search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈரோடு ரெயில் நிலையத்தில்"

    • தீபாவளி பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகை கொண்டாட எதுவாக சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் என 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.
    • முன்பதிவு பெட்டி கள் அனைத்தும் நிரம்பி விட்டதால் முன்பதிவு இல்லாத பெட்டியில் மக்கள் போட்டி போட்டுக் கொண்டு இடம் பிடிக்க ஏறினர்.

    ஈரோடு:

    தீபாவளி பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகை கொண்டாட எதுவாக சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் என 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.

    ஈரோடு மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாட ஆயிரக்கண க்கான மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்றனர். இதைப்போல் வெளி மாவட்டத்தில் தங்கி இருந்த ஈரோடு மாவட்ட மக்களும் தீபாவளி கொண்டாடு வதற்காக ஈரோட்டுக்கு வந்தனர்.

    இதையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்க ப்பட்டன. மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்தது.

    இந்நிலையில் தீபாவளி பண்டிகை முடிந்து நாளை மீண்டும் பள்ளிகள் கல்லூரி கள் திறக்கப்படுகின்றன. இதேபோல் அரசு| தனியார் அலுவலகங்களும் நாளை முதல் வழக்கம் போல் செயல்பட தொடங்குகிறது.

    இதையடுத்து தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு சென்றவர்கள் இன்று முதல் மீண்டும் ஈரோடுக்கு திரும்பி வருகின்றனர். இதே போல் ஈரோட்டில் இருந்து வெளி யூருக்கு செல்பவர்களும் இன்று திரும்பி சென்றனர்.

    இதன் காரணமாக இன்று ஈரோடு ரெயில் நிலையத்தில் வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. முன்பதிவு பெட்டி கள் அனைத்தும் நிரம்பி விட்டதால் முன்பதிவு இல்லாத பெட்டியில் மக்கள் போட்டி போட்டுக் கொண்டு இடம் பிடிக்க ஏறினர்.

    • ரெயில் நிலைய நுழைவாயில் பகுதியில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பயணிகள் கொண்டு வரும் உடைமைகளை தீவிரமாக சோதனை செய்து அதன் பின்னரே அவர்கள் உள்ளே அனுமதிக்கின்றனர்.

    ஈரோடு:

    தீபாவளி பண்டிகை வரும் 24-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொது மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் தங்கள் சொந்த ஊருக்கு நாளை மாலை முதல் மிக அதிக அளவில் பயணம் செய்ய உள்ளனர்.

    தொலை தூர பயணத்துக்கு பொது மக்கள் ரெயில் பயணங்க ளை அதிக அளவில் தேர்ந்தெடுத்து சென்று வருகின்றனர்.

    இந்நிலையில் எளிதில் தீப்பற்றக்கூடிய பட்டாசுகள் ரெயிலில் கொண்டு செல்லக்கூடாது என போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். பொதுமக்கள் தங்கள் சொந்த பயன்பாடு அல்லது வணிகரீதியாக ரெயில்களில் யாரேனும் எளிதில் தீப்பற்ற கூடிய பட்டாசு ரகங்கள் எடுத்து செல்கின்றனரா? என்று போலீசார் கண்காணிக்க தொடங்கியுள்ளனர்.

    ஈரோடு ரெயில் நிலையத்தில் நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான ரெயில்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில் ரெயில் நிலைய நுழைவா யில் பகுதியில் இன்ஸ்பெ க்டர் கிருஷ்ணன் தலைமை யில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பயணிகள் கொண்டு வரும் உடைமைகளை தீவிரமாக சோதனை செய்து அதன் பின்னரே அவர்கள் உள்ளே அனுமதிக்கின்றனர். பட்டாசு ஏதேனும் உள்ளதா? என போலீசார் தீவிரமாக சோ தனை செய்து வருகின்றனர்.

    மேலும் ரெயில் நிலையத்தில் வரும் ஒவ்வொரு ரெயில்களையும் போலீசார் சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனை வரும் 24-ந் தேதி நள்ளிரவு வரை நீடிக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

    சோதனையின் போது பயணிகள் பட்டாசு எடுத்து செல்வது கண்டுபிடி க்கப்பட்டால் அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். 

    • ஈரோடு ரெயில் நிலையத்தில் இரவில் படுத்து தூங்குபவர்களின் விவரங்களை சேகரிக்கும்படி போலீசாருக்கு மாவட்ட காவல்துறை நிர்வாகம் உத்தரவிட்டது.
    • போலீசார் ரெயில் நிலைய வளாகத்தில் தங்கி இருந்த 30-க்கும் மேற்பட்டவர்களின் விவர ங்களை சேகரித்ததோடு அவர்களின் கை ரேகைகளும் சேகரிக்கப்பட்டன.

    ஈரோடு:

    ஈரோடு ரெயில் நிலைய வளாகத்தின் நுழைவு பகுதி மற்றும் நடைமேடை பகுதியில் இரவில் படுத்து தூங்கும் சிலர் சிறுசிறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் வயதான சிலர் பயணிகளிடம் யாசகம் பெற்று அங்கேயே நிரந்தரமாக தங்கிக்கொள்கின்றனர். வயது முதிர்ச்சியால் இறந்து விடும் பட்சத்தில் இறந்த நபர் யார், எந்த ஊர் என்ற விபரம் தெரியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

    இதற்கு தீர்வு காணும் வகையில் ஈரோடு ரெயில் நிலையத்தில் இரவில் படுத்து தூங்குபவர்களின் விவரங்களை சேகரிக்கும்படி போலீசாருக்கு மாவட்ட காவல்துறை நிர்வாகம் உத்தரவிட்டது.

    இதையடுத்து ஈரோடு டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையில் சூரம்பட்டி இன்ஸ்பெக்டர் உள்பட 15-க்கும் மேற்பட்ட போலீசார் ரெயில் நிலைய வளாகத்தில் தங்கி இருந்த 30-க்கும் மேற்பட்டவர் களின் பெயர், ஊர் உள்ளிட்ட விவர ங்களை சேகரித்ததோடு, அவர்களின் கை ரேகை களும் சேகரிக்கப்பட்டன.

    ×