search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இடிந்தது"

    • ரப்பர் பால் உற்பத்தி பாதிப்பு
    • மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் தொடர் மழையின் காரண மாக குளுகுளு சீசன் நிலவு கிறது. மாவட்டம் முழுவதும் தினமும் மழை பெய்து வருகிறது. நேற்றும் மாவட்டம் முழுவதும் பரவலாக இரவு கனமழை கொட்டி தீர்த்துள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணை பகுதிகளில் தொடர்ந்து மழை கொட்டி தீர்த்து வருகிறது. சிற்றாறு 2-ல் அதிகபட்சமாக 59.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பூதப்பாண்டி, கன்னிமார், மயிலாடி, நாகர்கோவில், இரணியல், ஆரல்வாய்மொழி மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது.

    திற்பரப்பு அருவி பகுதி யில் விட்டுவிட்டு பெய்து வரும் மழையின் காரணமாக ரம்யமான சூழல் நிலவுகிறது. அருவியில் தண்ணீர் கொட்டி வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள். மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை பெய்து வருவதால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணைகள் நிரம்பி வரும் நிலையில் அணையின் நீர்மட்டத்தை பொதுப் பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார் கள். பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 43.74 அடியாக இருந்தது. அணைக்கு 544 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.62 அடியாக உள்ளது. அணைக்கு 315 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 250 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தொடர் மழை காரணமாக மாவட்டம் முழுவதும் ஏற்கனவே 200-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. இந்த நிலையில் நேற்று கல்குளம் தாலுகாவில் மேலும் 7 வீடுகள் சேதமடைந் துள்ளது. தொடர் மழையின் காரணமாக குலசேகரம், கீரிப்பாறை, தடிக்காரன்கோ ணம் பகுதிகளில் ரப்பர் பால் உற்பத்தியும் பாதிக்கப் பட்டுள்ளது. சிரட்டைகளில் மழை நீர் தேங்கி உள்ளதால் ரப்பர் பால் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களும் வேலை இன்றி தவித்து வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- பேச்சிப்பாறை 51, பெருஞ்சாணி 22.8, சிற்றார் 1-47.8, சிற்றார் 2-59.4, பூதப்பாண்டி 6.2, களியல் 15, கன்னிமார் 3.2, மயிலாடி 3.2, நாகர்கோவில் 4.2, புத்தன் அணை 18.6, சுருளோடு 8.2, தக்கலை 36, இரணியல் 2, பாலமோர் 12.2, மாம்பழத்துறையாறு 41, திற்பரப்பு 37.9, அடையாமடை 5.1, ஆணைக் கிடங்கு 50.6.

    • கரூர் செல்வநகர் காலனியில் தொடர் மழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது
    • வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்கூரை இடிந்து கீழே விழுந்தது குறித்து விசாரணை நடத்தி சென்றனர்

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் நொய்யல் அருகே சேமிங்கி செல்வநகர்காலனி பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியை சேர்ந்த பலருக்கு தமிழக அரசு சார்பில் ஒட்டுவில்லை தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. அதேபோல் அந்தப் பகுதியைச் சேர்ந்த அர்ஜுனன் (67). என்பவருக்கும் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு சார்பில் ஓட்டு விலை வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது. வீடு கட்டப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேல் ஆனதன் காரணமாக அர்ஜுனன் என்பவரது வீடு மிகவும் பழுதடைந்தது இருந்தது.

    இந்நிலையில் அர்ஜுனன் மற்றும் அவரது குடும்பத்தினர் 100 நாள் வேலைக்கு சென்று விட்டனர். தொடர்ந்து பெய்து வந்த மழையின் காரணமாக வீட்டின் மேற்கூரை சிதலடைந்து திடீரென விழுந்துள்ளது. அர்ஜுனனின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெளியில் வேலைக்கு சென்று இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

    இதுகுறித்து அர்ஜுனன் புகளூர் தாசில்தார் முருகன், வேட்டமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் மலையப்பசாமி, வேட்டமங்கலம் ஊராட்சித் தலைவர் ராமச்சந்திரன் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்கூரை இடிந்து கீழே விழுந்தது குறித்து விசாரணை நடத்தி சென்றனர். 

    • மணல் ஏற்றி கொண்டு லாரி சென்றதால் திடீரென பாலம் இடிந்து விழுந்தது.
    • 18 நாட்களில் இந்த பாலம் இடிந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கீழவாசல் சிராஜூதீன் நகர் பெரியசாலையின் குறுக்கே மழைநீர் வடிகால் வாய்க்காலான ஆதாம் வடிகால் வாய்க்கால் செல்கிறது.

    இந்த வாய்க்காலின் குறுக்கே இருந்த தரைப்பாலத்தை இடித்து விட்டு புதிதாக ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் செலவில் புதிய தரைப்பாலம் கட்டப்பட்டது.

    இந்த பாலத்தின் வழியாக மணல் ஏற்றி கொண்டு லாரி சென்றதால் திடீரென பாலம் இடிந்து விழுந்தது.

    பாலம் கட்டப்பட்டு 18 நாட்களில் இந்த பாலம் இடிந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே அந்த பாலம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.இந்தநிலையில் ஆதாம் வடிகால் வாய்க்கால் பாலம் புனரமைப்பது தொடர்பாக மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் தஞ்சை கலெக்டர் அலுவலக வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இந்திய தேர்தல் ஆணைய மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படுவதை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரெங்கராஜன், தேர்தல் தாசில்தார் ராமலிங்கம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    ×