search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈரோட்டில் அ.தி.மு.க.வினர்"

    • அ.தி.மு.க. சார்பில் வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • நிர்வாகிகள் தி.மு.க. அரசை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பினர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் நடைபெற்று வரும் பல்வேறு ஊழல் முறைகேடுகள், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் முதலியவற்றை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும், லஞ்ச வழக்கில் அமலக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் இன்று அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அ.தி.மு.க பொதுச்செயலாளரும், முன்னாள் முதல் - அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

    அதன்படி இன்று ஈரோடு மாவட்ட ஒருங்கிணைந்த அ.தி.மு.க. சார்பில் வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.செ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சரும், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளருமான கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ. முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளருமான கே.வி.ராமலிங்கம் ஆகியோர் தலைமை தாங்கினர். எம்.எல்.ஏ.க்கள், ஜெயக்குமார், பண்ணாரி, முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க நிர்வாகிகள் தி.மு.க. அரசை கண்டித்தும், அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக வலியுறுத்தியும் கண்டன கோஷம் எழுப்பினர்.

    இதில் முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணைமேயர் கே.சி. பழனிச்சாமி, மாநகராட்சி எதிர்க்கட்சித்தலைவர் எஸ்.டி.தங்கமுத்து, பகுதி செயலாளர்கள் பெரியார் நகர் மனோகரன், கேசவமூர்த்தி, சூரம்பட்டி ஜெகதீஸ், கோவிந்தராஜன், ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச்செயலாளர் வீரக்குமார், மாணவரணி மாவட்ட இணைச்செயலாளர் நந்தகோபால், பெரியார் நகர் அவைத்தலைவர் மீன் ராஜா, வக்கீல் அணி தலைவர் துரை சக்திவேல், சிந்தாமணி இயக்குனர் பொன்சேர்மன், முருகானந்தம், மாதையன், முன்னாள் கவுன்சிலர் கோபால், மாவட்ட பிரதிநிதி கஸ்தூரி, சூரிய சேகர் உள்பட கலர் கலந்து கொண்டனர்.

    ×