search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Inputs"

    • வேளாண் இடு பொருட்களை விற்பனை செய்யும்ஆன்லைன் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
    • உழவர்களின் வருமானமும் உயர வழிவகை செய்யும்.

    ஈரோடு:

    வேளாண்மையில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக இருந்து வருகிறது. ஆனால் தற்பொழுது வேளாண்மை பல சவால்களை சந்தித்து வருகிறது.

    குறிப்பாக உழவர்களுக்கு தகுந்த நேரத்தில் பண்ணைக்கு வேண்டிய வேளாண் இடு பொருட்களை உழவர்க ளின் வீடுகளுக்கே விநியோகம் செய்வது மிக பெரிய சவாலாக உள்ளது. உழ வர்கள் சிலநேரம் தரமான இடுபொருட்களை பெற அதிக நேரம் மற்றும் செலவு செய்யவேண்டி உள்ளது.

    இதனை சரி செய்ய தமிழ்நாடு அரசின் ஒரு தொடர் முயற்சியாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை க்கழகம் உற்பத்தி செய்யும் விதைகள் மற்றும் இடுபொருட்கள் உழ வர்களின் வீடுகளுக்கே நேரடியாக ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் வகையில் வேளாண்பல் கலைக்கழகம் TNAU AgriCart என்ற வேளாண் இடு பொருட்களை விற்பனை செய்யும்ஆன்லைன் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

    மேலும் உழவர்கள் ஆன்லைன் மூலமாகவே பணம் செலுத்தும் வசதியும் இதில் உள்ளது.வேளாண் பருவங்கள் தொடங்கும் முன் வேண்டிய பயிர் ரகங்களின் விதைகள் மற்றும் வேளாண்இடு பொருட்கள் குறிப்பாக உயிரியல் கட்டுப்பாட்டுக் காரணிகள், பயிர் பூஸ்டர்கள் போன்றவைகள்ஆன்லைன் மூலம் வாங்கி பருவத்தே பயிர் செய்து உழவர்கள் பயனடையலாம்.

    அமேசான் மற்றும் பிளி ப்கார்ட் ஆன்லைன் இணைய தளத்தில் பொது மக்கள் எவ்வாறு அனைத்து பொரு ட்களையும் ஆன்லைன் மூலம் வாங்கு கிறார்களோ அதேபோல் இந்த தளத்தில் உழவர்கள் ஆன்லைன் மூலம் இடுபொருட்கள் மற்றும் விதைகளை வாங்க முடியும்.

    வேளாண்மைப் பல்கலைக் கழகம் தற்பொழுது வேளா ண்மைத் துறையுடன் இணைந்து உழவர்களி டையே நல்ல தொடர்பை ஏற்படுத்தி வருகிறது.

    இதனால் உழவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை உடனடியாக வயலில் கடைபிடிக்க வழிவகை செய்து வேளாண் உற்பத்தி யை பெருக்கி உழவர்களின் வருமானமும் உயர வழிவகை செய்யும்.

    இந்த இணையதளத்தை அனைத்து உழவர்களும் பயன்படுத்தி தமிழ்நாட்டின் வேளாண் பொருளாதாரத்தை மேலும் உயர்த்திட வேண்டும்

    இந்த தகவலை வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்தார்.

    • தமிழக அரசு வேளாண்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது.
    • விவசாயிகள் அரசின் திட்டங்களை பயன்படுத்தி பயனடைய வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி அடுத்த வைத்தீஸ்வ ரன்கோயிலில் வேளாண் பொறியியல் துறை சார்பில் விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய வேளாண் பவர் டிரில்லர் எனும் கைடிராக்டர் வழங்கும் விழா நடந்தது.

    வேளாண் இயந்திரமய மாக்கல் திட்டத்தின் கீழ் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் ஆர்.ராஜாராம் தலைமை வகித்தார்.

    திமுக ஒன்றிய செயலாளர் பிரபாக ரன்,பேரூர் கழக செயலாளர் அன்புசெ ழியன்,மாவட்ட கவுன்சிலர் விஜயேஸ்வரன், திமுக பொறுப்பாளர்கள் தேவேந்திரன்,முருகன்,முத்துக்குமரன்,பழனிவேல் முன்னிலை வகித்தனர்.

    சீர்காழி சட்டபேரவை உறுப்பி னர் எம்.பன்னீர்செல்வம் பங்கேற்று 30 பயனாளிகளுக்கு பவர் டிரில்லரை வழங்கி, பேசும்போது தமிழக அரசு வேளாண்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது.

