search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Handball"

    • மாநில அளவிலான எறிபந்து போட்டிக்கு அரசு மகளிர் பள்ளி தேர்வு
    • தேர்வு செய்யப்பட்ட மாணவிகளையும், உடற்கல்வி ஆசிரியரையும், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் வெகுவாக பாராட்டினர்

    கரூர்,

    தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பாக வருவாய் மாவட்ட அளவிலான எறிபந்து போட்டிகள் கடந்த செப்டம்பர் 13ம்தேதி அன்று நடைபெற்றது. இதில், 14, 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட ஐந்து குறுவட்ட அளவில் அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இந்த போட்டிகளில் கரூர் வாங்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு முதலிடம் பெற்றனர். இந்த பள்ளி மாணவிகள் மாநில அளவிலான எறிபந்து போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள னர். தேர்வு செய்யப்பட்ட மாணவிகளையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியரையும் பள்ளி தலைமை யாசிரியர் ஷண்முகவடிவு உட்பட அனைத்து ஆசிரி யர்களும், பள்ளி பணியாளர்களும், சக மாணவி குறுவட்டத்தை சேர்ந்தகளும் பாராட்டினர்.

    • முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டிகள் சென்னையில் கடந்த 1-ந்தேதி தொடங்கியது.
    • சேலம் மாவட்ட பள்ளி பிரிவினை சார்ந்த மாண விகள் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.

    சேலம்:

    முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டிகள் சென்னையில் கடந்த 1-ந்தேதி தொடங்கியது. வருகிற 25-ந்தேதி வரை போட்டிகள் நடைபெறு கிறது. இதில் ஏற்கனவே, சேலம் மாவட்டத்தின் சார்பில் கலந்து கொண்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் சுருள்வாள் வீச்சுப் பிரிவில் வெள்ளி மற்றும் வெண் கலப் பதக்கமும், அலங்கார வீச்சுப் பிரிவில் வெள்ளி பதக்கமும் பெற்றுள்ளனர்.

    இந்த நிலையில் கையுந்து விளையாட்டு போட்டியில் சேலம் மாவட்ட பள்ளி பிரிவினை சார்ந்த மாண விகள் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர். மாவட்ட அளவில் பள்ளி பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவிகள் மாநில அள விலான போட்டியில் வெற்றிபெற்று ரொக்கப் பரிசு ரூ.6 லட்சம் பெற்றுள்ளனர்.

    கையுந்து போட்டியில் வெற்றி பெற்ற அபிநயா, யாமினி, நிஷித்திரா, ரஞ் சினி, கனிஷ்கா, லாவண்யா ஸ்ரீ, செல்வி, மோனிகா, காயத்ரி, ஜுவிகா, கிருத்திகா, எம்.மோனிகா ஆகிய மாணவிகள் மாவட்ட கலெக்டர் கார்மேகத்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களுக்கு கலெக்டர் கார்மேகம் பாராட்டு தெரிவித்தார்.

    அப்போது மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன், மாவட்ட கையுந்துப்பந்து சங்க செயலாளர் சண்முகவேல், கையுந்துப்பந்து சங்கத்தலை வர் ராஜ்குமார், சங்க தலைமை புரவலர் தமிழர சன் ஆகியோர் உடனிருந்த னர்.

    ×