search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இன்சூரன்சு நிறுவனம்"

    • பழனியப்பன் (வயது 48). இவர் ஒரு லாரி வைத்து, அவரே டிரைவராக பணிபுரிந்து, சுயமாக தொழில் செய்து வந்தார்.
    • கனமழை பெய்ததால் அங்கு சாலையோரம் வாகனத்தை நிறுத்திவிட்டு நின்றுள்ளார். மழை நின்ற பிறகு, திடீரென லாரி தீப்பற்றி எரிய தொடங்கியது.

    சேலம்:

    சேலம் மாவட்டம், சங்ககிரி தாலுகா, வேலம்மாவலசில் வசிப்பவர் பழனியப்பன் (வயது 48). இவர் ஒரு லாரி வைத்து, அவரே டிரைவராக பணிபுரிந்து, சுயமாக தொழில் செய்து வந்தார். அந்த லாரிக்கு, இன்சூரன்ஸ் கம்பெனியில் பிரீமியம் செலுத்தி பாலிசி பெற்றுள்ளார்.

    கடந்த 2012ம் ஆண்டு, மே மாதம் திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்பு நகரில் இருந்து நூல் பண்டல் சரக்குகளை ஏற்றிக் கொண்டு, ராஜஸ்தான் செல்வதற்காக பழனியப்பன் லாரியை ஓட்டிச் சென்றார்.

    லாரி தீ பிடித்தது

    அரவக்குறிச்சி சுங்கச்சாவடி அருகே சென்றபோது கனமழை பெய்ததால் அங்கு சாலையோரம் வாகனத்தை நிறுத்திவிட்டு நின்றுள்ளார். மழை நின்ற பிறகு, திடீரென லாரி தீப்பற்றி எரிய தொடங்கியது.

    இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் வருவதற்குள் லாரியில் இருந்த நூல் பண்டல்கள் முழுவதும் எரிந்து சாம்பலாகி விட்டது. மேலும் லாரியும் தீயில் எரிந்து சேதமானது.

    வாகனத்தில் தீ பிடித்ததால் ஏற்பட்ட சேதத்துக்கு இழப்பீடு ரூ. 12 லட்சம் கேட்டு அவர் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் முறைப்படி விண்ணப்பித்தார். இன்சூரன்ஸ் சர்வேயர் சோதனை செய்து அறிக்கை தாக்கல் செய்த பின்னரும் இன்சூரன்ஸ் இழப்பீடு வழங்கப்படவில்லை.

    நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு

    இதனைத் தொடர்ந்து அவர் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில், இன்சூரன்ஸ் கம்பெனி மீது வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் கோர்ட்டு, கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் வழங்கிய தீர்ப்பில், இன்சூரன்ஸ் நிறுவனம், பாதிக்கப்பட்ட லாரி உரிமையாளருக்கு ரூ.9 லட்சத்து 28 ஆயிரம் இழப்பீடு தர வேண்டும் என உத்தரவிட்டது.

    பின்னர் மேல்முறை யீட்டில் இந்த தொகை செலுத்தப்படும் வரை 7.5 சதவீதம் வட்டியும் சேர்ர்த்து வழங்க வேண்டும் என்று மாநில நுகர்வோர் கோர்ட்டு உத்திரவிட்டது.

    இன்சூரன்ஸ் கம்பெனி இழப்பீடு தராமல் இழுத்தடிப்பு செய்ததால், பாதிக்கப்பட்ட நுகர்வோர் இன்சூரன்ஸ் கம்பெனி மீது நடவடிக்கை எடுத்து தொகையை வசூலித்து தர வேண்டும் என நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில், கடந்த ஜனவரி மாதத்தில் விண்ணப்பம் தாக்கல் செய்தார்.

    சமரச பேச்சுவார்த்தை

    வழக்கு தாக்கல் செய்து 10 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் பிரச்சனையை தீர்க்க நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு நீதிபதி டாக்டர் ராமராஜ் மற்றும் உறுப்பினர் ரத்தினசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு, சமரச பேச்சுவார்த்தைக்காக வக்கீல் பாலசுப்பிரமணியம் என்பவரை கடந்த வாரம் நியமனம் செய்தது. சமரச பேச்சுவார்த்தையில் பாதிக்கப்பட்ட நுகர்வோர் பழனியப்பனுக்கு ரூ.14 லட்சத்து 41 ஆயிரத்து 132 வழங்க இன்சூரன்ஸ் கம்பெனி சம்மதம் தெரிவித்தது. இதையொட்டி, இழப்பீட்டு தொகைக்கான காசோலையை, நுகர்வோர் கோர்ட்டு உறுப்பினர் ரத்தினசாமி முன்னிலையில், நீதிபதி டாக்டர் ராமராஜ் பாதிக்கப்பட்ட பழனியப்பனிடம் வழங்கினார். 

    • நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
    • இன்சூரன்சு நிறு வனம் சரியான காரணங்களை கூறாமல் சிகிச்சைக்காக செலுத்தப்பட்ட பணத்தை தர மறுத்துள்ளது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரத்தைச் சேர்ந்தவர் அருள் ராஜேஸ். இவர் ஒரு தனியார் இன்சூரன்சு நிறுவனத்திடம் 'ஹெல்த் இன்சூரன்சு பாலிசி' எடுத்திருந்தார்.

    அதன் பின்னர் உடல் நிலைக் குறைவால் பாதிக்க ப்பட்ட அருள் ராஜேஸ் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று உள்ளார். சிகிச்சைக்காக ரூ. 24,450 செலுத்திய அவர், இந்த பணத்தை இன்சூரன்சு நிறுவனத்திடம் காப்பீடு செய்ததன் அடிப்படையில் கேட்டார். ஆனால் இன்சூரன்சு நிறு வனம் சரியான காரண ங்களை கூறாமல் சிகிச்சை க்காக செலுத்தப்பட்ட பணத்தை தர மறுத்துள்ளது.இதனால் அதிர்ச்சி அடைந்த அருள் ராஜேஸ் வழக்க றிஞர் மூலம் இன்சூரன்சு நிறுவனத்திற்கு நோட்டீசு அனுப்பினார்.

    ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் ஆ.சங்கர் ஆகியோர் இன்சூரன்சு நிறுவனத்தின் சேவை குறை பாட்டினை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு சிகிச்சை க்காக ஏற்கனவே செலவ ழித்த ரூ. 24 ஆயிரத்து 785, நஷ்ட ஈடாக ரூ. 20 ஆயிரம் மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.5 ஆயிரம், ஆக மொத்தம் ரூ.59ஆயிரத்து 755-ஐ ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தர விட்டனர்.

    ×