search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இடஒதுக்கீடு"

    • கண்களை கட்டிக்கொண்டு சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மாணவ, மாணவியர்கள்.
    • தமிழக அரசின் வேலை வாய்ப்பில் சிலம்பக்கலைக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கபட்டுள்ளது.

    வத்திராயிருப்பு

    தமிழக அரசின் வேலை வாய்ப்பில் சிலம்பக்கலைக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கபட்டுள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகாவிற்குட்பட்ட கூமாப்பட்டியில் வீரராவணன் சிலம்பக் கூடம் சார்பில் 5 வயது முதல் 18 வயது வரை உள்ள 150 மாணவர்கள் கண்களை கட்டிக்கொண்டு 20 நிமிடத்தில் 575 தடவை சிலம்பம் சுற்றினர்.

    இந்த நிகழ்வு நோபல் வேர்ல்டு ரெக்கார்டு சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. சிலம்பத்தில் சாதனை புரிந்த மாணவர்களை அந்த பகுதி மக்கள் பாராட்டினர். இந்த சாதனையில் பங்கேற்ற மாணவர்களுக்கு நோபல் வேர்ல்டு ரெக்கார்டு சார்பில் சான்றிதழ்களை ஒருங்கிணைப்பாளர் மணி முத்துவிடம் வழங்கினர்.

    பணி நியமனங்களை நிறுத்தி வையுங்கள் - அனைத்து பல்கலை.களுக்கு யுஜிசி உத்தரவு
    புதுடெல்லி:

    இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால் மறு உத்தரவு வரும் வரை எந்த பணி நியமனமும் நடத்த கூடாது என அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி உத்தரவிட்டுள்ளது. #UGC 

    பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமனத்தில் இடஒதுக்கீடு பின்பற்றப்படுவது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணையில் உள்ளது. 

    இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையில் இருப்பதால், மறு உத்தரவு வரும் வரை அனைத்து பணி நியமனங்களையும் நிறுத்தி வைக்க நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது. 
    அரசு பணிகளில் பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு மத்திய அரசு பணிகளில் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து ராஜ்நாத் சிங் தலைமையில் அமைச்சர்கள் குழு ஆலோசனை செய்து வந்தது. இதற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்,  இது தொடர்பாக மத்திய அரசு கண்டிப்பாக நீதிமன்றத்தை அணுகும் என உறுதி அளித்திருந்தார்.

    மேலும் இதற்கு முன்னரே, வன்கொடுமை தடுப்பு சட்டம், அரசுப்பணியில் பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இட ஒதுக்கீடு, பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீடு ஆகிய 3 விஷயங்களில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு பாதகமாக சுப்ரீம் கோர்ட் கடந்த ஜனவரி மாதம் தீர்ப்பு அளித்திருந்தது. இதற்கு எதிராக நாடு முழுவதும் எஸ்சி, எஸ்டி வகுப்பினர் போராட்டம் நடத்தி வந்தனர். அதனால் இதுபற்றி ஆராய மத்திய அமைச்சர்கள் அடங்கிய, அரசியல் சாசன அமர்வு குழு ஒன்று அமைக்கப்பட்டது.

    இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில்  எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. மேலும், அரசியல் சாசன அமர்வில் விசாரணை முடியும் வரை சட்டத்திற்குட்பட்டு, ஏற்கனவே உள்ள நடைமுறைபடி இடஒதுக்கீடு வழங்கலாம் என கூறி நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.
    ×