search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊராட்சி கூட்டம்"

    • கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
    • மாவட்ட ஊராட்சி கூட்டம் நடந்தது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சிகுழுவின் சாதாரண கூட்டம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. துணை தலைவர் நாகராஜ், ஊராட்சி செயலர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு கூறியதாவது:-

    ஏற்கனவே செய்த பணிகளுக்கு பில் கொடுக்காததால் மற்ற பணிகள் நடைபெறாமல் உள்ளது, நிலுவையில் உள்ள பணிகளை முடிக்கவைப்பது அதிகாரிகளின் வேலை ஆகும். நிலுவைகளில் உள்ள பணிகள் பல இடங்களில் முடிவடைந்துள்ளன.

    அரசு பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்கிறது.ஜிஎஸ்டி பிடித்தம் செய்யப்பட்ட பின்னர் தான் ஒப்பந்ததாரர்களுக்கு நிதி வழங்கபடுகிறது.அதிகாரிகளால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது.

    நிலுவையில் உள்ள பணிகளை கண்காணிப்பது எங்கள் வேலை இல்லை. ஒப்பந்ததாரர்கள் முறையாக ஜி.எஸ்.டி செலுத்தவில்லை, ஜிஎஸ்டி ரிட்டர்ன் தாக்கல் செய்யவில்லை என்றால் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.

    அதை பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை. கூட்ட தீர்மானத்தின் படி அதிகாரிகள் நடக்கவேண்டும்.முடிந்த பணிகளுக்கு உடனடியாக பணம் வழங்க வேண்டும்,தேவையற்ற காரணங்களை கூறி முடக்க கூடாது என்ற குற்றச்சாட்டுகளை வலியுறுத்தினர்.

    மாவட்ட கவுன்சிலர்கள் சக்தி, செல்வம், காந்திமதி உள்பட பலர் பேசினர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் நவ்லாக் ஊராட்சியில் சிப்காட்டில், சிப்காட் தொழில் நிறுவனத்தின் மூலம் இணைப்பு சாலை கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் அமைப்பட்ட சாலை ஆகும்.

    இந்த சாலையை கடந்து தான் மணியம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட ஐ.ஒ.பி நகர், கீழ் மணியம்பட்டு மற்றும் நவ்லாக் ஊராட்சிக்குட்பட்ட வ.ஊ.சி நகர், திருவள்ளுவர் நகர், நேதாஜி நகர் ஆகிய பகுதிகளுக்கு செல்ல முடியும். சிப்காட் தொழில் நிறுவனத்திற்கு சொந்தமான சாலைகள் மிகவும் மோசமான நிலையில் பராமரிப்பு இல்லாமல் உள்ளது.

    இச்சாலை சரியில்லாத காரணத்தால் பள்ளி மாணவர்கள், மருத்துவமனைக்கு செல்பவர்கள், அலுவலகத்திற்கு செல்பவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே சிப்காட் நிறுவனம் மூலம் இச்சாலைகளை புதுப்பித்து அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள பல பொதுத்துறை வங்கிகளில் பொது கழிப்பறை வசதி இல்லாததால் வங்கிக்கு வரும் பெண்கள் சிரமப்படுகின்றனர்.

    அதனால் வங்கிகள் உள்ள இடத்தில் பொது கழிப்பிடம் அமைத்தும், இடவசதியில்லாத இடங்களில் நடமாடும் கழிவறையாவது அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முடிவில் மாவட்ட ஊராட்சி உதவியாளர் உமாபதி நன்றி கூறினார்.

