search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்.பில்."

    • 2 ஆயிரத்து 999 விண்ணப்பங்கள் தகுதியானவையாக கண்டறியப்பட்டு உள்ளது.
    • கோவை, ஊட்டி, ஈரோடு, திருப்பூர், பொள்ளாச்சி ஆகிய 5 இடங்களில் நுழைவுத்தேர்வு நடைபெறுகிறது.

    திருப்பூர் :

    பாரதியார் பல்கலைக்கழக துறைகள் மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளில் ஆராய்ச்சி பட்டம் (பி.எச்.டி.) மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டம் எம்.பில்) சேர்க்கைக்கான பொது நுழைவுத்தேர்வு -2023 நாளை 11-ம்தேதி நடக்கிறது. 51 பாடங்களில் நடைபெறவுள்ள இந்த நுழைவுத்தேர்விற்கு 4 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் 2 ஆயிரத்து 999 விண்ணப்பங்கள் தகுதியானவையாக கண்டறியப்பட்டு உள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் தேர்விற்கான நுழைவு ச்சீட்டினை பாரதியார் பல்கலைக்கழக இணையப்பக்கத்தில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    கோவை, ஊட்டி, ஈரோடு, திருப்பூர், பொள்ளாச்சி ஆகிய 5 இடங்களில் நுழைவுத்தேர்வு நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் பிஷப் அப்பாசாமி கல்லூரி, ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி ஆகிய 3 கல்லூரிகளிலும், நீலகிரி மாவட்டத்தில் அரசு கலைக்கல்லூரி, ஈரோடு மாவட்டத்தில் வேளாளர் மகளிர் கலை கல்லூரி, திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரி மற்றும் பொள்ளாச்சியில் என்.ஜி.எம்.கல்லூரி ஆகிய 7 கல்லூரிகளில் தேர்வு நடக்கிறது.

    தேர்வு காலை 11மணிக்கு துவங்கி மதியம் 12.30மணிக்கு நிறை வடையும். தேர்வாளர்கள் கடைபிடிக்க ேவண்டிய நெறிமுறைகள் தேர்வு நுழைவுச்சீட்டில் கொடுக்கப்பட்டு உள்ளது. நுழைவுதேர்விற்கான பணிகளை பொது நுழைவுத்தேர்வு ஒருங்கிணைப்பாளரும், தாவரவியல் துறைத்தலை வருமான பரிமேலழகன் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர். 

    ×