search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இறைச்சி கூடம்"

    • பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் பெயரால் ஸ்ரீபக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதர் என்பவரால் நிறுவப்பட்டது இஸ்கான்
    • கோசாலை அமைக்க அரசாங்கத்திடமிருந்து உதவிகளை பெறுகிறார்கள்

    மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் மறைந்த மூத்த மகனான சஞ்சய் காந்தியின் மனைவி மேனகா காந்தி. இவர் தீவிர வனவிலங்கு உரிமை ஆர்வலராகவும் சுற்றுபுற சூழல் ஆர்வலராகவும் செயல்படுபவர். தற்போது ஆளும் பா.ஜ.க.வை சேர்ந்த மக்களவை உறுப்பினராக இருக்கும் இவர் பல முறை மக்களவை உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார்.

    இந்துக்கள் வழிபடும் தெய்வமான பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் பெயரால் இந்தியாவை சேர்ந்த இந்து மதகுரு 'ஸ்ரீபக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதர்' என்பவரால் தொடங்கப்பட்ட இயக்கம், இஸ்கான் எனும் "சர்வதேச கிருஷ்ணர் விழிப்புணர்வுக்கான சமூக அமைப்பு" (ISKCON). "ஹரே ராமா ஹரே கிருஷ்ணா" இயக்கம் எனவும் வழங்கப்படும் இந்த இயக்கத்திற்கு, அமெரிக்கா உட்பட பல்வேறு மேற்கத்திய நாடுகளிலும் கிளைகள் உள்ளது. தங்கள் கோட்பாடுகளில் ஒன்றாக சைவ உணவு பழக்கத்தை பிரச்சாரம் செய்யும் இவர்கள் உணவில் பாலை முக்கிய பொருளாக சேர்த்து கொள்ளும் பழக்கமுள்ளதால் பசுக்களை வளர்ப்பதில் ஈடுபாடுடையவர்கள். அதற்காக பசுக்களை வளர்க்கும் கோசாலைகளை அதிகளவில் பராமரித்து வருகிறார்கள்.

    இந்நிலையில், மேனகா காந்தி, இந்த அமைப்பின் மீது குற்றம்சாட்டி வீடியோ பதிவிட்டுள்ளார்.

    அவர் கூறியிருப்பதாவது:

    இஸ்கான் நாட்டிலேயே மிக பெரிய மோசடி அமைப்பு. அவர்கள் கோசாலை அமைக்க அரசாங்கத்திடமிருந்து உதவிகளை பெற்று பெரிய நிலபரப்புகளை பெற்று கொள்கிறார்கள். பால் மற்றும் பசு வளர்ப்பை ஊக்கப்படுத்தி பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால், அவர்களை போல் பசுக்களை இறைச்சிக்கு அதிகளவில் விற்பனை செய்பவர்கள் யாருமில்லை. ஆந்திராவிலுள்ள அனந்தபூர் கோசாலைக்கு சென்றிருந்தேன். அங்கு பால் தருவதை நிறுத்தியதால் பராமரிக்கப்படும் பசுக்கள் ஒன்றை கூட என்னால் காண முடியவில்லை. அனேகமாக அவர்கள் பசுக்களை கசாப்பு கடைக்காரர்களுக்கு விற்று விடுகிறார்கள்.

    இவ்வாறு மேனகா தெரிவித்திருந்தார்.

    இக்குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்து இஸ்கான் இயக்க செய்தி தொடர்பாளர் யுதிஷ்டிர் கோவிந்தா தாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அவர் அதில் கூறியதாவது;

    மேனகா காந்தியின் இந்த கருத்து ஆச்சரியத்தை அளிக்கிறது. மாட்டிறைச்சியை பெருமளவில் உண்ணும் பல நாடுகளில் கூட இஸ்கான் பசுக்களை காப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் 60க்கும் மேற்பட்ட கோசாலைகளை அமைத்து பசுக்களையும், எருதுக்களையும் அவை பால் சுரப்பதை நிறுத்திய பிறகும் கூட அதன் வாழ்நாள் முழுவதும் இஸ்கான் பராமரித்து வருகிறது. விபத்தில் காயமடைந்த பசுக்களையும், கசாப்பு கடைக்கு கொண்டு செல்லப்படும் பசுக்களையும் மீட்டு வளர்த்து வருகிறது. எங்கள் அமைப்பின் கோசாலைகளை நேரில் கண்டு பலர் பாராட்டியுள்ளனர். உள்ளூர் அதிகாரிகளால் தரப்பட்ட சில கோப்புகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அவற்றை பரிசீலித்தால் உண்மை விளங்கும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • திட்டத்திற்கு எதிராக இருந்த வழக்குகள் அனைத்தும் முடிக்கப்பட்டுவிட்டன.
    • விரைவில் பணிகளை தொடங்கி இப்பகுதியில் சுகாதாரமான சூழல் ஏற்படுத்தப்படும்.

