search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்.பி. குற்றச்சாட்டு"

    • கொடிக்கம்ப பிரச்சினையில் பா.ஜ.க. விளம்பர அரசியல் செய்கிறது.
    • மாணிக்கம் தாகூர் எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.

    விருதுநகர்

    பிரதமர் மோடியும். அமித்ஷாவும் அதானியின் நலனுக்காகவே செயல்பட்டு வருகிறார்கள் என மாணிக்கம்தா கூர் எம்.பி.குற்றம் சாட்டினார்.

    விருதுநகரில் மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப் போது அவர் கூறியதாவது:-

    பிரதமர்மோடியும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும் அதானியின் நலனுக்காகவே செயல்பட்டு வருகிறார்கள், யாரெல்லாம் பிரதமர் மோடிக்கும் அதா னிக்குமான தொடர்பு பற்றி பேசுகிறார்களோ அவர்க ளது செல்போன்கள் ஒட்டு கேட்கப்படுகிறது. இது தவறான நடைமுறையாகும், பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலையின் வீட்டு முன்பு இருந்த கொடி அகற்றப் பட்டதை தொடர்ந்து தமிழகம் முழுவ தும் கொடி கம்பம் நடுவதற்கு பா.ஜனதா ஏற்பாடு செய்துள்ளது.

    எனவே போலீசார் கொடிக்கம்பம் நடுவதாக பிரச்சினை ஏற்படுத்தும் பா.ஜனதா வினர் மீது நடவடிக்கை எடுக்க கடும் வேண்டும். 100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ.2500 கோடி ஊதிய நிலுவை வர வேண்டிய நிலையில் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் பா.ஜனதா மாநில தலைமை கொடிக்கம்பம் நடும் பிரச்சினையை பெரிதாக்குவது விளம்பர அர சியலாகும்.

    தேசிய அளவில் சாதி வேறுபாடு ஒரு பிரச்சினையாகவே உருவாகியுள்ளது. எனவே தமிழகத்தில் பட்டியலின மக்கள் தாக்கப்படுவது குறித்து சமூக நீதிக் காக செயல்படும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சிவஞானபுரம் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ண மூர்த்தி, மாவட்ட காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் சிவகுருநாதன் உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர். தொடர்ந்து ரோசல்பட்டி கிராமத்தில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை சந்தித்து அவர்களது குறைகளை மாணிக்கம் தாகூர் எம்.பி. கேட்டறிந்தார்.

    இதில் பஞ்சாயத்து தலைவர் சிவஞானபுரம், கிருஷ்ணமூர்த்தி, ரோசல்பட்டி தமிழரசி ஜெயமுருகன் வட்டார வளர்ச்சி அதிகாரி கற்பகவள்ளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    3 பேருக்கு மருத்துவ சிகிச்சை நிதி உதவி

    விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் பரிந்துரையின் பேரில் விருதுநகரை சேர்ந்த புஷ்பம் சதாசிவம், மதுரையை சேர்ந்த சஹானா பாஸ்கர், திருமங்கலத்தை சேர்ந்த உமா மகேஸ்வரி ஆகிய 3 பேருக்கும் புற்றுநோய் சிகிச்சைக்காக பிரதமர்மோடி நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 3 லட்சம் என மொத்தம் ரூ. 9 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. நிதிஉதவி பெற்ற குடும்பத்தினர் மாணிக்கம் தாகூர் எம்.பி.க்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்தனர்.

    • மீனவர்கள் வாழ்வாதார பிரச்சினைக்கு மத்திய அரசு தீர்வு காணவில்லை என நவாஸ்கனி எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.
    • கடந்த 8 ஆண்டுகளில் அந்த பன்முக தன்மைக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் எம்.பி.யும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத்தலைவருமான நவாஸ்கனி பேசியதாவது:-

    பா.ஜனதா ஆட்சி நடைபெறாத தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் கவர்னர்களின் மூலம் மத்திய அரசு ஒருவித அழுத்தத்தை மாநில அரசுகளுக்கு கொடுக்க முயற்சிக்கிறது. இது ஜனநாயகத்திற்கு எதிரானது.

    இதனை கருத்தில் கொண்டு ஜனாதிபதி தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களின் கவர்னர்களுக்கு வலியுறுத்தல்களை வழங்க வேண்டும். நாம் காலம் காலமாக வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடாக நம்முடைய நாட்டை உலக அரங்கில் உயர்த்தி வைத்துள்ளோம்.

    ஆனால் கடந்த 8 ஆண்டுகளில் அந்த பன்முக தன்மைக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. அந்த அளவிற்கு மத்திய அரசு 'ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே மதம்' என்று பன்முகத்தன்மைக்கு எதிரான மிகப்பெரிய விவாதத்தை கையில் எடுத்துக் கொண்டிருக்கிறது.

    பன்முகத்தன்மை உள்ள இறையாண்மை மிக்கது நம்முடைய தேசம். இது சுதந்திரநாடு ஜனநாயக நாடு. இங்கு மக்கள்தான் எஜமானர்கள் அவர்கள் மீது எதையும் எவரும் திணிக்கவோ, வற்புறுத்தவோ முடியாது.

    எங்களுக்கு ஒன்றை வேண்டாம் என்று கூறும்போது, அதனை திணிப்பதற்கு எவருக்கும் உரிமை இல்லை. அதுதான் சுதந்திர தேசத்தின் அடிப்படை உரிமை.

    ஒருவர் இந்த மொழியில் தான் பேசவேண்டும், இந்த உணவைத்தான் உண்ண வேண்டும், இந்த உடைதான் உடுத்த வேண்டும் என்று திணிப்பது சுதந்திரத்திற்கும் ஜனநாயகத்திற்கும் ஆபத்து என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

    உலக நாடுகளுக்கு மத்தியில் நம்முடைய நாடு பெருமிதத்தோடு உயர்ந்து நிற்பது நமக்கு மிகப்பெரிய மகிழ்ச்சிதான். ஆனால் அண்டையில் இருக்கும் நம்மை விட மிக மிக சிறிய நாடு இலங்கையிடம் இருந்து நம்முடைய மீனவர்களை காப்பதற்கு இன்னாள் வரை ஒரு நிரந்தர தீர்வை காண முடியாத நிலையில் நாம் இருக்கின்றோம் என்ற உண்மையையும் இந்த அரசு ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். பலமுறை இதே அவையில் பேசியிருக்கிறேன். தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறேன். எங்களுடைய பகுதிகளின் மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையி னரால் தாக்கப்பட்டு வருகி றார்கள். அவர்களின் படகுகள் பறிக்கப்பட்டு, வாழ்வாதாரம் இழந்து நிற்கும் சூழலுக்கு தள்ளப்படு கிறார்கள். இன்று நீங்கள் எங்களுக்கு பதில் உரைக்க மறுத்தாலும் இன்னும் 1½ ஆண்டு காலத்தில் மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும். தொடர்ந்து 2முறை உங்களுக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்கிய மக்களை மீண்டும் ஒருமுறை நீங்கள் சந்திக்க வேண்டும். அப்போது அவர்கள் உங்களுக்கு தகுந்த பதிலை வழங்குவார்கள்.

    வார்த்தையில் மட்டுமல்ல செயலிலும் உங்களுடைய வளர்ச்சியை காட்டுங்கள் என்பதை வலியுறுத்த கடமைப்பட்டிருக்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×