search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலவச வீட்டுமனை"

    • கடந்த 4 ஆண்டுகளாக இலவச வீட்டு மனை பட்டா கேட்டு பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் எந்த பலனும் கிடைக்கவில்லை
    • போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்டு புறநகர் மாவட்ட செயலாளர் கே. எம். இசாக் தொடங்கி வைத்தார்.

     பெருமாநல்லூர்:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஆர் .எஸ் .சில் உள்ள வருவாய் துறை அலுவலகத்தில் 195 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி காத்திருப்பு போராட்டம் நடந்தது. இதற்கு தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்டு புறநகர் மாவட்ட செயலாளர் கே. எம். இசாக் தொடங்கி வைத்தார். இதில் கடந்த 4 ஆண்டுகளாக இலவச வீட்டு மனை பட்டா கேட்டு பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் எந்த பலனும் கிடைக்கவில்லை. ஆகவே ஊத்துக்குளி ஒன்றிய வருவாய் துறையை கண்டித்து தற்போது காத்திருப்பு போராட்டம் நடந்தது. 

    இதில் சிபிஐ. புறநகர் மாவட்ட துணை செயலாளர் ஜி.ரவி, சிபிஐ. மாவட்ட செயலாளர் பி. பழனிசாமி,சிபிஐ தாலுகா செயலாளர் வி. எஸ்.சரவணன்,மாவட்ட செயலாளர் சின்னசாமி, தாலுகா முன்னாள் செயலாளர் முத்துசாமி, ஊராட்சி தலைவர் பி.எஸ். செல்வி, ஆர். சுப்புலட்சுமி மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஏ .ஐ. டி. யு .சி. மாவட்ட தலைவர் எம். மோகன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் செய்திருந்தது.

    • கிராமப்புற பகுதிகளில் உள்ள நிலம் இல்லாதோருக்கு வீட்டுமனை வழங்கக்கோரி போராட்டம்.
    • கண்களில் கருப்புத் துணியைக் கட்டியபடி போராட்டத்தில் எழுப்பினா்.

    நாமக்கல்:

    தமிழ்நாடு மக்கள் நல சேவை அமைப்பு சாா்பில், நாமக்கல் நகரப் பகுதிகளில், கிராமப்புற பகுதிகளில் உள்ள நிலம் இல்லாதோருக்கு வீட்டுமனை வழங்கக் கோரி பல மாதங்களாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டு வருகிறது. 700-க்கும் மேற்பட்டோா் வழங்கியதில் இதுவரை ஒருவருக்கும் இலவச வீட்டுமனை வழங்கப்படவில்லை என தெரிகிறது.

    இதனால் நேற்று நாமக்கல், பூங்கா சாலையில் தமிழ்நாடு மக்கள் நல சேவை அமைப்பின் மாநிலத்தலைவர் ஈஸ்வரி தலைமையில்  200-க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு நின்று கண்களில் கருப்புத் துணியைக் கட்டியபடி போராட்டத்தில் எழுப்பினா். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் டி.எஸ்.பி. சுரேஷ் சமாதான பேச்சுவாா்த்தை நடத்தினாா். ஆட்சியா் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததன் அடிப்படையில் பெண்கள் அனைவரும் கலைந்து சென்றனா்.

    ×