என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இந்திய பொருளாதாரம்"
- 2020 ஆம் ஆண்டு இந்திய பொருளாதாரம் -7 சதவீதமாக இருந்தது.
- இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 44 சதவீதம் பேருக்கு 2 டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டதுதான் காரணம் என கூறப்படுகிறது.
வாஷிங்டன்:
கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அலை அலையாக தாக்கும் கொரோனாவால் உலக நாடுகளில் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. பிறகு தடுப்பூசியின் பயன்பாடு அமலுக்கு வந்தபின் பொருளாதாரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வருகின்றன.
இந்நிலையில் 3 கொரோனா அலைகளை சந்தித்து இருந்தாலும் இந்திய பொருளாதாரம் வலுவாக மீண்டும் வருவதாக அமெரிக்க நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2020 ஆம் ஆண்டு இந்திய பொருளாதாரம் -7 சதவீதமாக இருந்தது. அதன்பின் 2021-ம் ஆண்டின் மையப்பகுதியில் இந்திய பொருளாதாரம் கொரோனாவுக்கு முந்தைய நிலையை நோக்கி சென்றது. தற்போது 2021-ம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் 8 சதவிதமாக உயர்ந்துள்ளது.
இதற்கு காரணம் 2021-ம் ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 44 சதவீதம் பேருக்கு 2 டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டதுதான்.
தடுப்பூசி பயன்பாடு பின்னடைவில் இருந்த நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவருவதில் பெரும் பங்காற்றியது. 2022-ம் ஆண்டு தொடங்கியது முதல் இந்தியாவில் கொரோனாவின் 3-வது அலையான ஒமைக்ரான் பரவத்தொடங்கியது.
ஆனால், ஒமைக்ரானால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மிகவும் குறைவாக இருந்தது. அதேபோல், ஒமைக்ரான் நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தைவில்லை.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரீஸ், சுரினேம் மற்றும் கியூபா உள்ளிட்ட மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த 16-ம் தேதி கிரீஸ் சென்றடைந்தார். அந்நாட்டின் தலைநகர் ஏதென்ஸில் உள்ள புலம்பெயர் இந்தியர்களிடையே இன்று உரையாற்றும்போது அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-
பழங்கால பண்பாடு மற்றும் கலச்சார கொள்கைகளை இந்தியா மற்றும் கிரீஸ் நாடுகள் இந்த உலகிற்கு வழங்கியுள்ளன. மிகவும் தொன்மையானதும் ஆழமானதுமான உறவு இவ்விரண்டு நாட்டுக்கும் இடையே நிலவுகின்றது. கிரேக்க வரலாற்று அறிஞர் மெகஸ்தேன்ஸ் ‘இண்டிகா’ எனும் புத்தகத்தின் வாயிலாக இந்தியாவை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தியவராவார்.
புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் சாதனைகளை பார்த்து நாங்கள் பெருமைப்படுகிறோம். தற்போது இந்தியாவில் தொழில் தொடங்கவும், முதலீடு செய்யவும் உகந்த சூழல் நிலவுகிறது. இதை பயன்படுத்தி தாய் நாட்டின் வளர்ச்சிக்காக புலம்பெயர் இந்தியர்கள் உதவுவார்கள் என நான் நம்புகிறேன்.
இந்தியாவின் வளர்ச்சி சீரான வேகத்தில் அதிகரித்து செல்வதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. மேலும், வரும் 2025-ம் ஆண்டிற்குள் இந்தியாவின் பொருளாதாரம் சுமார் 5 டிரில்லியன் டாலர் எனும் அளவிற்கு இருக்கும். அதாவது உலகின் மூன்றாவது மிகப்பெரிய நுகர்வோர் சந்தையை உடைய நாடாக இந்தியாவை முன்னேற்ற நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தற்போதைய பொருளாதார மதிப்பு 2.5 டிரில்லியன் டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. #RamNathKovind #GDP
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்