    • வார்டுகள் முழுவதும் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை வாழ முடியாத தெருக்களாகவும் உள்ளன.
    • கூட்டத்தில் 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    சிவகிரி:

    சிவகிரி அருகே தேவி பட்டணத்தில் ஊராட்சி மன்ற சாதாரண கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராமராஜ் தலைமை தாங்கினார். துணைத்த லைவர் மாட சாமி, செயலர் பொன் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில், தேவிபட்ட ணம் ஊராட்சி மன்றம் எல்லைக்குட்பட்ட 12 வார்டுகள் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட வாறுகால்கள் மற்றும் சிமெண்ட் தளம் இல்லாத பள்ளமான தெருக்களா கவும், பொது மக்கள் இயல்பு வாழ்க்கையை வாழ முடியாத தெருக்களாகவும் உள்ளன. ஆகவே 12 வார்டுகளிலும் போர்க்கால அடிப்படையில் வாறு கால்கள் மற்றும் சிமெண்ட் தளங்கள் அமைக்க வேண்டும் உட்பட 28 தீர்மா னங்கள் நிறைவேற்றப் பட்டன.

    இதில் வார்டு உறுப்பி னர்கள் ராமராஜ், ஆர்.தங்க ராஜ், அ.தங்கராஜ், கிரேஸ், முத்துலட்சுமி, கந்தம்மாள், குருசாமி, கோபால், பூங்கோதை, கனகஜோதி, முத்துமாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் சேர்மன் புல்லாணி தலைமையில் நடந்தது.
    • காவிரி கூட்டு குடிநீர் திட்ட பொறியாளருக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    கீழக்கரை 

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் சேர்மன் புல்லாணி தலைமையில் பி.டி.ஓ.க்கள் ராஜேந்திரன், கணேஷ் பாபு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் பின்வருமாறு:-

    கவுன்சிலர் பைரோஸ்கான்:- பெரியபட்டினம் சாலைகள் அனைத்தும் பழு தடைந்து உள்ளது. அதை புதுப்பித்து சாலை அமைக்க வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. நிழற்குடை அமைக்க இடத்தை சரி செய்து தர வேண்டும். பெரிய பட்டினம் சுடுகாட்டிற்கு பாதை இல்லை என பலமுறை நான் கோரிக்கை வைத்தும் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. அதேபோல் வடக்கு குடியிருப்பில் மயானம் அமைத்துத் தர வேண் டும்.

    கவுன்சிலர் கலாராணி:- தாதனேந்தல் பகுதியில் சம்பு கட்டி பயனின்றி உள்ளது. ஆனால் காவிரி கூட்டுக்குடிநீர் ஊர் மக்களுக்கு கிடைக்கவில்லை.

    பி.டி.ஓ:- காவிரி கூட்டு குடிநீர் திட்ட பொறியாளருக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    கவுன்சிலர் காங்கிரஸ் திருமுருகன்:- ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் ரேஷன் கடை கட்ட ஆலங்குளம் பகுதியில் நீதி பெற்றும் அங்குள்ள சமுதாய கட்டிடம் பாழ டைந்து உள்ளது. அதன் அருகில் தான் கட்ட வேண்டும். எனவே சமுதாய கட்டிடத்தை இடிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    பி.டி.ஓ. ராஜேந்திரன்:- உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    கவுன்சிலர் நாகநாதன்:- ரெகுநாதபுரத்தில் அரசு இடத்தில் தனியார் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி வாடகைக்கு விடுகிறார். இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மக்களைத் திரட்டி பஸ் மறியல் போராட்டம் நடத்துவோம்.

    கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு பி.டி.ஓக்கள் பதிலளித்தனர்.

    இவ்வாறு விவாதங்கள் நடைபெற்றன.

    ஊராட்சி ஒன்றிய துணை சேர்மன் சிவலிங்கம் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு நிர்வாக சீர்கேடுகள் இருப்பதாக கூறி கேள்வி கேட்டதால் கடந்த கூட்டத்தில் சேர்மன் ஒருமையில் பேசியதாக கூறி இந்த கூட்டத்தில் அவரது இருக்கையில் அமராமல் செய்தியாளர்கள் அமரும் இடத்தில் அமர்ந்திருந்தார்.

    ×