search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடன்குடி கருப்பட்டி"

    • இந்த ஆண்டு பதநீர் உற்பத்தி மிக மிக நன்றாக இருக்கும்.
    • உடன்குடி பகுதியில் பல இடங்களில் பூமியில் உவர்ப்பு தண்ணீர் எல்லாம் சுவையாக மாறி உள்ளது.

    உடன்குடி:

    உடன்குடி என்று சொன்னாலே முதலில் நினைவுக்கு வருவது கருப்பட்டிதான். உடன்குடி கருப்பட்டி என்று ஊர் பெயரோடு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த கருப்பட்டி மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை ஆகிய 5 மாதங்கள் மட்டுமே உற்பத்தியாகும். தற்போது கருப்பட்டி உற்பத்திக்காக கற்பக தரு என்று அழைக்கப்படும் பனை மரத்தில் தினசரி ஏறி இறங்குவதற்கு இடையூறாக உள்ள சின்ன சின்ன தடைகளை நீக்குதல், பனை மரத்தில் உள்ள சில்லாட்டை, காய்ந்த ஓலைகளை அப்புறப்படுத்தி, மட்டைகளை விரித்து விடுதல், இப்படி விரித்து விட்டால் பதநீர் தரும் பாளைகள் வேகமாக வெளிவரும் என்கிறார்கள்.

    பின்பு பாளையை கயிற்றால் கட்டி, தட்டி, பக்குவப்படுத்தி பதநீர் தரும் பாளைகளாக மாற்றுவார்கள். இப்போது கருப்பட்டி உற்பத்திற்கான ஆரம்பக்கட்ட பணி தொடங்கி உள்ளது.

    இதுபற்றி இத்தொழிலில் ஈடுபட்டுள்ள ஒருவர் கூறியதாவது:-

    கருப்பட்டி உற்பத்திக்காக ஆரம்ப கட்ட பணி தொடங்கிவிட்டது. இந்த ஆண்டு பதநீர் உற்பத்தி மிக மிக நன்றாக இருக்கும். கடந்த டிசம்பர் மாதம் மழை நன்றாக பெய்தது. பல இடங்களில் மழை நீர் பல மாதங்கள் தேங்கி இருந்தது. தற்போது குறைந்துள்ளது.

    இதனால் உடன்குடி பகுதியில் பல இடங்களில் பூமியில் உவர்ப்பு தண்ணீர் எல்லாம் சுவையாக மாறி உள்ளது. அதனால் கருப்பட்டி உற்பத்தி மிக மிக அதிகமாக இருக்கும் என்று கூறினார்.

    • எப்போதுமே ஒரு வருடம் இருப்பு இருந்த பழைய கருப்பட்டிக்கு தான் தனி மவுசு உண்டு.
    • தற்போது புதிய கருப்பட்டி உற்பத்தி சீசன் இல்லை.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் உடன்குடி வட்டார பகுதியில் உற்பத்தியாகும் கருப்பட்டிக்கு ஒரு தனி சிறப்பு உண்டு. உடன்குடி கருப்பட்டி என்ற ஊர் பெயரோடு தான் விற்பனையாகும்.

    எப்போதுமே ஒரு வருடம் இருப்பு இருந்த பழைய கருப்பட்டிக்கு தான் தனி மவுசு உண்டு. பழைய கருப்பட்டி ஒரு கிலோ ரூ.360 என்று விற்றது. தற்போது ரூ.400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது புதிய கருப்பட்டி உற்பத்தி சீசன் இல்லை. சுமார் 3 மாதங்களுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட கருப்பட்டி ஒரு கிலோ ரூ.280, ரூ. 300, ரூ.320 என உயர்ந்து. தற்போது ரூ.400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இது பற்றி உற்பத்தியாளர் ஒருவர் கூறும்போது, மழை காலம் தொடங்கிவிட்டது. மழையும், குளிரும், கருப்பட்டிக்கு வேண்டாதது. அதனால் புகை மூட்டம் போட்டு இருப்பு வைத்த கருப்பட்டியை பாதுகாக்க முடியவில்லை. இதனால் இன்னும் விலை உயரும் என்று கூறினார்.

