search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலக்கிய போட்டி"

    • விளையாட்டு, இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை கலெக்டர் வழங்கினார்.
    • மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், திட்ட அலுவலர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திலகவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது.

    இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம், விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டன.

    மேலும் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில், வன்கொடுமையால் பாதி க்கப்பட்டு உயிரிழந்த சிவகாசி வட்டம் கீழத்திருத்தங்கல் கிராமத்தைச் சேர்ந்த டேவிட் செல்வம் என்பவரின் வாரிசுதாரரான அவரது மனைவி கல்பனாவுக்கு சமையலர் பணிக்கான ஆணையையும், ரூ.20 ஆயிரம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாவையையும், உயிரிழந்தவரின் தாயாருக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீ மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.5 ஆயிரம் மற்றும் அகவிலைப்படி பெறுவதற்கான ஆணை யையும் கலெக்டர் வழங்கினார்.

    மாவட்ட மாற்றுத்தி றனாளி நலத்துறையின் மூலம் 12 பயனாளிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் பராமரிப்புத்தொகை பெறுவதற்கான ஆணைகளையும், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான செயற்கை கால்களையும், செவித்திறன் குறைபாடுடைய 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.78 ஆயிரம் மதிப்பில் பிரத்தி யேகமாக வடிவமைக்கப்பட்ட செல்போன்களையும் கலெக்டர் வழங்கினார்.

    மாவட்ட பிற்படு த்தப்பட்டேர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் 9 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பில் இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும், 6 பயனாளிகளுக்கு தலா ரூ.5478 வீதம் மொத்தம் ரூ.32 ஆயிரத்து 868 மதிப்பிலான இலவச தையல் எந்திரங்களையும், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 2022-2023-ம் கல்வியாண்டிற்கான கலைத்திருவிழாவில் நடத்தப்பட்ட இலக்கியப் போட்டிகள் மற்றும்

    விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற 20 பேருக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், திட்ட அலுவலர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திலகவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கற்போர் மையம் துவக்கப்பட்டு கல்வி கற்றுத்தர தன்னார்வலர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • வட்டார கல்வித்துறை அலுவலர்களுக்கு இயக்ககத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    அரசுப்பள்ளிகளில் புத்தக கல்வியோடு சிறந்த பண்புகளையும், சமூக சிந்தனையை மேம்படுத்த, இணை செயல்பாடு வகுப்புகள் நடத்தப்படுகிறது.நடப்பு கல்வியாண்டில் மன்றங்களை மீண்டும் புதுப்பித்து, மாணவர்களின் செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டுமென அரசு அறிவித்துள்ளது.

    இதன்படி 6 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இலக்கிய மன்றம், வானவில் மன்ற செயல்பாடுகளாக வினாடி- வினா போட்டி, இலக்கிய போட்டிகள் நடத்துவதற்கும் சிறார் திரைப்படங்கள் திரையிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள பள்ளிகளுக்கு சுற்றறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கல்வித்துறையினர் கூறியதாவது:- இணைசெயல்பாடுகள் தொடர்பான மன்றங்களில் நடத்தப்படும் போட்டிகள் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு நிலையில் நடத்தப்படும் போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்கள் அடுத்தடுத்த நிலைக்கு தகுதிபெறுகின்றனர்.

    இறுதியில் மாநில அளவிலான கருத்தரங்கிலும் பங்கேற்கும் வாய்ப்பையும் பெறலாம்.வழக்கமாக போட்டிகளில் அடிக்கடி வெற்றி பெறும் மாணவர்கள் மட்டுமே இப்போதும் பங்கேற்கும் வகையில் இல்லாமல் அனைத்து மாணவர்களையும் போட்டிகளில் ஈடுபடுத்தி வெற்றி பெறச்செய்ய வேண்டும்.அந்தந்த பள்ளிகளில் போட்டிகளுக்கான பொறுப்பு ஆசிரியர்களையும், தலைமையாசிரியர்களை தலைமை ஏற்க செய்தும் முதன்மைக்கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும்.

    பள்ளி அளவில், இலக்கிய மன்றம், வினாடி-வினா, வானவில் மன்ற போட்டிகள் இம்மாத இறுதி வரை நடத்தப்படுகிறது. மார்ச் மாதம் மாவட்ட அளவிலான போட்டிகள் நடக்கிறது என்றனர்.

    வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் சார்பில் வாழ்வியல் திறன் சார்ந்த கல்வி வழங்குதல் செயல்பாடுகளை நடத்திட கல்வித்துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஊராட்சி, நகரம் உட்பட அனைத்து பகுதிகளிலும் 15 வயதுக்கு மேற்பட்ட கல்வியறிவு இல்லாதவர்களுக்கு அவர்களின் இடத்துக்கு சென்று அதற்கான ஏற்பாடு செய்யும் திட்டத்துக்கு, புதிய பாரத எழுத்தறிவு எனப்படும் வயது வந்தோருக்கான கல்வியறிவு திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது.தற்போது இத்திட்டத்தில் வாழ்வியல் திறன் கல்வி செயல்பாடுகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டுதல் வழங்கியுள்ளது.அந்தந்த பகுதிகளுக்கு அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவரை அணுகி கற்போருக்கு உடல்நலம் சார்ந்த ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

    பெண்கள், குழந்தைகள், முதியோருக்கான சட்டங்கள் குறித்து காவல் துறை, வழக்கறிஞர்கள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மக்களுக்கான நலத்திட்ட உதவிகள், அஞ்சல் துறை செயல்பாடுகள், சேமிப்பு, வங்கியில் பணம் செலுத்துதல், தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு துறைகளை அணுகுதல், சுய வேலைவாய்ப்பு திட்டங்கள் தொடர்பாக அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகள் வாயிலாக ஆலோசனைகளை கற்போருக்கு வழங்க வேண்டும்.ஒவ்வொரு பகுதியிலும் திட்டத்தை செயல்படுத்த பொதுவான கற்போர் மையம் துவக்கப்பட்டு கல்வி கற்றுத்தர தன்னார்வலர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இம்மாத இறுதிக்குள் வாழ்வியல் திறன் செயல்பாடுகளை நடத்திட அந்தந்த வட்டார கல்வித்துறை அலுவலர்களுக்கு இயக்ககத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ×