search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என்.எஸ்.எஸ். முகாம்"

    • முகாமில் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவ மாணவிகள் செய்த சேவைகள் குறித்து பாராட்டி பேசினார்.
    • தி.மு.க. மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக வென்றிலிங்கபுரம், தட்டான்குளம், ஈச்சந்தா ஆகிய கிராமங்களில் 7-நாள் சிறப்பு முகாம் நடந்தது. இதில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவ மாணவிகள் செய்த சேவைகள் குறித்து பாராட்டி பேசினார்.

    முன்னதாக கல்லூரி முதல்வர் அப்துல் காதிர், மாணவ-மாணவிகள் பங்கேற்ற பல்வேறு நிகழ்ச்சிகள் குறித்து பேசினார்.

    இதில் தி.மு.க. மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் குமாரி செல்வி, மேனகா, பேராசிரியர் கணபதி, வென்றிலிங்கபுரம் ஊராட்சி தலைவி சுமதி, தொழிலதிபர் கனகவேல் மற்றும் பெஞ்சமின் நிர்மல் முத்துக்குமார், கணேசன் உள்ளிட்ட பேராசிரியர்களும், மாணவ-மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு பேரணி ,கோவில் உழவார பணி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மரக்கன்று நடும்விழா நடைபெற்றது.
    • மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட குழு மாணவிகள் மற்றும் அலுவலர் பிரியா, துணை திட்ட அலுவலர்கள்மாலினி ,மகாலட்சுமி கலந்து கொண்டனர்.

    உடுமலை : 

    திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றிய சுற்றுவட்டார பகுதியில் ஸ்ரீ ஜிவிஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடைபெற்றது.ஜெ.என்.பாளையத்தில்குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு பேரணி ,கோவில் உழவார பணி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மரக்கன்று நடும்விழா நடைபெற்றது.

    இதில் ஜே.என் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார் ,துணைத் தலைவர் முருகானந்தம் கலந்து கொண்டனர். ஸ்ரீ ஜிவிஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட குழு மாணவிகள் மற்றும் அலுவலர் பிரியா, துணை திட்ட அலுவலர்கள்மாலினி ,மகாலட்சுமி கலந்து கொண்டனர். 

    • பரமக்குடி அருகே உள்ள நகரகுடி கிராமத்தில் கீழமுஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் என்.எஸ்.எஸ். முகாம் நடந்தது.
    • மரக்கன்று நடுதல், கபசுரகுடிநீர் வழங்குதல், பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன.

    பரமக்குடி

    பரமக்குடி அருகே உள்ள நகரகுடி கிராமத்தில் கீழமுஸ்லிம் மேல்நிலைப்பள்ளியின் என்.எஸ்.எஸ். சிறப்பு முகாம் நடந்தது. தாளாளர் ஷாஜகான் தலைமை தாங்கினார். கீழமுஸ்லிம் ஜமாத் சபை தலைவர் சாகுல்ஹமீது, செயலாளர் சாதிக்அலி, பொருளாளர் லியாக்கத்அலி கான் மற்றும் கல்விக்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் அஜ்மல்கான் வரவேற்றார். ராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, மாவட்ட கல்வி அலுவலர் ரவி, மாவட்ட தொடர்பு அலுவலர் ஜெயகாந்தன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.

    7 நாட்கள் நடந்த முகாமில் கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களை சுத்தம் செய்தல், சாலைகளை தூய்மைப்படுத்துதல், டெங்கு விழிப்புணர்வு பேரணி, நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு, யோகாசன பயிற்சி, மரக்கன்று நடுதல், கபசுரகுடிநீர் வழங்குதல், பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. முகாமிற்கான ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் இந்திரஜித் தலைமையில் ஆசிரியர் குழுவினர் செய்தனர். உதவித்தலைமை ஆசிரியர் புரோஸ்கான் நன்றி கூறினார்.

    ×