search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இறால்"

    • ஒரு ஆண்டுக்கு 6 மாதங்கள் மட்டுமே இறால் பண்ணைகளுக்கு மின்சார பயன்பாடு உள்ளது.
    • இறாலுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்ய வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், தம்பிக்கோட்டை கீழக்காட்டிற்கு மத்திய மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா, இணை மந்திரி எல். முருகன் ஆகியோர் வருகை தந்தனர்.

    அவர்களுக்கு திருவாரூர் மாவட்ட பா.ஜனதா சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பின்னர், அங்கிருந்த கொடிகம்பத்தில் கட்சி கொடியை மத்திய மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா ஏற்றினார்.

    அதனை தொடர்ந்து, தம்பிக்கோட்டை கீழக்காடு இறால் பண்ணை உரிமையா ளர்கள் சங்கம் சார்பில் அவர்களிடம் கோரி க்கை மனு அளிக்கப்பட்டது.

    அந்த மனுவில் கூறியி ருப்பதாவது:-

    ஒரு ஆண்டுக்கு 6 மாதங்கள் மட்டுமே இறால் பண்ணைகளுக்கு மின்சார பயன்பாடு உள்ளது.

    மீதமுள்ள 6 மாதங்கள் பயன்பாடு இல்லாத போது கே.வி.ஏ. ரூ.40-ல் இருந்து ரூ.150-ஆக மின்கட்டணத்தை குறைக்க வேண்டும்.

    இறாலுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்ய வேண்டும்.

    இறால் பண்ணைக ளுக்கான புதிய லைசென்சு காலதாமதமின்றி வழங்கவும், ரினிவல் விரைந்து வழங்க வேண்டும். பேரிடர் காலங்களில் இறால் பண்ணைகளுக்கு ஏற்படும் பொருளாதார இழப்புகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

    தம்பிக்கோட்டை கீழக்காடு பகுதிகளில் சுமார் 4 ஆயிரம் ஏக்கரில் இறால் பண்ணை தொழில் நடைபெற்று வருகிறது.

    எனவே, இப்பகுதியில் இறால்களை பதப்படுத்த குளிர்சாதன கிடங்கு அமைத்துத்தர வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • வெளியூர் வியாபாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் போட்டி போட்டு வாங்கி சென்று வருகின்றனர்.
    • வஞ்சிரம் மீன் ரூ. 800 முதல் ரூ. 900 வரை விற்பனை செய்யப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் துறைமுகத்தில் இருந்து ஏராளமான மீனவர்கள் தினந்தோறும் தங்கள் விசை மற்றும் பைபர் படகுகளில் மீன் பிடிக்க சென்று வருகின்றனர். இதனை தொடர்ந்து கடலூர் துறைமுகத்தில் அதிகாலை முதல் மீன் விற்பனை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் போட்டி போட்டு வாங்கி சென்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக மீன் வறுத்து குறைவாக இருந்து வந்ததால் மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்டன. இன்று ஞாயிற்றுக்கிழமை கடலூர் துறைமுகத்தில் அதிகாலை முதல் ஏராளமான மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றதை காண முடிந்தது. இதில் இன்று மீன்கள் விலை அதிகரித்து காணப்பட்டது.

    வழக்கமாக கிலோ ரூ.500 முதல் ரூ. 600 வரை விற்பனை செய்யப்படும் வஞ்சிரம் மீன் ரூ. 800 முதல் ரூ. 900 வரை விற்பனை செய்யப்பட்டது. இதே போல சங்கரா மீன் ரூ. 350 முதல் ரூ. 400 வரையும், சீலா மீன் ரூ.400-க்கு , நெத்திலி மீன் ரூ.20-க்கும், நண்டு கிலோ ரூ. 300-க்கும், சிறிய வகை இறால் ரூ. 300-க்கும், பெரிய வகை இறால் ரூ. 600-க்கு விற்பனை செய்யப்பட்டது. பன்னி சாத்தான் மீன் ரூ. 500-க்கும், பாறை ரூ. 350-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை ஏற்றத்தினால் கடலூர் துறைமுகத்தில் இன்று காலை பொதுமக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. மேலும் மீன் வாங்க வந்தவர்களும் குறைந்த அளவிலேயே மீன்களை வாங்கி சென்றதையும் காணமுடிந்தது.

    ×