search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈரோடு மார்க்கெட்டிற்கு"

    • மீன்கள் வரத்தான நிலையில் இன்று வெறும் 8 டன் மீன்கள் மட்டுமே வரத்தாகி இருந்தது.
    • சில மீன்களின் விலை கடந்த வாரத்தை விட இன்று கூடி உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட்டில் 30-க்கும் மேற்பட்ட மீன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு கடல் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலு இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் இங்கு அதிக அளவில் கடல் மீன்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.

    இந்த மார்க்கெட்டிற்கு பொதுவாக சாதாரண நாட்களில் 15 டன்கள் வரை மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். வார இறுதி நாட்களில் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.

    இந்நிலையில் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து மீன்கள் வரத்து சற்று அதிகரித்து வந்தது.

    கடந்த வாரம் 20 டன்கள் மீன்கள் வரத்தான நிலையில் இன்று வெறும் 8 டன் மீன்கள் மட்டுமே வரத்தாகி இருந்தது. மீன் வரத்து குறைவு எதிரொலியாக சில மீன்களின் விலை கடந்த வாரத்தை விட இன்று கூடி உள்ளது.

    குறிப்பாக வஞ்சரம் மீன் கடந்த வாரம் ஒரு கிலோ ரூ. 900-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ஒரு கிலோ ரூ. ஆயிரமாக அதிகரித்துள்ளது.

    இதேபோல் வெள்ளை வாவல் மீன் கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.900-க்கு விருப்பப்பட்ட நிலையில் இன்று ஒரு கிலோ ரூ.1,300 ஆக அதிகரித்து விற்கப்படுகிறது.

    அதே சமயம் இறால், சீலா, மயில் மீன், பொட்டு நண்டு ஆகிய மீன்கள் கடந்த வாரத்தை விட இன்று விலை குறைந்துள்ளது. இன்று ராமேஸ்வரம், காரைக்கால், நாகப்பட்டினம், தூத்துக்குடி போன்ற பகுதிகளில் இருந்து 8 டன் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது .

    இன்று மார்க்கெட்டில் விற்கப்பட்ட மீன்களின் விலை கிலோவில் வருமாறு:

    அயிலை-300, மத்தி-250, வஞ்சரம்-1000, விளா மீன்- 350, தேங்காய் பாறை-500, முரல்-350, நண்டு-400, ப்ளூ நண்டு-750, இறால்-600, சீலா-450, வெள்ளை வாவல்-1300, கருப்பு வாவல்-850, பாறை-500, மயில் மீன்-700, பொட்டு நண்டு-400, கிளி மீன்-600, மஞ்சள் கிளி-600, கடல் விலாங்கு-350, திருக்கை-400, பெரிய திருக்கை-500, நகர மீன்-450.

    • 12 டன் மீன்கள் வரத்தாகி உள்ளது.
    • மீன்வரத்து எதிரொலியாக விலையும் சரிந்துள்ளது.

    ஈரோடு:

    தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் கடந்த 2 மாதமாக இருந்து வந்தது. இந்த காலகட்டத்தில் மீன்களின் வரத்து குறைந்து மீன்கள் விலையும் கடுமையாக உயர்ந்தது. இந்நிலையில் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்தது.

    ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட்டில் 30-க்கும் மேற்பட்ட மீன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு கடல் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் இங்கு அதிக அளவில் மீன்கள் வரத்தாகி வருகிறது.

    இந்த மார்க்கெட்டிற்கு பொதுவாக சாதாரண நாட்களில் 15 டன்கள் வரை மீன்கள் விற்பனைக்கு வந்தது. வார இறுதி நாட்களில் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். இந்நிலையில் தடைக்காலத்தையொட்டி மீன்கள் வரத்து 5 டன்னாக குறைந்தது. இதனால் ஒரு சில மீன்கள் விலையும் உயர்ந்தது.

    இந்நிலையில் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததால் இன்று மீன் மார்க்கெட்டிற்கு மீன்கள் வரத்து மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இன்று ராமேஸ்வரம், காரைக்கால், நாகப்பட்டினம், தூத்துக்குடி போன்ற பகுதிகளில் இருந்து 12 டன் மீன்கள் வரத்தாகி உள்ளது. மீன்வரத்து எதிரொலியாக விலையும் சரிந்துள்ளது.

    இன்று விற்கப்பட்ட மீன்களின் விலை கிலோவில் வருமாறு:

    அயிலை-250, மத்தி-250, வஞ்சரம்-1000, விளாமீன்-350, தேங்காய் பாறை-450, முரல்-350, நண்டு-400, ப்ளூ நண்டு-700, இறால்-700, சீலா-450, வெள்ளை வாவல்-900, கருப்பு வாவல்-750, பாறை-500, மயில்மீன்-800, பொட்டு நண்டு-450, கிளிமீன்-600, மதனமீன்-500, மஞ்சள்கிளி-300, கடல் விலாங்கு-300, திருக்கை-400.

    இதேபோல் ஈரோடு வ.உ.சி காய்கறி மார்க்கெட்டிற்கு தினமும் 7 ஆயிரம் பெட்டி தக்காளிகள் விற்பனைக்கு வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்தும் குறைந்து விட்டது. இதன் எதிரொலியாக கடந்த ஒரு மாதமாக தக்காளி விலையில் பெரிய மாற்றம் ஏற்பட்டு விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

    இன்று மார்க்கெட்டிற்கு கேரளா, ஆந்திராவில் இருந்து வெறும் 2 ஆயிரம் பெட்டி தக்காளி மட்டுமே விற்பனைக்கு வந்தது. இதன் எதிரொலியாக இன்று ஒரு கிலோ தக்காளி விலை கிடுகிடுவன உயர்ந்து ரூ.70-க்கு விற்கப்படுகிறது.

    இந்த மாத தொடக்கத்தில் தக்காளி ரூ.20 முதல் 30-க்கு விற்பனையானது. அதன் பின்னர் ரூ.45 முதல் 50 ரூபாய் உயர்ந்து விற்கப்பட்டது. இன்று ஒரு கிலோ தக்காளி ரூ. 70 ஆக உயர்ந்தது. தக்காளி விலை உயர்வால் பெண்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

    ×