search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளையாட்டு, இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
    X

    குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.

    விளையாட்டு, இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

    • விளையாட்டு, இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை கலெக்டர் வழங்கினார்.
    • மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், திட்ட அலுவலர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திலகவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது.

    இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம், விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டன.

    மேலும் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில், வன்கொடுமையால் பாதி க்கப்பட்டு உயிரிழந்த சிவகாசி வட்டம் கீழத்திருத்தங்கல் கிராமத்தைச் சேர்ந்த டேவிட் செல்வம் என்பவரின் வாரிசுதாரரான அவரது மனைவி கல்பனாவுக்கு சமையலர் பணிக்கான ஆணையையும், ரூ.20 ஆயிரம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாவையையும், உயிரிழந்தவரின் தாயாருக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீ மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.5 ஆயிரம் மற்றும் அகவிலைப்படி பெறுவதற்கான ஆணை யையும் கலெக்டர் வழங்கினார்.

    மாவட்ட மாற்றுத்தி றனாளி நலத்துறையின் மூலம் 12 பயனாளிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் பராமரிப்புத்தொகை பெறுவதற்கான ஆணைகளையும், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான செயற்கை கால்களையும், செவித்திறன் குறைபாடுடைய 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.78 ஆயிரம் மதிப்பில் பிரத்தி யேகமாக வடிவமைக்கப்பட்ட செல்போன்களையும் கலெக்டர் வழங்கினார்.

    மாவட்ட பிற்படு த்தப்பட்டேர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் 9 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பில் இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும், 6 பயனாளிகளுக்கு தலா ரூ.5478 வீதம் மொத்தம் ரூ.32 ஆயிரத்து 868 மதிப்பிலான இலவச தையல் எந்திரங்களையும், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 2022-2023-ம் கல்வியாண்டிற்கான கலைத்திருவிழாவில் நடத்தப்பட்ட இலக்கியப் போட்டிகள் மற்றும்

    விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற 20 பேருக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், திட்ட அலுவலர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திலகவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×