search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரண்டாம் நிலை காவலருக்கான தேர்வு"

    • தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் இரண்டாம் நிலை காவலர், சிறை வார்டன், தீயணைப்பு வீரர்களை தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வு நாளை நடைபெற உள்ளது.
    • ஈரோடு மாவட்டத்தில் 3 மையங்களில் நடைபெற உள்ள தேர்வினை 5,920 பேர் எழுத உள்ளனர்.

    ஈரோடு:

    தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் இரண்டாம் நிலை காவலர், சிறை வார்டன், தீயணைப்பு வீரர்களை தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வு நாளை நடைபெற உள்ளது.

    இத்தேர்வு ஈரோடு மாவட்டத்தில் திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரி, பெருந்துறை அருகே உள்ள நந்தா என்ஜினியரிங் கல்லூரி மற்றும் கொங்கு கல்லூரி என 3 மையங்களில் நடைபெற உள்ளது. தேர்வினை 957 பெண்கள், 4,963 ஆண்கள் என 5,920 பேர் எழுத உள்ளனர்.

    தேர்வானது காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 12.40 மணிக்கு முடிவடைகிறது. இதில் தமிழ் பாடங்களில் இருந்து 80 வினாக்களும், பொது அறிவு 70 வினாக்களும் என மொத்தம் 150 வினாக்களுக்கு தேர்வு நடக்கும். தேர்வர்கள் காலை 8.30 மணிக்கே அவர்களுக்கு ஒதுக்கப் பட்டுள்ள தேர்வு மையத்திற்கு வர வேண்டும். அவர்கள் பிரஸ்கிங் முறையில் சோதிக்கப்பட்ட பின்னரே தேர்வறைக்குள் அனுமதிக்கப்படுவர்.

    இந்த தேர்வு அறை கண்காணிப்பிலும், பாதுகாப்பு பணியிலும் ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தலைமையில் ஏ.டி.எஸ்.பி.க்கள், டி.எஸ்.பி.க்கள் என மொத்தம் 600 போலீசார் ஈடுபட உள்ளனர். தேர்வுக்கான ஏற்பாடுகளை 3 மையங்களிலும் மாவட்ட காவல் துறை சார்பில் தீவிரமாக மேற் கொள்ளப்பட்டு வருகிறது. 

    ×