search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இ.எஸ்.ஐ. மருத்துவமனை"

    • ராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சி கூட்டம் நடந்தது
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சி குழுவின் சாதாரண கூட்டம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி செயலர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி டாக்டர். ராதாகிருஷ்ணன் வாலாஜா ஒன்றியம், வன்னிவேடு ஊராட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்தவர், எனவே அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5-ந் தேதி வன்னிவேடு அரசினர் பள்ளியில் மாவட்டத்தின் சார்பில் அரசு விழா கொண்டாட மாவட்ட கலெக்டர், மாவட்ட கல்வி அலுவலரை கேட்டு கொள்வது, அடுத்த ஆண்டு முதல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆடிக்கிருத்திகை தினத்தை உள்ளூர் விடுமுறை தினம் என அரசாணை வழங்க வேண்டும்.

    நவ்லாக் ஊராட்சி புளியங்கண்ணு கிராம ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிசேரியன் அறுவை சிகிச்சை தொடங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய மாவட்ட கலெக்டரை கோருவது, வாலாஜா ரோடு ரெயில் நிலையத்தில் கொரோனாவிற்கு முன்பு நிறுத்தப்பட்டு வந்த அனைத்து ெரயில்களும் மீண்டும் நின்று செல்ல தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் வலியுறுத்து வது, ராணிப்பேட்டையில் உள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் 100 படுக்கைகளுடன் கூடிய இ.எஸ்.ஐ. மருத்துவ மனையை மத்திய அரசு நிதி உதவியுடன் உடனடியாக துவங்க கோருவது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதை தொடர்ந்து மாவட்ட கவுன்சிலர்கள் அரசு பஸ்கள் சரிவர இயக்கப்படுவதில்லை எனவே பள்ளி மாணவ, மாணவிகள், பெண்கள்,கட்டிட தொழிலாளர்கள், விவசாயிகள், வியா பாரிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முறையான கால நேரத்தில் அரசு பஸ்களை இயக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட ஊராட்சி அலுவலர் உமாபதி நன்றி கூறினார்.

    • சிவகாசியில் ரூ.150 கோடியில் நவீன வசதிகளுடன் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது.
    • இந்த தகவலை அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், ஆமத்தூரில் பட்டாசு தொழிற்சாலைகள் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் நலன் குறித்த கருத்தரங்கு நடந்தது.தொழிலாளர் நலத்துறை முதன்மைச் செயலாளர் அதுல் ஆனந்த் தலைமை தாங்கினார்.

    தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுதீன் விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி, எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், அசோகன், ரகுராமன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் முன்னிலை வகித்தர்.

    அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, சி.வி.கணேசன் ஆகியோர் கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். இதில் தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் மூலம் தொழிற்சாலையில் இருந்து மீட்கப்பட்ட 5 வளர் இளம் பருவத் தொழிலாளர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் மதிப்பிலும், 1 வளர் இளம் பருவத் தொழிலாளிக்கு ரூ.20 ஆயிரம் என மொத்தம் ரூ.1 லட்சத்து 45ஆயிரம் மதிப்பிலான மறுவாழ்வு நிதிக்கான காசோலையை அமைச்சர்கள் வழங்கினர்.

    அமைச்சர் கணேசன் பேசியதாவது:-

    எதிர் காலத்தில் பட்டாசு விபத்துக்களை தடுக்கும் வகையில் விரைவான நடவடிக்கை எடுப்பதற்கு கலெக்டர் தலைமையிலான குழுக்கள் விரைந்து செயல்படும். தமிழ்நாட்டிலேயே விருது நகர் மாவட்டத்தில் அதிக பட்டாசு தொழிற்சாலைகள் இருக்கின்றன. சுமார் 56 ஆயிரம் பட்டாசுத் தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள்.

    விருதுநகர் மாவட்டத்தில் ஏற்படும் பட்டாசு விபத்துக்களை தடுப்பது மட்டுமல்லாமல், தொழிலாளர்களை காப்பற்றுவதற்கும் சிவகாசியில் அரசு தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி சுமார் ரூ.150 கோடி மதிப்பீட்டில், நவீன வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது.

    இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி மத்திய அரசிடம் ஒப்புதல் பெறுவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

    விபத்தில்லா பட்டாசு தொழில்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, சென்னையில் ஆய்வு கூட்டம் நடந்தது. அதன் விளைவாக இந்த கருத்தரங்கு நடத்தப்படுகிறது.ஆபத்து என்று தெரிந்தும் மக்கள் வறுமை காரணமாக இந்த தொழிலை செய்து வருகின்றனர். அவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், கடமையையும் தமிழக அரசுக்கும், பட்டாசு தொழிற்சாலைகள் உரிமையாளர்களுக்கும் உண்டு.

    இதுவரை தொழிலா ளர்களுக்கு பயிற்சி நிறுவனம் உருவாக்கப்பட்டு அதன் மூலம் 35 ஆயிரத்து 961 தொழிலாளர்களுக்கு, எவ்வாறு பாதுகாப்பாக பணியாற்றவேண்டும் என்ற பயிற்சி அளிக்கப்பட்டு ள்ளது. பட்டாசு விபத்து குறித்து 1241 வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 800 பட்டாசு ஆலைகளில் இதுவரை ஒரு விபத்து கூட ஏற்படவில்லை. விபத்தில்லா பட்டாசு நடக்கும் ஆலைகள் பின்பற்றும் வழிமுறைகளை மற்ற தொழிற்சாலைகள் வழிகாட்டியாக கொண்டு செயல்பட்டு விபத்துக்களை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சென்னை உயா்நீதிமன்ற வழக்கு காரணமாக நீண்ட காலமாக தொடங்கப்படாமல் இருந்த கட்டுமானப் பணிகள், தமிழக முதல்வரின் துரித நடவடிக்கையால் தொடங்கப்பட்டது.
    • திருப்பூா் மாவட்டத்தில் பணியாற்றி வரும் 3.50 லட்சம் தொழிலாளா்கள் பயனடைவாா்கள்.

    திருப்பூர் :

    திருப்பூா் திருமுருகன்பூண்டி-பூலுவப்பட்டி சுற்றுச்சாலையில் 7.46 ஏக்கரில் ரூ.74 கோடியே 94 லட்சம் மதிப்பீட்டில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை அமைச்சா்கள் சி.வி.கணேசன், மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

    இதன் பின்னா் அமைச்சா் சி.வி.கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் அதிக அளவு தொழிலாளா்கள் வசிக்கும் மாவட்டமாக திருப்பூா் உள்ளது. இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தொடா்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை உயா்நீதிமன்ற வழக்கு காரணமாக நீண்ட காலமாக தொடங்கப்படாமல் இருந்த கட்டுமானப் பணிகள், தமிழக முதல்வரின் துரித நடவடிக்கையால் தொடங்கப்பட்டு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    இந்த மருத்துவமனையானது தரைத் தளம் 4,464.67 சதுர மீட்டா் பரப்பளவு, முதல் தளம் 4,566 சதுர மீட்டா் பரப்பளவு, இரண்டாம் தளம் 3,790.68 சதுர மீட்டா் பரப்பளவு உள்பட மொத்தம் 13,106.80 சதுர மீட்டா் பரப்பளவில் 100 படுக்கை வசதியுடன் கட்டப்பட்டு வருகிறது. மேலும், மருத்துவமனை வளாகத்தில் குடிநீா் வசதி, கழிவறை வசதி, மின்தூக்கி உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் 2023 மே மாத இறுதிக்குள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.இதன் மூலமாக திருப்பூா் மாவட்டத்தில் பணியாற்றி வரும் 3.50 லட்சம் தொழிலாளா்கள் பயனடைவாா்கள் என்றாா்.

    இந்த ஆய்வின்போது, திருப்பூா் மாவட்ட கலெக்டர் வினீத், திருப்பூா் தெற்கு சட்டமன்ற உறுப்பினா்செல்வராஜ், மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா், துணை மேயா்பாலசுப்பிரமணியம், மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார், தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) மலா்கொடி, இ.எஸ்.ஐ.கோவை மண்டல இயக்குநா் ரகுராமன், திருப்பூா் கிளை மேலாளா் திலீப் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

    ×