search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய பொருளாதாரம்"

    • 2020 ஆம் ஆண்டு இந்திய பொருளாதாரம் -7 சதவீதமாக இருந்தது.
    • இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 44 சதவீதம் பேருக்கு 2 டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டதுதான் காரணம் என கூறப்படுகிறது.

    வாஷிங்டன்:

    கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அலை அலையாக தாக்கும் கொரோனாவால் உலக நாடுகளில் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. பிறகு தடுப்பூசியின் பயன்பாடு அமலுக்கு வந்தபின் பொருளாதாரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வருகின்றன.

    இந்நிலையில் 3 கொரோனா அலைகளை சந்தித்து இருந்தாலும் இந்திய பொருளாதாரம் வலுவாக மீண்டும் வருவதாக அமெரிக்க நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    2020 ஆம் ஆண்டு இந்திய பொருளாதாரம் -7 சதவீதமாக இருந்தது. அதன்பின் 2021-ம் ஆண்டின் மையப்பகுதியில் இந்திய பொருளாதாரம் கொரோனாவுக்கு முந்தைய நிலையை நோக்கி சென்றது. தற்போது 2021-ம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் 8 சதவிதமாக உயர்ந்துள்ளது.

    இதற்கு காரணம் 2021-ம் ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 44 சதவீதம் பேருக்கு 2 டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டதுதான்.

    தடுப்பூசி பயன்பாடு பின்னடைவில் இருந்த நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவருவதில் பெரும் பங்காற்றியது. 2022-ம் ஆண்டு தொடங்கியது முதல் இந்தியாவில் கொரோனாவின் 3-வது அலையான ஒமைக்ரான் பரவத்தொடங்கியது.

    ஆனால், ஒமைக்ரானால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மிகவும் குறைவாக இருந்தது. அதேபோல், ஒமைக்ரான் நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தைவில்லை.

    இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்திய பொருளாதாரம் விரைவாக வளர்ச்சி அடைவதாக கூறப்பட்டாலும், 2014-ம் ஆண்டிலிருந்து அது தவறான திசையில் சென்று கொண்டிருப்பதாக நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் பேசியுள்ளார்.
    புதுடெல்லி:

    டெல்லியில் நடைபெற்ற  நூல் வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய  பொருளாதார நிபுணர்  அமர்த்தியா சென் கூறியதாவது:-

    இந்தியாவில் பொருளாதாரம் விரைவாக வளர்ச்சியடைவதாகக் கூறப்பட்ட போதிலும், 2014 ஆம் ஆண்டில் இருந்து அது தவறான திசையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. 

    20 ஆண்டுகளுக்கு முன் தெற்காசிய மண்டலத்தில் பொருளாதாரத்தில் இலங்கைக்கு அடுத்து இரண்டாவது சிறந்த நாடாக விளங்கிய இந்தியா, இப்போது மோசமான நாடுகள் பட்டியலில் பாகிஸ்தானுக்கு அடுத்து இரண்டாவதாக உள்ளது. 

    மக்களிடையே நிலவும் பொருளாதார சமத்துவமின்மையைக் கண்டுகொள்ளாமல் அரசு விலகியிருக்கிறது. சமூகத்தின் ஒரு பிரிவினர் அடுத்த வேளை உணவுக்கான உறுதி இல்லாமலும், நலவாழ்வு, கல்வி ஆகியவை இல்லாமலும் வாழ்கிறார்கள் என கூறினார். 
    2025-ம் ஆண்டிற்குள் இந்தியாவின் பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலர்களாக உயர்த்தும் வகையில் அரசு முயற்சித்து வருவதாக ஜனாதிபதி ராம் நாத்கோவிந்த் தெரிவித்துள்ளார். #RamNathKovind #GDP
    ஏதென்ஸ் :

    கிரீஸ், சுரினேம் மற்றும் கியூபா உள்ளிட்ட மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த 16-ம் தேதி கிரீஸ் சென்றடைந்தார். அந்நாட்டின் தலைநகர் ஏதென்ஸில் உள்ள புலம்பெயர் இந்தியர்களிடையே இன்று உரையாற்றும்போது அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-

    பழங்கால பண்பாடு மற்றும் கலச்சார கொள்கைகளை இந்தியா மற்றும் கிரீஸ் நாடுகள் இந்த உலகிற்கு வழங்கியுள்ளன. மிகவும் தொன்மையானதும் ஆழமானதுமான உறவு இவ்விரண்டு நாட்டுக்கும் இடையே நிலவுகின்றது. கிரேக்க வரலாற்று அறிஞர் மெகஸ்தேன்ஸ் ‘இண்டிகா’ எனும் புத்தகத்தின் வாயிலாக இந்தியாவை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தியவராவார்.

    புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் சாதனைகளை பார்த்து நாங்கள் பெருமைப்படுகிறோம். தற்போது இந்தியாவில் தொழில் தொடங்கவும், முதலீடு செய்யவும் உகந்த சூழல் நிலவுகிறது. இதை பயன்படுத்தி தாய் நாட்டின் வளர்ச்சிக்காக புலம்பெயர் இந்தியர்கள் உதவுவார்கள் என நான் நம்புகிறேன்.

    இந்தியாவின் வளர்ச்சி சீரான வேகத்தில் அதிகரித்து செல்வதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. மேலும், வரும் 2025-ம் ஆண்டிற்குள் இந்தியாவின் பொருளாதாரம் சுமார் 5 டிரில்லியன் டாலர் எனும் அளவிற்கு இருக்கும். அதாவது உலகின் மூன்றாவது மிகப்பெரிய நுகர்வோர் சந்தையை உடைய நாடாக இந்தியாவை முன்னேற்ற நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    இந்தியாவின் தற்போதைய பொருளாதார மதிப்பு 2.5 டிரில்லியன் டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. #RamNathKovind #GDP
    ×