search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உபரி நீர் திட்டம்"

    • முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணையின் உபரி நீர் திட்ட பணிகளுக்கு ரூ. 565 கோடி ஒதுக்கீடு செய்து ஒரு சில பகுதிகளில் மட்டுமே திட்டத்தை தொடங்கி வைத்தார்.
    • காவிரி நதிநீர் பிரச்சனையில் கர்நாடகாவை சேர்ந்த கட்சிகள் அனைத்தும் ஒரு நிலைப்பாட்டில் உள்ளது. ஆனால் தமிழகத்தில் உள்ள கட்சிகள் தனித்தனியாக செயல்படுகிது.

    மேட்டூர்:

    மேட்டூர் சட்டமன்ற தொகுதி வாக்குச் சாவடி களப்பணியாளர்கள் கூட்டம் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன், மேட்டூர் சதாசிவம் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் நடந்தது.

    அன்புமணி ராமதாஸ்

    இந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார்.

    பின்னர் அவர் நிருபர்க ளிடம் கூறியதாவது:-

    முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணையின் உபரி நீர் திட்ட பணிகளுக்கு ரூ. 565 கோடி ஒதுக்கீடு செய்து ஒரு சில பகுதிகளில் மட்டுமே திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    மேட்டூர் அணையில் உபரியாக செல்லும் 5 டிஎம்சி தண்ணீரை எடுத்து சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளிலும் நிரப்ப வேண்டும். சேலம் மாவட்டத்தில் 1200 அடிக்கு கீழ் நிலத்தடி நீர்மட்டம் சென்று விட்டது. உபரி நீர் திட்டம் மூலம் 100 அடிக்குள் நிலத்தடி நீர்மட்டத்தை கொண்டு வர வேண்டும்.

    மேட்டூர் அணையை தூர் வாரி அணையை ஆழப்படுத்த வேண்டும் இதன் மூலம் கூடுதலாக 20 டி.எம்.சி, நீர் தேக்கி வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேட்டூர் அணையில் 20 டிஎம்சி மட்டுமே உள்ளது. கர்நாடகாவில் 64 டிஎம்சி உள்ளது. 5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் 3.5 லட்சம் ஏக்கர் மட்டுமே பயன்பெறும்.

    காவிரி நதிநீர் ஒப்பந்தப்படி இதுவரை தமிழகத்திற்கு 60 டிஎம்சி நீர் வழங்கி இருக்க வேண்டும் ஆனால் 4 டிஎம்சி நீர் மட்டுமே கர்நாடக அரசு வழங்கி உள்ளது. மேட்டூர் அணையை சுற்றியுள்ள தொழிற்சாலைகளுக்கு வழங்கும் தண்ணீரை குறைத்து குறுவை சாகுபடிக்காக கூடுதலாக நீர் திறக்க வேண்டும். மேட்டூர் அனல் மின் நிலையம் மூலம் சுற்றுப்புற சூழல் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேட்டுரை சுற்றியுள்ள ரசாயன தொழிற்சாலைகள் மழைக்காலங்களில் ரசாயன கழிவுகளை காவிரி ஆற்றில் கலந்து விடுகின்றனர்.

    கொளத்தூரில் உள்ள தோனி மடுவுத் திட்டம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தொப்பூர் பகுதியில் நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். நெடுஞ்சாலை யில் ஏற்படும் விபத்து காரணமாக ஆண்டுதோறும் நூற்றுக்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்படுகிறது. காவிரி பிரச்சனைக்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கர்நாடகா முதல்-அமைச்சரை சந்தித்து காவிரி நீரை பெற்று தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    காவிரி நதிநீர் பிரச்சனையில் கர்நாடகாவை சேர்ந்த கட்சிகள் அனைத்தும் ஒரு நிலைப்பாட்டில் உள்ளது. ஆனால் தமிழகத்தில் உள்ள கட்சிகள் தனித்தனியாக செயல்படுகிது.

    தென்பெண்ணை கழிவுகள், மைசூர் கழிவுகள், நொய்யல் ஆறு கழிவுகள் காவிரியில் கலக்கிறது இதனால் காவிரி நீர் மாசடைகிறது. தமிழகத்தில் பெயரளவுக்கு மட்டுமே 500 மது கடைகள் மூடப்பட்டது. தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மதுவை ஒழிப்பதாக தெரிவித்தார் ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை மதுவை ஒழிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. பள்ளி கல்லூரி வாசல்களில் போதை பொருட்கள் விற்பனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ .சதாசிவம், சேலம் மேற்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் ராஜசேகரன், முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்தி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தேவதாஸ், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ரேவதி ராஜசேகரன், மற்றும் மேச்சேரி ஒன்றிய செயலாளர்கள் துரைராஜ் சுதாகர் மேட்டூர் நகர செயலாளர் மதியழகன் கொளத்தூர் ஒன்றிய நிர்வாகிகள் கிளை பொறுப்பாளர்கள் என சுமார் 500-க்கு மேற்பட்ட பாமகவினர் கலந்து கொண்டனர்.

    • மேட்டூர் அணையில் இருந்து சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் காவிரி உபரி நீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் நிரப்ப வேண்டும்.
    • மேலும் 100 ஏரிகளில் நீர் நிரப்பும் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்.

    சேலம்:

    சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:-மேட்டூர் அணையில் இருந்து சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் காவிரி உபரி நீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் நிரப்ப வேண்டும். மேலும் 100 ஏரிகளில் நீர் நிரப்பும் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். உழவர்களின் அனைத்து உற்பத்தி பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம், கரும்பு டன்னுக்கு ரூ.5 ஆயிரம், மரவள்ளி கிழங்கு டன்னுக்கு ரூ.12 ஆயிரம், மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.15 ஆயிரம், மக்காச்சோளம் ரூ.3 ஆயிரம், பசுமாட்டுப்பால் லிட்டர் ரூ.50, எருமை பால் லிட்டர் ரூ.75 வழங்கிட வேண்டும்.கறிக்கோழிகள் வளர்ப்பிற்கு கிலோ ரூ.12 விலை நிர்ணயம் செய்து அரசு உத்தரவிட வேண்டும். இந்திய அரசு விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு கடன் நிவாரண ஆணையம் அமைக்க வேண்டும்.தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்காளம் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் உள்ளதை போல வருடம் தோறும் ரூ.10 ஆயிரம் உழவு மானியமாக தமிழக அரசு வழங்க வேண்டும். தென்னை, பனைகளில் இருந்து கள் இறக்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் தெரிவித்து இருந்தனர்.

    ×