    சென்னை:

    சென்னையில் புளியந் தோப்பு, சைதாப்பேட்டை, அம்பத்தூர், வில்லிவாக்கம் ஆகிய 4 இடங்களில் மாநக ராட்சிக்கு சொந்தமான இறைச்சி கூடங்கள் உள்ளன.

    இறைச்சிக்காக கால் நடைகளை இந்த கூடங்களில் மட்டுமே வெட்ட வேண்டும் என்ற விதி உள்ளது.

    புளியந்தோப்பு இறைச்சிக் கூடம் மிகப் பெரியது. அதிகளவில் ஆடு, மாடுகளை வெட்டி இறைச்சிகளை கையாளும் மையமாகும். வார நாட்களில் 2 ஆயிரம் ஆடுகள், 100 மாடுகளும், ஞாயிற்றுக் கிழமைகளில் 5 ஆயிரம் ஆடுகள், 200-க்கும் மேற்பட்ட மாடுகளும் வெட்டப்படுகின்றன. இங்கு மட்டும் தான் மாடுகளை வெட்டும் வசதி உள்ளன.

    இந்த இறைச்சிக் கூடங்கள் பல ஆண்டுகளாக சுகாதாரக்கேடுடன் காணப்படுகிறது. திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை இங்கு மோசமாக உள்ளது. இந்த இறைச்சி கூடத்தை நவீனப் படுத்த கடந்த 2009-ம் ஆண்டு அப்போதைய தி.மு.க. அரசு நடவடிக்கை எடுத்தது.

    டெண்டர் விட்டு, தனியார் மூலம் பணிகளும் தொடங்கி முதல் திட்டப் பணிகள் நிறைவடைந்து 2-வது திட்டப்பணிகள் தொடங்க இருந்தது. இந்நிலையில் இறைச்சிக்கூடம் நவீனமயமாக்கப்பட்டால் 2 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும் என இந்த திட்டத்தை எதிர்த்து இறைச்சி வியாபாரிகள் கோர்ட்டுக்கு சென்றனர்.

    வழக்குகள், இறைச்சி வியாபாரிகள் எதிர்ப்பு, அரசியல் காரணம் போன்ற வற்றால் 2-ம் திட்டப் பணிகள் 10 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போடப் பட்டது. தற்போது மீண்டும் தி.மு.க. ஆட்சி நடைபெறும் நிலையில் இத்திட்டத்தை செயல்படுத்துமாறு மாநகராட்சிக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

    இந்நிலையில் மாநக ராட்சி இணை ஆணையர் ஜி.எஸ்.சமீரன் புளியந்தோப்பு இறைச்சி கூடத்தில் நேற்று ஆய்வு செய்தார்.

    அப்போது அங்கு விதிகளை மீறி கொட்டப்பட்டிருந்த கட்டுமான கழிவுகளை அகற்றுமாறும், கால்நடை அறுக்கும் கூடத்தை பார்வையிட்டு அந்த பகுதியை தூய்மையாக பராமரிக்கு மாறும் அங்கு உருவாகும் கழிவுகளை முறையாக வெளியேற்று மாறும் அறிவுறுத்தினார்.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

    கிடப்பில் போடப்பட்ட நவீன இறைச்சி கூட திட்டத்தை மீண்டும் செயல்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதற்கான நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது.

    இத்திட்டத்திற்கு எதிராக இருந்த வழக்குகள் அனைத்தும் முடிக்கப்பட்டுவிட்டன. விரைவில் பணிகளை தொடங்கி இப்பகுதியில் சுகாதாரமான சூழல் ஏற்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×