search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு"

    • நிபந்தனைகள் விதித்ததால் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
    • மற்ற அரசியல் கட்சிகளின் போராட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மனு

    சென்னை:

    தமிழகத்தில் கோவை, திருப்பூர், கன்னியாகுமரி மாவட்டங்களை தவிர மற்ற 44 இடங்களிலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அணிவகுப்பு நடத்த காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் உத்தரவு பிறப்பித்திருந்தார். உளவுத்துறை அறிக்கைகளை ஆய்வு செய்த பின் கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், நாகர்கோவில், அருமனை, பல்லடம் ஆகிய இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி இல்லை என்றும் மற்ற 44 இடங்களில் உள்ளரங்கில் அணிவகுப்பை நடத்திக்கொள்ளலாம் என்றும் நீதிபதி நிபந்தனை விதித்தார். மேலும் பல நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன. இவ்வாறு நிபந்தனைகள் விதித்ததால் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில், தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை 44 இடங்களில உள்ளரங்க நிகழ்வாக நடத்தலாம் என உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்தும், ஊர்வலத்திற்கு அனுமதி கோரியும் ஆர்எஸ்எஸ் சார்பில் இன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி மறுக்கப்பட்ட காலத்தில் மற்ற அரசியல் கட்சிகளின் போராட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கருத்து சுதந்திரம் உள்ளிட்ட அம்சங்களை கருத்தில் கொள்ளாமல் அணிவகுப்பை உள்ளரங்க நிகழ்வாக நடத்த தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார், என ஆர்எஸ்எஸ் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • உறுதி மொழி ஏற்புக்கு பின்னர் அணிவகுத்துச் சென்ற ஆர்.எஸ்.எஸ்.தொண்டர்கள்.
    • அணிவகுப்பு நடைபெற்ற இடங்களில் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு

    தமிழகத்தின் 3 மாவட்டங்களில் மட்டும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் அணிவகுப்பு நடத்த சென்னை உயர்நீதிமன்றம் முதலில் அனுமதி அளித்திருந்தது. மேலும் 44 இடங்களில் சுற்றுச்சுவர் அமைந்திருக்கும் மைதானத்திற்குள் அணி வகுப்பு நடத்த வேண்டும் உள்பட 11 நிபந்தனைகளுடன் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு உயர்நீதிமன்றம் பின்னர் அனுமதி அளித்தது. இந்த நிலையில் 44 இடங்களில் இன்று நடைபெற இருந்த அணிவகுப்பை தற்காலிகமாக ஒத்தி வைக்கவும், 3 மாவட்டங்களில் மட்டும் அணிவகுப்பை நடத்தவும் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு முடிவு செய்தது. 


    அதன்படி கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு இன்று மாலை தொடங்கி நடைபெற்றது. முன்னதாக உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கைகளில் காவிக் கொடி ஏந்திய ஆர்.எஸ்.எஸ்.தொண்டர்கள் கம்பீரமாக அணி வகுத்துச் சென்றனர். இந்த அணிவகுப்பு நடைபெறும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1000-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

    • மாறாக குறிப்பிட்ட அரங்கு அல்லது மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியை நடத்திக் கொள்ளலாம் என போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
    • கோர்ட்டு உத்தரவுபடி விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் வேலூர் மாநகர பகுதியில் ஊர்வலம் நடத்த அனுமதி கேட்டிருந்தனர். முதலில் கலெக்டர் அலுவலகம் ஆஞ்சநேயர் கோவில் அருகில் இருந்து அண்ணா கலையரங்கம் வரை ஊர்வலமாக செல்ல அனுமதி கேட்கப்பட்டது. அதற்கு போலீசார் மறுப்பு தெரிவித்தனர்.

    அதற்கு பிறகு ஆர்.எஸ்.எஸ். சார்பில் ஆனைகுளத்தம்மன் கோவில் அருகில் இருந்து அண்ணா கலையரங்கம் வரை பேரணியாக செல்ல அனுமதி கேட்டு மனு அளித்திருந்தனர்.

