search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈரோடு கடை வீதிகளில்"

    • குடும்பமாக வந்து ஜவுளி கடையில் மக்கள் குவிந்தனர்.
    • இந்த பகுதியில் இன்று கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.

    ஈரோடு:

    இந்த ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை வரும் 12-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனால் கடந்த சில நாட்களில் கடை விதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது.

    அதன்படி இன்று ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள பன்னீர்செல்வம் பார்க், ஆர்.கே.வி.ரோடு, மணிக்கூண்டு, மேட்டூர் ரோடு, சக்தி ரோடு பகுதியில் வழக்கத்தை விட மக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.

    குறிப்பாக ஈரோடு பன்னீர்செல்வம் பார்கில் சாலையின் இரு புறம் 100-க்கும் மேற்பட்ட ஜவுளி கடைகள், நகை கடைகள், பேன்சி கடைகள் உள்ளதால் காலையில் இருந்தே மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    இன்று விடுமுறை நாள் என்பதால் குடும்பமாக வந்து ஜவுளி கடையில் மக்கள் குவிந்தனர். சாதாரண சின்ன கடை முதல் பெரிய ஜவுளி கடை வரை மக்கள் கூட்டமாகவே இருந்தது.

    இதேபோல் பட்டாசு கடைகளிலும் மக்கள் கூட்டம் இன்று அதிக அளவில் காணப்பட்டது. குழந்தைகள் தங்களுக்கு பிடித்த பட்டாசுகளை வாங்கி சென்றனர். இதனால் இந்த பகுதியில் இன்று கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. போக்குவரத்து போலீசார் நெரிசலை சீரமைத்தனர்.

    கூட்ட நெரிசலை பயன் படுத்தி சில மர்ம நபர்கள் பொதுமக்களிடம் பணம், செயின் போன்றவற்றை கொள்ளையடித்து செல்லும் சம்பவங்களை தடுக்கும் வகையில் ஈரோடு மாவட்ட போலீஸ் சார்பில் ஈரோடு ஜி. எச். ரவுண்டானா, பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு உட்பட முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு அங்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல் மாநகரில் 16 முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டு அதன் நடவடிக்கைகள் ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இது தவிர போலீசார் விழிப்புணர்வு நோட்டீஸ் அறிவுரைகள் வழங்கி வருகின்றனர்.

    • ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் முதல் மணிக்கூண்டு பகுதி வரை ஜவுளி கடைகள், நகை கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
    • மாநகர் பகுதியில் பொதுமக்கள் அதிகம் கூடும் 6 இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    நாளை தீபாவளி பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் தீபாவளி உற்சாகமாக கொண்டாட சொந்த ஊருக்கு ஆயிரக்க ணக்கான மக்கள் சென்ற வண்ணம் உள்ளனர். இதனால் கடந்த 2 நாட்களாக ஈரோடு ெரயில், பஸ் நிலையங்களில் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

    ஏற்கனவே முன்பதிவு அனைத்தும் நிரம்பி விட்டதால் சிறப்பு பஸ்கள், சிறப்பு ரெயில்களில் மக்கள் சொந்த ஊருக்கு செல்கின்றனர். 2 நாட்களாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இன்று இரவும் சிறப்பு பஸ்கள் இயக்கப்ப டுகின்றன.

    இந்நிலையில் இன்று காலை ஈரோடு கடைவீதிகளில் மக்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. குறிப்பாக ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் முதல் மணிக்கூண்டு பகுதி வரை ஜவுளி கடைகள், நகை கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    இதனால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. ஆர்.கே.வி.ரோடு பகுதிகளில் உள்ள நகைக்கடைகள், துணிக்கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. இதேபோல் ஈஸ்வரன் கோவில் வீதிகளிலும் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் இருந்தது.

    தீபாவளி பண்டிகையை யொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு மாவட்டம் முழுவதும் மக்கள் கூடும் பொது இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து கண்கா ணித்து வருகின்றனர்.

    கூட்ட நெரிசலை பயன்படுத்தி சிலர் பணத்தை திருடுவதும், நகைகளை திருடுவதும் கைவரிசை காட்டுகின்றனர். இதை தடுக்கும் பொருட்டு ஈரோடு மாநகர் பகுதியில் பொதுமக்கள் அதிகம் கூடும் 6 இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த கண்காணிப்பு கோபுரத்தில் சி.சி.டி.வி கேமிராக்கள் பொரு த்தப்பட்டு பொதுமக்கள் நடவடிக்கை துல்லியமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இங்கு 24 மணி நேரமும் போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல் மாவட்டம் முழுவதும் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் ஏ.டி.எஸ்பி.க்கள், டி.எஸ்பி.க்கள் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 1,100 போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் பெண் போலீசார் மாறு வேடங்களிலும் பொது மக்களை கண்காணித்து வருகின்றனர்.

    இன்று பட்டாசு விற்பனை மும்முரமாக இருந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு ரகங்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர். இந்த வருட தீபாவளிக்காக புதிய ரக பட்டாசுகள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன.

    • தீபாவளிக்கு ஜவுளி வாங்க ஈரோடு கடைவீதிகளில் இன்று வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
    • இதனால் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் முதல் மணிக்கூண்டு வரை கூட்ட நெரிசலால் வாகன போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    ஈரோடு:

    தீபாவளி பண்டிகை வரும் 24-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிக்கு இன்னும் 8 நாட்களை இருப்பதால் தீபாவளியை கொண்டாட மக்கள் தயாராகி வருகிறா ர்கள். புத்தாடை அணிந்து, பட்டாசுகள் வெடித்து உற்சாகமாக மக்கள் தீபாவ ளியை வரவேற்பார்கள்.

    இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தீபாவளிக்கு ஜவுளி வாங்க ஈரோடு கடைவீதிகளில் இன்று வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    குறிப்பாக ஈரோடு மணிக்கூண்டு முதல் பன்னீர்செல்வம் பார்க் வரை சாலையின் இரு புறமும் ஏராளமான ஜவுளிக்கடைகள் உள்ளன. இதேப்போல ஈஸ்வரன் கோவில் வீதி, ஆர்.கே.வி. ரோடு வீதிகளில் ஏரா ளமான ஜவுளிக்கடைகள், நகை கடைகள் உள்ளன.

    தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் மக்கள் கடந்த சில நாட்களாக ஜவுளி வாங்கி வருகின்றனர். அதிலும் குறிப்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே இருந்தது. ஜவுளிக் கடைகளில் மக்கள் போட்டி கொண்டு துணிகளை வாங்கி சென்றனர்.

    இதேபோல் ஈரோடு ஜவுளி சந்தைகளிலும் இன்று வழக்கத்தை விட கூட்டம் அதிகமாகவே இருந்தது. மற்ற இடங்களை காட்டிலும் இங்கு ஜவுளி விலை குறைவாக இருப்பதால் கூட்டம் அதிகமாகவே இருந்தது.

    இதனால் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் முதல் மணிக்கூண்டு வரை கூட்ட நெரிசலால் வாகன போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக பெண்கள் கூட்டம் அதிக மாகவே காணப்பட்டது.

    கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் கைவரிசை காட்டி விடக்கூடாது என்பதால் போலீஸ் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடி க்கைகள் மேற்கொள்ள ப்பட்டுள்ளன.

    மணிக்கூண்டு பகுதி, பன்னீர்செல்வம் பார்க், பஸ் நிலையம் உள்பட மாநகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் 6 இடங்களில் போலீஸ் சார்பில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு கண்காணிப்பு கோபுரங்களிலும் சிசிடிவி கேமிரா பொருத்தப்ப ட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் நடவடி க்கைக்களை துல்லியமாக கண்காணிக்க முடியும். இதேபோல் இன்று நகைக்கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.

    • ஈரோடு ஜவுளி சந்தைகளிலும் இன்று வழக்கத்தை விட கூட்டம் அதிகமாகவே இருந்தது.
    • இதனால் முன்னெச்சரிக்கை நடவடி க்கையாக போலீசார் சார்பில் பாதுகாப்பு போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    தீபாவளி பண்டிகை வரும் 24-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிக்கு இன்னும் 15 நாட்களை இருப்பதால் தீபாவளியை கொண்டாட மக்கள் தயாராகி வருகி றார்கள். புத்தாடை அணிந்து, பட்டாசுகள் வெடித்து உற்சாகமாக மக்கள் தீபாவளியை வரவேற்பார்கள்.

    இந்நிலையில் தீபாவளி க்கு துணிமணிகள் வாங்க ஈரோடு கடை வீதிகளில் இன்று வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    குறிப்பாக மணிக்கூண்டு முதல் பன்னீர்செல்வம் பார்க் வரை சாலையின் இருபுறமும் ஏராளமான ஜவுளிக்கடைகள் உள்ளன. இதேப்போல ஈஸ்வரன் கோவில் வீதி, ஆர்.கே.வி. ரோடு வீதிகளில் ஏரா ளமான ஜவுளிக்கடைகள் நகை கடைகள் உள்ளன.

    தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் மக்கள் கடந்த சில நாட்களாக துணிமணிகளை வாங்கி வருகின்றனர். அதிலும் குறிப்பாக இன்று ஞாயிற்று க்கிழமை என்பதால் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே இருந்தது. ஜவுளிக் கடைகளில் மக்கள் போட்டி கொண்டு துணி களை வாங்கி சென்றனர்.

    ஈரோடு ஜவுளி சந்தைகளிலும் இன்று வழக்கத்தை விட கூட்டம் அதிகமாகவே இருந்தது. மற்ற இடங்களை காட்டிலும் இங்கு ஜவுளி விலை குறைவாக இருப்பதால் கூட்டம் அதிகமாகவே இருந்தது.

    இதனால் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் முதல் மணிக்கூண்டு வரை கூட்ட நெரிசலால் வாகன போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக பெண்கள் கூட்டம் அதிக மாகவே காணப்பட்டது. இன்னும் ஒரு வாரத்தில் பட்டாசு விற்பனையும் சூடு வைக்க தொடங்கும் என்பதால் இந்த பகுதிகளில் கூட்டம் மேலும் அதிகரித்து காணப்படும்.

    இதனால் முன்னெச்சரிக்கை நடவடி க்கையாக போலீசார் சார்பில் பாதுகாப்பு போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    காலாண்டு தேர்வு முடிந்து நாளை 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பதால் ஈரோடு பஸ் நிலையம், ெரயில் நிலையங்களில் வழக்கத்தை விட இன்று பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. குறிப்பாக ஈரோடு வழியாக செல்லும் அனைத்து ெரயில்களிலும் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. சொந்த ஊருக்கு சென்ற அனைவரும் மீண்டும் ஈரோடு நோக்கி திரும்பி வருகின்றனர்.

    ×