search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Devil fish"

    • பிசாசு மீன்கள் அதிகரித்து வருவதால் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் நீர் நிலைகளில் வாழக்கூடிய 152 வகையான நல்ல மீன்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    • பிசாசு மீன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.

    திருப்பதி:

    பிசாசு மீன் தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது. இதனை டெவில் மீன் என அழைக்கின்றனர். பிசாசு மீன்களின் முதுகெலும்புகள் மிகவும் பலம் வாய்ந்தது.

    வலைகளில் சிக்கும் போது அதன் எலும்புகளால் வலைகளை கிழித்து விடும். மேலும் பெரிய வலைகளில் சிக்கும் பிசாசு மீன்களை அகற்றும் போது அது மீனவர்களை எளிதில் காயப்படுத்தும்.

    பிசாசு வகை மீன்களை சாப்பிட முடியாததால் அதற்கு வணிக மதிப்பு இல்லை. இதனை விற்பனை செய்வதும் கிடையாது. பிசாசு மீன்கள் மற்ற நல்ல மீன் இனங்களை தின்று அழிக்கும்.

    மற்ற மீன்களை கண்டால் உடனே அப்படியே விழுங்கி விடும். பிசாசு மீன்கள் கடந்த 2016-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள கிருஷ்ணா நதியில் முதன் முதலில் இருந்தது தெரிய வந்தது.

    தொடர்ந்து கிருஷ்ணா நதியில் இருந்து அதன் கிளை நதிகளுக்கும் பிசாசு வகை மீன்கள் பரவியது. தற்போது பிசாசு மீன்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் உள்ள 65 சதவீத நீர்நிலைகளில் பிசாசு மீன்கள் உள்ளன.

    இதுகுறித்து ஆய்வு நடத்திய குழுவினர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிசாசு மீன்கள் ஆந்திரா, தெலுங்கானா மாநில நீர் நிலைகளில் அதிகரித்து வருவதாக தெரிவித்தனர்.

    பிசாசு மீன்கள் அதிகரித்து வருவதால் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் நீர் நிலைகளில் வாழக்கூடிய 152 வகையான நல்ல மீன்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இது மீனவர்கள் மற்றும் சுற்றுச்சூழலை கவலை அடைய செய்வதாக உள்ளது. பிசாசு மீன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.

    இதுகுறித்து லாகோன்ஸ் என்ற குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் பிசாசு மீன் குறித்து எச்சரிக்கையும் அவர்கள் விடுத்துள்ளனர்.

    • வெளியூர் வியாபாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் போட்டி போட்டு வாங்கி சென்று வருகின்றனர்.
    • வஞ்சிரம் மீன் ரூ. 800 முதல் ரூ. 900 வரை விற்பனை செய்யப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் துறைமுகத்தில் இருந்து ஏராளமான மீனவர்கள் தினந்தோறும் தங்கள் விசை மற்றும் பைபர் படகுகளில் மீன் பிடிக்க சென்று வருகின்றனர். இதனை தொடர்ந்து கடலூர் துறைமுகத்தில் அதிகாலை முதல் மீன் விற்பனை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் போட்டி போட்டு வாங்கி சென்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக மீன் வறுத்து குறைவாக இருந்து வந்ததால் மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்டன. இன்று ஞாயிற்றுக்கிழமை கடலூர் துறைமுகத்தில் அதிகாலை முதல் ஏராளமான மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றதை காண முடிந்தது. இதில் இன்று மீன்கள் விலை அதிகரித்து காணப்பட்டது.

    வழக்கமாக கிலோ ரூ.500 முதல் ரூ. 600 வரை விற்பனை செய்யப்படும் வஞ்சிரம் மீன் ரூ. 800 முதல் ரூ. 900 வரை விற்பனை செய்யப்பட்டது. இதே போல சங்கரா மீன் ரூ. 350 முதல் ரூ. 400 வரையும், சீலா மீன் ரூ.400-க்கு , நெத்திலி மீன் ரூ.20-க்கும், நண்டு கிலோ ரூ. 300-க்கும், சிறிய வகை இறால் ரூ. 300-க்கும், பெரிய வகை இறால் ரூ. 600-க்கு விற்பனை செய்யப்பட்டது. பன்னி சாத்தான் மீன் ரூ. 500-க்கும், பாறை ரூ. 350-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை ஏற்றத்தினால் கடலூர் துறைமுகத்தில் இன்று காலை பொதுமக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. மேலும் மீன் வாங்க வந்தவர்களும் குறைந்த அளவிலேயே மீன்களை வாங்கி சென்றதையும் காணமுடிந்தது.

    ×