search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உபபொருட்கள்"

    • தமிழக அரசு வேளாண்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது.
    • விவசாயிகள் அரசின் திட்டங்களை பயன்படுத்தி பயனடைய வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி அடுத்த வைத்தீஸ்வ ரன்கோயிலில் வேளாண் பொறியியல் துறை சார்பில் விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய வேளாண் பவர் டிரில்லர் எனும் கைடிராக்டர் வழங்கும் விழா நடந்தது.

    வேளாண் இயந்திரமய மாக்கல் திட்டத்தின் கீழ் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் ஆர்.ராஜாராம் தலைமை வகித்தார்.

    திமுக ஒன்றிய செயலாளர் பிரபாக ரன்,பேரூர் கழக செயலாளர் அன்புசெ ழியன்,மாவட்ட கவுன்சிலர் விஜயேஸ்வரன், திமுக பொறுப்பாளர்கள் தேவேந்திரன்,முருகன்,முத்துக்குமரன்,பழனிவேல் முன்னிலை வகித்தனர்.

    சீர்காழி சட்டபேரவை உறுப்பி னர் எம்.பன்னீர்செல்வம் பங்கேற்று 30 பயனாளிகளுக்கு பவர் டிரில்லரை வழங்கி, பேசும்போது தமிழக அரசு வேளாண்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது.

    வேளாண்மைக்கு தனி பட்ஜெட் அறிவித்து செயல்படுத்தி வருகிறது விவசாயிகள் அரசின் திட்டங்களை பயன்படுத்திக் பயனடைய வேண்டும் என்றார்.

    ×