    வேளாண்மைக்கு தனி பட்ஜெட் அறிவித்து செயல்படுத்தி வருகிறது விவசாயிகள் அரசின் திட்டங்களை பயன்படுத்திக் பயனடைய வேண்டும் என்றார்.

    • குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ரூ.2466 மதிப்பிலான ரசாயன உரங்கள் வழங்கினார்.
    • ஒரு ஏக்கருக்கு பொதுப் பிரிவினருக்கு 50 சதவீத மானியமும், தனி பிரிவினருக்கு 70 சதவீத மானியத்தில் இடுபொருட்களும் வழங்கி பேசினார்.

    பேராவூரணி:

    தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் குறுவை தொகுப்பு திட்டம்-2022 மானியத்தில் இடுபொருட்கள் வழங்கும் விழா சேதுபாவாசத்திரம் வட்டாரம் குருவிக்கரம்பையில் நடைபெற்றது. விழாவிற்கு தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் மத்திய திட்டம் ஈஸ்வர் தலைமை வகித்தார். அசோக் குமார் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) சாந்தி வரவேற்றார்.

    சேதுபாபாசத்திரம் வட்டாரத்தில் குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ரூ.2466 மதிப்பிலான ரசாயன உரங்களும், மாற்றுப்பயிர் சாகுபடி திட்டத்தில் சிறுதானிய பயிர்களான கேழ்வரகு, நிலக்கடலை, உளுந்து சாகுபடிக்கு ஒரு ஏக்கருக்கு பொதுப் பிரிவினருக்கு 50 சதவீத மானியமும், தனி பிரிவினருக்கு 70 சதவீத மானியத்தில் இடுபொருட்கள் தொகுப்பை சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமார் வழங்கி பேசினார். விடுபட்ட தகுதி உள்ள விவசாயிகள் தங்களது ஆதார் அட்டை, கணினி சிட்டா, அடங்கல் மற்றும் வங்கி பாஸ் புத்தகங்க நகலுடன் நேரடியாகவோ, உழவன் செயலிலோ அல்லது வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் வந்து பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • உழவர் சந்தையில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவுறுத்தல்படி தோட்டக்கலை துறை சார்பில் இடுபொருட்கள் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.
    • இந்த விற்பனை அரங்கில் விதை, நாற்றுக்கள், மாடி தோட்ட விதைகள், மண்புழு உரம் உள்பட பல்வேறு இடுபொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருக்கும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை நாஞ்சிக்கோ ட்டை சாலையில் உழவர் சந்தை உள்ளது. இந்த சந்தையில் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு இங்குள்ள கடைகள் அருகே உள்ள கட்டிடத்துக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து உழவர் சந்தையில் பணிகள் நடந்து வந்தன. இந்நிலையில் பணிகள் முடிவடைந்ததை முன்னிட்டு இன்று காலை உழவர் சந்தை திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

    இதனை தொடர்ந்து 55 கடைகள் இன்று செயல்பட்டன. அதில் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவைகள் விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரே நாளில் 15.8 டன் அளவுக்கு காய்கறி, பழங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது.இந்த நிலையில் உழவர் சந்தையில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் றிவுறுத்தல்படி தோட்ட க்கலை துறை சார்பில் இடுபொருட்கள் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இன்னும் சில நாட்களில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வர உள்ளது.

    இதனை தொடர்ந்து தோட்டக்கலை துறை துணை இயக்குனர் கலைச்செல்வன் உழவர் சந்தையில் ஆய்வு செய்தார். தோட்டகலை துறை சார்பில் இடுபொருட்கள் விற்பனை அரங்கு அமைய உள்ள இடத்தை பார்வையிட்டார். அப்போது அவர் கூறும்போது:-

    வேளாண் துறை அமைச்சர் அறிவுறுத்தல்படி தமிழகத்தில் தேர்ந்தெ டுக்கப்பட்ட உழவர் சந்தைகளில் தோட்ட க்கலை துறை சார்பில் இடுபொருட்கள் விற்பனை அரங்கு அமைக்கப்பட உள்ளது. அதில் தஞ்சாவூர் உழவர் சந்தையும் ஒன்றாகும். இந்த விற்பனை அரங்கில் விதை, நாற்றுக்கள், மாடி தோட்ட விதைகள், மண்புழு உரம் உள்பட பல்வேறு இடுபொருட்கள் விற்பனைக்காக வைக்க ப்பட்டு இருக்கும். விரை வில் இந்த உழவர் சந்தையில் இடுபொருட்கள் விற்பனையகம் தொட ங்கப்பட உள்ளது என்றார்.

    ×