search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எறிபந்து"

    • மாநில அளவிலான எறிபந்து போட்டிக்கு அரசு மகளிர் பள்ளி தேர்வு
    • தேர்வு செய்யப்பட்ட மாணவிகளையும், உடற்கல்வி ஆசிரியரையும், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் வெகுவாக பாராட்டினர்

    கரூர்,

    தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பாக வருவாய் மாவட்ட அளவிலான எறிபந்து போட்டிகள் கடந்த செப்டம்பர் 13ம்தேதி அன்று நடைபெற்றது. இதில், 14, 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட ஐந்து குறுவட்ட அளவில் அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இந்த போட்டிகளில் கரூர் வாங்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு முதலிடம் பெற்றனர். இந்த பள்ளி மாணவிகள் மாநில அளவிலான எறிபந்து போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள னர். தேர்வு செய்யப்பட்ட மாணவிகளையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியரையும் பள்ளி தலைமை யாசிரியர் ஷண்முகவடிவு உட்பட அனைத்து ஆசிரி யர்களும், பள்ளி பணியாளர்களும், சக மாணவி குறுவட்டத்தை சேர்ந்தகளும் பாராட்டினர்.

    • வருகிற 16-ந் தேதி நடக்கிறது
    • வயது வரம்பு கிடையாது

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை மாவட்ட அளவிலான சீனியர் எறிபந்து வீரர்களுக்கான தேர்வு நடைபெறும் என மாவட்ட எறிபந்து சங்கம் அறிவித்துள்ளது. 21-வது மாநில எறிபந்து சாம்பியன்ஷிப் போட்டி 28-ந் தேதி முதல் அக்டோபர் 1-ந் தேதி வரை கோயம்புத்தூரில் நடைபெறுகிறது.

    இந்த போட்டியில் கலந்துகொள்ள திருவண்ணாமலை மாவட்ட அணிக்கான வீரர்கள் தேர்வு வருகிற 16 -ந் தேதி மாலை 3.30 மணிக்கு திருவண்ணாமலை தியாகி அண்ணாமலைபிள்ளை அரசு பள்ளியில் நடைபெற உள்ளது.

    இதில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கு வயது வரம்பு கிடையாது. வீரர்கள் தேர்வில் கலந்துகொள்ள உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் ஆதார் அடையாள அட்டையை எடுத்து வரவேண்டும் என மாவட்ட எறிபந்து சங்க கவுரவ தலைவர் டாக்டர் அரவிந்குமார், தலைவர் தர்ஷன், செயலாளர் சுரேஷ்குமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    ×