    • உடன்குடி பகுதியில் உள்ள காரத்தன்மை உள்ள மணலினால் இங்குள்ள பனைகளில் கிடைக்கும் பதனீர் தனிச்சுவையாக இருக்கும்.
    • உடன்குடி கருப்பட்டிக்கு அதிகாரப்பூர்வமாக தற்போது புவிசார் குறியீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

    உடன்குடி:

    ஒவ்வொரு வட்டார பகுதியில் உற்பத்தி ஆகக்கூடிய தனித்துவமான பொருட்களை அடையாளம் கண்டு அதற்கான சட்டப் பாதுகாப்பு வழங்குவதற்காக புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் மதுரை மல்லி, ஆத்தூர் வெற்றிலை, வீரவநல்லூர் செடிபுட்டா சேலைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சகத்தின் சார்பில் உடன்குடி புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியில் உள்ள காரத்தன்மை உள்ள மணலினால் இங்குள்ள பனைகளில் கிடைக்கும் பதனீர் தனிச்சுவையாக இருக்கும். மேலும் உடன்குடி பகுதியில் தயாரிக்கப்படும் பனங்கருப்பட்டி, கற்கண்டு ஆகியவற்றிக்கு தனிச்சுவையும், மருத்துவ குணமும் உண்டு. எனவே உலகம் முழுவதும் உடன்குடி பனங்கருப்பட்டிக்கு நல்ல கிராக்கி இருந்து வருகிறது.

    தனிச்சிறப்பு கொண்ட இந்த கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக இப்பகுதியில் உள்ள விவசாயிகள், பனைத் தொழிலாளிகள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். சமீபத்தில் தூத்துக்குடி எம்.பி. கனிமொழியும், உடன்குடி பனங்கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    இந்நிலையில் உடன்குடி கருப்பட்டிக்கு அதிகாரப்பூர்வமாக தற்போது புவிசார் குறியீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உடன்குடி பகுதியில் உள்ள விவசாயிகள், பனைத்தொழிலாளர்கள், பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்த அமைப்பினர், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    தங்களது மகிழ்ச்சியை தெரிவிக்கும் வகையில் உடன்குடி வட்டார பனங்கருப்பட்டி, கற்கண்டு தயாரிப்பாளர்கள் நல அமைப்பு சார்பில் அதன் தலைவர் சந்ரசேகரன் தலைமையில் செயலாளர் ஷேக்முகமது முன்னிலையில் உடன்குடி மெயின் பஜாரில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர்.

    இதில் பொன்ஸ்ரீராம், தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்க நிறுவனர் முகைதீன், வாடாப்பூ, சமூக ஆர்வலர் அசோக் சுப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • உடன்குடி கருப்பட்டி கடந்த சில மாதங்களாக ஒரு கிலோ ரூ.250 வரை விற்பனை செய்யப்பட்டு நீண்ட நாட்களாக விலை குறைவாகவே இருந்தது.
    • இன்னும் ஒரு மாதம் மட்டுமே புதிய கருப்பட்டி உற்பத்தி இருக்கும்.

    உடன்குடி:

    உடன்குடி என்று சொன்னாலே கருப்பட்டி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நகரமாகும். ஊர் பெயரோடு ஊர் ஊராய் பவனி செல்லும் உடன்குடி கருப்பட்டி கடந்த சில மாதங்களாக ஒரு கிலோ ரூ.250 வரை விற்பனை செய்யப்பட்டு நீண்ட நாட்களாக விலை குறைவாகவே இருந்தது.

    கருப்பட்டி உற்பத்தி சீசன் முடியும் காலம் என்பதால் தற்போது கிடுகிடு என விலை உயர்ந்து விட்டது. எந்த கலப்படமும் இல்லாத ஒரிஜினல் கருப்பட்டி புதியது ஒரு கிலோ ரூ.280-க்கும், பழைய கருப்பட்டி அதாவது ஒரு வருடத்திற்கு முன்னால் உள்ள கருப்பட்டி ஒரு கிலோ ரூ.340-க்கும் விற்பனை செய்யப்பபட்டது. தற்போது மீண்டும் விலை உயர்ந்து ஒரு கிலோ ரூ.360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இன்னும் ஒரு மாதம் மட்டுமே புதிய கருப்பட்டி உற்பத்தி இருக்கும் என்றும், அதற்கு பின்பு புதிய கருப்பட்டி உற்பத்தி இருக்காது என்றும் அதன் பின்பு எல்லாமே பழைய கருப்பட்டி தான் விற்பனைக்கு வரும் என்றும் வியாபாரிகள் கூறினர். இதனால் வரும் நாட்களில், கருப்பட்டி மேலும் விலை உயரும் என்று கருப்பட்டி உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

    ×