search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊழியர்்"

    • விபத்தில் சிக்கிய டாஸ்மாக் ஊழியர் பலியானார்.
    • நரிக்குடி போலீசார் வழக் குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வந்த னர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள பனை யூர் பகுதியை சேர்ந்த வர் வெங்கலமுத்து (வயது 47). இவர் நரிக்குடி ரெயில் நிலையம் அருகேயுள்ள கண்டுகொண்டான் மாணிக் கும் அரசு டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார்.

    இந்த நிலையில் இவர் கடந்த 16-ந்தேதி இரவு பணி முடிந்து சொந்த ஊரான பனையூர் கிராமத்திற்கு தனது இருசக்கர வாக னத்தில் நரிக்குடி-திருச்சுழி சாலையில் சென்று கொண் டிருந்தார். அப் போது விடத்தக்குளம் அடுத்துள்ள மேலேந்தல் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த போது நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

    இதில் வெங்கலமுத்து விற்கு முன்பக்க தலையில் பலத்த அடி விழுந்த நிலை யில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்காக போராடினார்.

    இந்த நிலையில் சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நரிக்குடி போலீசார் விபத் தில் சிக்கி படுகாயமடைந்து உயிருக்கு போராடிய வெங்கலமுத்துவை மீட்டு தனியார் வாகனம் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத் துவமனைக்கு சிகிச்சைக் காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த விபத்து குறித்து அவரது மனைவியான கெங்கம்மாள் (44) கொடுத்த புகாரின் அடிப்படையில் நரிக்குடி போலீசார் வழக் குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வந்த னர். இந்த நிலையில் தீவிர சிகிச்சையிலிருந்த வெங்கல முத்து சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

    ×