search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "panchayat meeting"

    • கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
    • மாவட்ட ஊராட்சி கூட்டம் நடந்தது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சிகுழுவின் சாதாரண கூட்டம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. துணை தலைவர் நாகராஜ், ஊராட்சி செயலர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு கூறியதாவது:-

    ஏற்கனவே செய்த பணிகளுக்கு பில் கொடுக்காததால் மற்ற பணிகள் நடைபெறாமல் உள்ளது, நிலுவையில் உள்ள பணிகளை முடிக்கவைப்பது அதிகாரிகளின் வேலை ஆகும். நிலுவைகளில் உள்ள பணிகள் பல இடங்களில் முடிவடைந்துள்ளன.

    அரசு பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்கிறது.ஜிஎஸ்டி பிடித்தம் செய்யப்பட்ட பின்னர் தான் ஒப்பந்ததாரர்களுக்கு நிதி வழங்கபடுகிறது.அதிகாரிகளால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது.

    நிலுவையில் உள்ள பணிகளை கண்காணிப்பது எங்கள் வேலை இல்லை. ஒப்பந்ததாரர்கள் முறையாக ஜி.எஸ்.டி செலுத்தவில்லை, ஜிஎஸ்டி ரிட்டர்ன் தாக்கல் செய்யவில்லை என்றால் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.

    அதை பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை. கூட்ட தீர்மானத்தின் படி அதிகாரிகள் நடக்கவேண்டும்.முடிந்த பணிகளுக்கு உடனடியாக பணம் வழங்க வேண்டும்,தேவையற்ற காரணங்களை கூறி முடக்க கூடாது என்ற குற்றச்சாட்டுகளை வலியுறுத்தினர்.

    மாவட்ட கவுன்சிலர்கள் சக்தி, செல்வம், காந்திமதி உள்பட பலர் பேசினர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் நவ்லாக் ஊராட்சியில் சிப்காட்டில், சிப்காட் தொழில் நிறுவனத்தின் மூலம் இணைப்பு சாலை கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் அமைப்பட்ட சாலை ஆகும்.

    இந்த சாலையை கடந்து தான் மணியம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட ஐ.ஒ.பி நகர், கீழ் மணியம்பட்டு மற்றும் நவ்லாக் ஊராட்சிக்குட்பட்ட வ.ஊ.சி நகர், திருவள்ளுவர் நகர், நேதாஜி நகர் ஆகிய பகுதிகளுக்கு செல்ல முடியும். சிப்காட் தொழில் நிறுவனத்திற்கு சொந்தமான சாலைகள் மிகவும் மோசமான நிலையில் பராமரிப்பு இல்லாமல் உள்ளது.

    இச்சாலை சரியில்லாத காரணத்தால் பள்ளி மாணவர்கள், மருத்துவமனைக்கு செல்பவர்கள், அலுவலகத்திற்கு செல்பவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே சிப்காட் நிறுவனம் மூலம் இச்சாலைகளை புதுப்பித்து அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள பல பொதுத்துறை வங்கிகளில் பொது கழிப்பறை வசதி இல்லாததால் வங்கிக்கு வரும் பெண்கள் சிரமப்படுகின்றனர்.

    அதனால் வங்கிகள் உள்ள இடத்தில் பொது கழிப்பிடம் அமைத்தும், இடவசதியில்லாத இடங்களில் நடமாடும் கழிவறையாவது அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முடிவில் மாவட்ட ஊராட்சி உதவியாளர் உமாபதி நன்றி கூறினார்.

