search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா உதவி"

    • ஆப்கானிஸ்தானில் கடும் நிதி நெருக்கடி மற்றும் உணவு பொருட்கள் நெருக்கடி அதிகரித்துள்ளது.
    • ஆப்கன் மக்களுக்கு இந்திய அரசு தொடர்ந்து மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ பொருட்களை அனுப்பி வருகிறது.

    புதுடெல்லி:

    உள்நாட்டுப் போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானில் தற்போது கடும் நிதி நெருக்கடி மற்றும் உணவு பொருட்கள் நெருக்கடி அதிகரித்துள்ளது. தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கிருந்து மக்கள் வெளியேறி வருகின்றனர்.

    ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசை இதுவரை எந்த நாடும் அங்கீகரிக்காத நிலையில், மனிதாபிமான அடிப்படையிலான உதவிகள் மட்டும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஆப்கான் மக்களுக்கு மனிதநேய அடிப்படையில் இந்திய அரசு மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ பொருட்களை அனுப்பி வருகிறது.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இதுவரை 9 கட்டமாக மருந்துப் பொருட்கள் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்பட்டன.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு பத்தாவது கட்டமாக மருந்துப் பொருட்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்தியில், ஆப்கானிஸ்தான் மக்களுடன் எங்களது சிறப்பான கூட்டாண்மை தொடர்கிறது. இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு 10வது கட்டமாக கப்பலில் அனுப்பிய மருத்துவ உதவிப் பொருட்கள் காபூலில் உள்ள இந்திராகாந்தி மருத்துவமனையில் இன்று ஒப்படைக்கப்பட்டு உள்ளன. ஆப்கானிஸ்தானுக்கு இதுவரை 32 டன் மருந்து பொருட்களை இந்தியா அனுப்பியுள்ளது என தெரிவித்துள்ளது.

    ×