டில் வானுயர்ந்த மரங்கள், காபி செடிகள், அரியவகை தாவரங்கள், உள்ளன. இங்கு கிளியூர் நீர்வீழ்ச்சி, பூங்கா, ஏரி என பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. இதை காண தினமும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதையொட்டி ஏற்காட்டில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் 2 மணிக்கு பெய்ய தொடங்கிய சாரல் மழை நள்ளிரவு 1.30 மணி வரை நீடித்தது. இதனால் தாழ்வான இடங்களில் குளம்போல் மழை தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    இதனிடையே குளிர்ந்த காற்றும் வீசி வருகிறது. இரவில் நடுங்க வைக்கும் அளவுக்கு குளிர் நிலவுகிறது. காலையில் சூரிய வெளிச்சம் நன்கு பரவிய பின்னரே பொதுமக்களால் வெளியே நடமாட முடிகிறது.

    குளிரை தாங்க முடியாமல், குழந்தைகள், வயதானவர்கள், சுற்றுலா பயணிகள் சிரமப்படுகின்றனர். மேலும் தண்ணீர் மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால், பருகுவதற்கும், குளிப்பதற்கும் வெந்நீரையே பயன்படுத்துகின்றனர்.

    தினமும் காலை 11 மணி வரை பனி மூட்டம் காணப்படுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பனி மூட்டதால், மலை பகுதிகளில் உள்ள சாலைகள் தெளிவாக காண முடியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சாலையில் மெல்ல ஓட்டிச் செல்கின்றனர்.

    பனி மூட்டம் காரணமாக அவ்வப்போது வானில் இருந்து மேக கூட்டங்கள் ஏற்காடு மலையில் படர்ந்து வருவது கண்கொள்ளா காட்சியாக உள்ளது. வெளியூர் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வந்துள்ள சுற்றுலா பயணிகள் மேக கூட்டங்களால் நிலவிய குளுகுளு சூழலை ரசித்தவாறு சுற்றுலா தலங்களை சுற்றி பார்க்கின்றனர். இந்த குளுகுளு சீசனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஏற்காடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சில தினங்களாக நல்ல மழை பெய்து வருவதால் கடுமையான குளிர் வாட்டி வதைக்கிறது. #Rain

    ஏற்காடு:

    ஏற்காடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சில தினங்களாக நல்ல மழை பெய்து வருவதால் கடுமையான குளிர் வாட்டி வதைக்கிறது.

    இரவு நேரங்களில் கன மழையும், பகல் நேரங்களில் சாரல் மழையும் பெய்துவருவதால் கடுமையான குளிர் வாட்டி வதைக்கிறது. மாலை 6 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே வரமுடிபியாத அளவிற்கு குளிர் நிலவுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    ஏற்காட்டின் முக்கிய விவசாயமான காபி தொழில் இந்த மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் காபி செடிகளுக்கு மருந்து அடிப்பது வழக்கம், அப்படி அடிக்கப்பட்ட மருந்துகள் மழை வராமல் இருந்தால் தான் மண்ணில் இறங்கி காபி செடிகளுக்கு ஏறும்.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் மருந்து மண்ணில் நிற்பதில்லை. இதனால் காபி செடிகளுக்கு மருந்து ஏறாத நிலை உள்ளது. மேலும் அதிகமாக மழை பெய்வதால் காபி செடிகளில் ஒருவிதமான ஒட்டுண்ணிகள் வளர ஆரம்பித்து காபியின் மகசூல் குறைய வாய்ப்புள்ளது.

    இதற்கிடையே இன்று காலை முதல் சாரல் மழை பெய்து வருவதால் பள்ளி கல்லூரி செல்லும் குழந்தைகள் பெரிதும் சிரமத்திற்குள்ளானார். பனி மூட்டம் நிலவுவதால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி மெதுவாக செல்கின்றன.

    ×