    • தென்காசி மாவட்ட ஊராட்சியின் சாதாரண குழுக் கூட்டம் நடைபெற்றது.
    • மாநில நிதிக்குழு மானிய திட்டத்தின்கீழ் ரூ.1,04,07,520-க்கும் திட்டப்பணிகள் தேர்வு செய்யப்பட்டு 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட ஊராட்சியின் சாதாரண குழுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. தென்காசி மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் தமிழ்செல்வி தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி செயலர் ருக்மணி முன்னிலை வகித்தார். 15-வது மத்திய நிதிக் குழு மானியத் திட்டத்தின்கீழ் ரூ.2,03,37,000-க்கும், மாநில நிதிக்குழு மானிய திட்டத்தின்கீழ் ரூ.1,04,07,520-க்கும் திட்டப்பணிகள் தேர்வு செய்யப்பட்டு 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் உதயகிருஷ்ணன் உட்பட மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் அனைத்து வட்டாரங்களிலிருந்தும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் உதவிப்பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • நெல்லை மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் பாளை கே.டி.சி.நகரில் உள்ள அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
    • அனைத்து கிராமப்பகுதிகளிலும் உடற்பயிற்சி கூடம் அமைக்க ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் பாளை கே.டி.சி.நகரில் உள்ள அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் செல்வலெட்சுமி அமிதாப், செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கவுன்சிலர்கள் சாலமோன் டேவிட், கனகராஜ் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும் மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிராக பதாகைகள் ஏந்தியவாறு உறுப்பினர்கள் அனைவரும் கோஷங்கள் எழுப்பினர். பின்னர் இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து மாவட்ட கவுன்சிலர்கள் முன்வைத்த பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    கூட்டத்தில் மாவட்ட பகுதிகளில் நெல்லை மாவட்டத்தில் அனைத்து கிராமப்பகுதிகளிலும் உடற்பயிற்சி கூடம் அமைக்க ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி முதல்கட்டமாக 51 இடங்களில் அமைக்க ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இதன் மூலம் ஒவ்வொரு பகுதி உடற்பயிற்சி கூடத்துக்கும் ரூ.8 லட்சம் வழங்கப்பட்டு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும். இதனால் அந்த பகுதி இளைஞர்கள் அரசு வேலைவாய்ப்பில் சேர வாய்ப்புள்ளதாக அமையும்.

    மாவட்ட கவுன்சிலர்களுக்கு மத்திய அரசு சார்பில் ரூ.2 கோடியே 53 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு செய்யப்பட்டு ஒவ்வொரு கவுன்சிலர்களுக்கும் ரூ.25 லட்சம் கிடைக்கும். அதன் மூலம் தங்கள் பகுதியில் உள்ள அடிப்படை வசதிகளை நிறைவேற்றிக்கொள்ள லாம். கூட்டத்தில் சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் அமிதாப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் ராமராஜ் தலைமை தாங்கினார்.
    • மேற்கு தொடர்ச்சி மலை பழியன்பாறை அருகே உள்ள குறுக்காற்றில் மேல்புறம் பொதுமக்களுக்கான பஞ்சாயத்து குடிநீர் கிணறு அமைந்துள்ளது.

    சிவகிரி:

    சிவகிரி அருகே உள்ள தேவிபட்டணம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சாதாரண கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் ராமராஜ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மாடசாமி, செயலர் பொன் செந்தில் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கூட்டுறவு பால்வண்டி தேவிபட்டணம் பேருந்து நிலையத்தில் வாகனத்தை நிறுத்தி பால் ஏற்றுவதை தவிர்த்தும், பள்ளிக் குழந்தைகள், காளியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத இடத்தில் வாகனத்தை நிறுத்தி பால் ஏற்றிக் கொள்ள மன்றத்தின் அனுமதி, தேவிபட்டணம் ஊருக்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலை பழியன்பாறை அருகே உள்ள குறுக்காற்றில் மேல்புறம் பொதுமக்களுக்கான பஞ்சாயத்து குடிநீர் கிணறு அமைந்துள்ளது.

