search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்து கோவில்"

    • இதன் திறப்பு விழாவில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், முஸ்லிம் தலைவர்கள் கலந்து கொண்டாடினர்.
    • இந்த கோவில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக கிறிஸ்தவ குடும்பம் ஒன்றின் கட்டுப்பாட்டில் இருந்தது.

    லாகூர் :

    பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள புகழ்பெற்ற அனார்கலி பஜார் அருகே வால்மீகி கோவில் உள்ளது. 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக கிறிஸ்தவ குடும்பம் ஒன்றின் கட்டுப்பாட்டில் இருந்தது.

    கோவில் கட்டப்பட்டிருக்கும் நிலம் தங்களுக்கு சொந்தமானது எனக்கூறி ஆக்கிரமித்து வைத்திருந்த நிலையில், இதை எதிர்த்து போராடி வந்த பாகிஸ்தானின் சிறுபான்மை வழிபாட்டு இடங்களை மேற்பார்வையிட்டு வரும் அமைப்பு ஒன்று, கடந்த மாதம் இந்த கோவிலை மீட்டது.

    இதைத்தொடர்ந்து இந்த கோவில் நேற்று மீண்டும் இந்துக்களின் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் மற்றும் முஸ்லிம் தலைவர்கள் ஏராளமானோர் திரண்டு வந்து திறப்பு விழாவை கொண்டாடினர்.

    1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் மீண்டும் திறக்கப்பட்டிருப்பது லாகூர் வாழ் இந்துக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • இந்து கோவில்கள் வருமானத்தை எடுத்துக் கொள்ளும் அரசு அதனை கோவில் பணிகளுக்குச் செலவிடுவதில்லை
    • கட்டணம் வசூலிக்கும் கோவில்கள் முன்பு இந்து முன்னணி சார்பில் போராட்டம்

    கன்னியாகுமரி:

    தமிழகத்தில் இந்துக்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் பிரசார பயணத்தை, இந்து முன்னணி தொடங்கி உள்ளது. அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை யில் திருச்செந்தூரில் நேற்று தொடங்கிய பிரசார பயணம் இன்று கன்னியாகுமரி வந்தது.

    அப்போது மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிர மணியம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த பிரசார பயணம் பல்வேறு மாவட்டங்கள் வழியாக சென்று ஜூலை 31-ந் தேதி சென்னையில் நிறைவு பெறுகிறது. இன்று மாலை நாகர்கோவிலில் பிரசார கூட்டம் நடக்கிறது. இந்து கோவில்கள் வருமானத்தை எடுத்துக் கொள்ளும் அரசு அதனை கோவில் பணிகளுக்குச் செலவிடுவதில்லை. மற்ற மதங்களில் இந்த நிலை இல்லை. எனவே இந்து கோவில்களுக்கு வாரியம் அமைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக இந்து முன்னணி வலியுறுத்தி வருகிறது. இதன் ஒரு முயற்சி தான் இந்த பிரசார பயணம். 90 சதவீதம் கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படாத நிலை தான் இன்று உள்ளது.

    பக்தர்கள் தரிசனத்திற்கு கட்டணம் வசூலிக்ககூடாது. கட்டணம் வசூலிக்கும் கோவில்கள் முன்பு இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடத்துவோம்.

    ஆதீனங்களையும், மடாதிபதி களையும் தி.மு.க. மிரட்டி வருகிறது. இதை இந்து முன்னணி வன்மை யாக கண்டிக்கிறது.கடந்த ஒராண்டில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட இந்து கோவில்கள் இடிக்கப்பட்டு உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாநில செயலாளர் டாக்டர் அரசுராஜா, பேச்சாளர் வக்கீல் அசோகன் ஆகியோர் உடனிருந்தனர்.

    ×