search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆஷா பரேக்"

    • பழம்பெரும் நடிகை ஆஷா பரேக்கிற்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது.
    • நடிகை ஆஷா பரேக்கிற்கு தாதா சாகேப் பால்கே விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.

    புதுடெல்லி:

    திரைத்துறையில் தன்னிகரற்ற சேவையாற்றி வரும் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்தியத் திரை உலகினருக்குக் கிடைக்கும் கௌரவச் சின்னமாகவும், வாழ்நாள் அங்கீகாரமாகவும் இவ்விருது கருதப்படுகிறது.

    இதற்கிடயே, பழம்பெரும் இந்தி நடிகை ஆஷா பரேக்கிற்கு இந்த ஆண்டு இவ்விருது வழங்கப்படுகிறது. 1960 மற்றும் 1970-ம் ஆண்டுகளில் இந்தியில் பிரபலமாக திகழ்ந்த ஆஷா பரேக் இதுவரை பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

    79 வயதான இவர் 1992-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தலைநகர் டெல்லியில் நடந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆஷா பரேக்கிற்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கினார்.

    இந்நிலையில், தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ஆஷா பரேக்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ஆஷா பரேக் ஜி ஒரு சிறந்த திரைப்பட ஆளுமைமிக்கவர். அவரது நீண்ட வாழ்க்கையில் பன்முகத்தன்மை என்றால் என்ன என்பதை அவர் காட்டியுள்ளார். தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்காக அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

    • இந்தி நடிகை ஆஷா பரேக்கிற்கு தாதா சாஹேப் பால்கே விருது வழங்கப்படுகிறது
    • குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்குகிறார்.

    2020-ம் ஆண்டுக்கான தாதா சாஹேப் பால்கே விருது  மூத்த இந்தி திரைப்பட நடிகை ஆஷா பரேக்கிற்கு வழங்கப்படுவதாக மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

    டெல்லியில் வரும் 30ந் தேதி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தலைமையில் நடைபெறும் தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் இந்த விருது வழங்கப்படும் என்று மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

    இந்திய சினிமாவிற்கு நடிகை ஆஷா பரேக் வாழ்நாள் முழுவதும் மிகச்சிறந்த பங்களிப்பு செய்ததை அங்கீகரிக்கும் விதமாக அவருக்கு தாதா சாஹேப் விருதுக்கான அறிவிப்பை வெளியிடுவதில் பெருமை அடைவதாக மந்திரி அனுராக் தாக்கூர் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    நடிகை ஆஷா பரேக் இந்தி திரைப்பட உலகில் 1960 ஆண்டு முதல் 1970 ஆம் ஆண்டுவரை புகழ் பெற்ற நடிகையாக இருந்து வந்தார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அவர், தில் தேக்கே தேக்கோ என்ற திரைப்படத்தின் மூலம் முன்னணி கதாநாயகியாக விளங்கினார்.

    95-க்கும் அதிகமான திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். திரைப்பட இயக்குனராகவும், படத் தயாரிப்பாளராகவும் அவர் பணியாற்றி உள்ளார். 1992ஆம் ஆண்டு பரேக்கிற்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • திரைத்துறையில் தன்னிகரற்ற சேவையாற்றி வரும் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது.
    • பழம்பெரும் நடிகை ஆஷா பரேக்கிற்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

    திரைத்துறையில் தன்னிகரற்ற சேவையாற்றி வரும் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்தியத் திரை உலகினருக்குக் கிடைக்கும் கௌரவச் சின்னமாகவும், வாழ்நாள் அங்கீகாரமாகவும் இவ்விருது கருதப்படுகிறது.

     

    ஆஷா பரேக்

    ஆஷா பரேக்

    இந்நிலையில் பழம்பெரும் இந்தி நடிகை ஆஷா பரேக்கிற்கு இந்த ஆண்டு இவ்விருது வழங்கப்படுகிறது. 1960 மற்றும் 1970 ஆண்டுகளில் இந்தியில் பிரபலமாக திகழ்ந்த ஆஷா பரேக் இதுவரை பல்வேறு விருதுகளை பெற்று உள்ளார். 79 வயதான இவர் 1992-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×