    மழைக்காலத்தில் குறுக்காற்றில் வெள்ளம் வரும் போது கிணற்றில் உள்ள நீரேற்று மின் மோட்டாரை இயக்க செல்ல முடியாத காரணத்தால் பழியன் பாறையின் மீது மின் மோட்டார் அறை அமைக்க தீர்மானம் உள்பட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் வார்டு உறுப்பினர்கள் மாடக்கண்ணு, ராமராஜ், ஆர்.தங்கராஜ், அ.தங்கராஜ், கிரேஸ், முத்துலட்சுமி, கந்தம்மாள், குருசாமி, கோபால், பூங்கோதை, கனகஜோதி, முத்துமாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    காஞ்சீபுரம் வடக்கு மாவட்டத்தில் 238 ஊராட்சிகளில் இன்று மாலை ஊராட்சி சபை கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்.எல்.ஏ. அறிவித்துள்ளார்.

    சென்னை:

    காஞ்சீபுரம் வடக்கு மாவட்டத்தில் 238 ஊராட்சிகளில் இன்று மாலை ஊராட்சி சபை கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்.எல்.ஏ. அறிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ‘மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்கள் மனங்களை வெல்வோம்’ என்ற மூன்று முத்தான முழக்கங்களை முன்வைத்து மக்களிடம் சென்று இன்றைய பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு, மக்கள் விரோத மாநில அரசுகளின் மிக மோசமான செயல்பாடுகளை சொல்வதன் மூலமாக பொதுமக்களின் நம்பிக்கையை பெற்றிட வேண்டும் என்று நம்முடைய தலைவர் மு.க. ஸ்டாலின் கட்டளையிட்டுள்ளார்.

    காஞ்சீபுரம் வடக்கு மாவட்டத்தில் திருப்போரூர், தாம்பரம், பல்லாவரம், ஸ்ரீபெரும்புதூர், செங்கல் பட்டு, ஆலந்தூர் பகுதி, சோழிங்கநல்லூர் பகுதி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் அடங்கிய 238 ஊராட்சிகளில் ஊராட்சி வாரியாக சபை கூட்டங்கள் இன்று முதல் நடைபெற உள்ளது.

    அந்தந்த ஒன்றியங்களுக்கு தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள தலைமை கழக பிரதிநிதிகள் இந்த ஊராட்சி சபை கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

    அதன்படி ஆதனூர், பிச்சிவாக்கம், மேவலளூர் குப்பம், வேங்கடமங்கலம், நல்லம்பாக்கம், ஊனமாஞ் சேரி கோட்டூர், செல்லம் பட்டிடை, குணகரம்பாக்கம், எயையூர், தத்தனூர், பேரீஞ்சம்பாக்கம் பகுதிகளில் இன்று கூட்டம் நடைபெறுகிறது.

    10-ந் தேதி கவுல்பஜார், கருநீலம், அஞ்சூர், குண்ண வாக்கம் ஆகிய ஊர்களில் கூட்டம் நடைபெறுகிறது.

    11-ந் தேதி புலிபாக்கம், செட்டிபுண்ணி யம், வீராபுரம் பகுதிகளிலும், அதனை தொடர்ந்து 19-ந் தேதி முதல் அடுத்த மாதம் 21, 22, 23, 24, 25, 26, 27 ஆகிய தேதிகளிலும் பல்வேறு ஊராட்சிகளில் கூட்டம் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து அடுத்த மாதம் 10-ந் தேதி வரை கூட்டம் நடைபெறுகிறது.

    இந்த கூட்டங்களில் தலைமை கழக பிரதிநிதிகளான எஸ்.ஜெகத்ரட்சகன், தா.மோ.அன்பரசன், வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ., காசிமுத்து மாணிக்கம், அசன் முகம்மது ஜின்னா பங்கேற்கிறார்கள்.

    இந்த கூட்டத்தை பொது இடத்தில் ஆடம்பரம் இன்றி ஒலிபெருக்கி மட்டும் உபயோகித்து நடத்த வேண்டும். கூட்டம் தொடங்கும் முன்பு தலைமை கழகம் தரும் துண்டு பிரசுரங்களை வீடு வீடாக சென்று வினியோகிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×