    இதற்கும் போலீசார் அனுமதி அளிக்கவில்லை. மாறாக குறிப்பிட்ட அரங்கு அல்லது மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியை நடத்திக் கொள்ளலாம் என போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டது. கோர்ட்டு உத்தரவுபடி விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ்.வேலூர் மாவட்ட செயலாளர் நேதாஜி, தலைவர் சசிகுமார், அமைப்பாளர் கணேஷ் ஜி ஆகியோருக்கு போலீசார் விதிமுறைகள் அடங்கிய நோட்டீசை வழங்கி உள்ளனர்.

    இது தொடர்பாக வேலூர் மாவட்ட ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் கூறுகையில்:-

    வேலூரில் பேரணி நடத்துவது குறித்து தலைமையில் இருந்து எங்களுக்கு எந்தவிதமான உத்தரவும் இன்னும் வரவில்லை. மேலும் போலீசார் கூறும் விதிமுறைகள் படி பேரணி நடத்த முடியாது என்றனர்.

    • ஊர்வலத்தின் நிறைவாக சிறப்பு பொது கூட்டம் கொசவம்பாளையம் ரோட்டில் உள்ள அங்காளம்மன் கோவில் எதிரில் உள்ள மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.
    • ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்தில் திரளான ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்ட ஆர்.எஸ்.எஸ்., சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நாளை 6-ந் தேதி பல்லடம் பொள்ளாச்சி ரோடு வடுகபாளையத்தில் நடைபெற இருந்தது. இது தொடர்பாக அனுமதி கேட்டு பல்லடம் போலீஸ் நிலையத்தில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் மனு அளிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் பல்லடத்தில் மட்டும் ஊர்வலம் நடைபெற இருந்தது.

    ஊர்வலத்தின் நிறைவாக சிறப்பு பொது கூட்டம் கொசவம்பாளையம் ரோட்டில் உள்ள அங்காளம்மன் கோவில் எதிரில் உள்ள மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

    ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்தில் திரளான ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கூட்டத்தில் கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமி, உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து, சிவக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்க இருந்தனர்.

    இந்தநிலையில் தமிழகத்தில் பல்லடம் மற்றும் சில இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்த தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் பல்லடத்தில் நாளை நடைபெற இருந்த ஊர்வலம் ரத்து செய்யப்பட்டது.

    • நாளை 44 இடங்களில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பை ரத்து செய்வதாக அதன் நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    • சென்னையில் கொரட்டூர் பகுதியில் நடைபெற இருந்த அணிவகுப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் கடந்த மாதம் (அக்டோபர்) 2-ந்தேதி அணிவகுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.

    இது தொடர்பாக தமிழக காவல்துறையில் சென்னை உள்பட அனைத்து இடங்களிலும் உரிய அனுமதி கோரப்பட்டது. ஆனால் போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். சார்பில் ஐகோர்ட்டில் முறையிடப்பட்டது.

    இது தொடர்பான வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நிபந்தனைகளுடன் ஆர்.எஸ்.எஸ். அணி வகுப்புக்கு அனுமதி அளிக்க டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்திருந்த நிலையில் மாநிலம் முழுவதும் நிலவிய சூழலை கருத்தில் கொண்டு ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு போலீசார் மீண்டும் அனுமதி மறுத்தனர். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை ஐகோர்ட்டில் நடைபெற்று வந்தது.

    அப்போது நாளை (6-ந்தேதி) ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க கோர்ட்டு அறிவுறுத்தியது. இது தொடர்பான வழக்கு கடந்த 2-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது உளவுத்துறை அறிக்கையின்படி எடுக்கப்பட்டுள்ள முடிவுகளை தமிழக காவல்துறை கோர்ட்டில் தெரிவித்தது.

    கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய 3 இடங்களில் மட்டுமே ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதிக்க முடியும் என்றும், 24 இடங்களில் அனுமதி வழங்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது. 23 இடங்களில் உள் அரங்குகளில் கூட்டம் நடத்தலாம் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு 44 இடங்களில் அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டது. ஆனால் இதற்கு 11 நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

    அர்.எஸ்.எஸ். அணிவகுப்பை பொது இடங்களில் நடத்தக்கூடாது, லத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் எதை ம் எடுத்துச் செல்லக்கூடாது, விளையாட்டு மைதானங்கள் மற்றும் கூட்ட அரங்குகளில் மட்டுமே அணிவகுப்பை நடத்த வேண்டும், மத்திய அரசால் தடை செய்யப்பட்ட அமைப்புக்கு எதிராக பேசக்கூடாது, இந்திய இறையாண்மைக்கு தேச ஒற்றுமைக்கு எதிராக செயல்படக்கூடாது என்பது உள்பட 11 நிபந்தனைகளை ஐகோர்ட்டு விதித்திருந்தது.

    ஐகோர்ட்டு விதித்துள்ள இந்த நிபந்தனைகளுடன் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பை கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், பல்லடம், குமரி மாவட்டம் அருமனை, நாகர்கோவில் ஆகிய 6 இடங்களை தவிர்த்து மீதமுள்ள 44 இடங்களிலும் நடத்திக் கொள்ளலாம் என்று காவல்துறை சார்பில் அனுமதி அளிக்கப்பட்டது.

    இது தொடர்பான அறிவிப்பு அடங்கிய நோட்டீசை போலீஸ் சார்பில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளிடம் வழங்குவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. ஆனால் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் இந்த நோட்டீசை வாங்க மறுத்து விட்டனர் என்றும், இதனால் அவர்கள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் அனுமதி தொடர்பாக நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதாகவும் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார்.

    இதற்கிடையே நாளை 44 இடங்களில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பை ரத்து செய்வதாக அதன் நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் கொரட்டூர் பகுதியில் நடைபெற இருந்த அணிவகுப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    ஆர்.எஸ்.எஸ். அணி வகுப்பு என்பது ராணுவ அணிவகுப்பு போன்றே நடைபெறும். வெள்ளை சட்டை, காக்கி டிரவுசர், கருப்பு கலர் தொப்பி அணிந்து ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் சிறிய லத்தியை வைத்துக் கொண்டு மிடுக்குடன் அணி வகுப்பில் நடந்து செல்வார்கள்.

    அணிவகுப்பில் முதலில் ஒருவர் தலைமை ஏற்று செல்வார். அவரது பேண்டு வாத்திய குழுவினருடன் சாலை ஓரமாகவே போக்குவரத்து இடையூறின்றி அணி வகுப்பு நடைபெறுவது வழக்கம்.

    குறிப்பிட்ட நேரத்தில் புறப்பட்டு குறிப்பிட்ட நேரத்தில் அணிவகுப்பு முடியும் இடத்தை சென்று விடுவோம். இத்தனை ஆண்டுகளாக அணிவகுப்பு என்பது சாலைகளில்தான் நடந்து உள்ளது.

    ஆனால் சென்னை ஐகோர்ட்டு ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பை நடத்த முடியாத அளவுக்கே நிபந்தனைகளை விதித்திருப்பதாக கருதுகிறோம். எனவே நாளை ஆர்.எஸ்.எஸ். அணி வகுப்பு நடைபெறவில்லை. அது ரத்து செய்யப்பட்டு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    ஐகோர்ட்டு தனி நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு மற்றும் நிபந்தனைகளை தளர்த்தி, பொது வெளியில் எப்போதும்போல ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பை நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று மேல்முறையீடு செய்ய முடிவு செய்து உள்ளோம். இது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறோம்.

    இவ்வாறு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த நிர்வாகி தெரிவித்தார்.

    ஆர்.எஸ்.எஸ். அணி வகுப்பு விவகாரத்தில் தொடர்ந்து முட்டுக்கட்டை நிலவுவதால் அடுத்தக்கட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உயர்மட்ட நிர்வாகிகள் சென்னையில் இன்று கூடி ஆலோசனை நடத்தினர்.

    இந்த கூட்டத்தில் ஐகோர்ட்டு விதித்துள்ள நிபந்தனைகள் குறித்து சட்ட நிபுணர்களுடன் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. தற்போது ஐகோர்ட்டில் அளிக்கப்பட்டுள்ள உத்தரவு தனி நீதிபதி உத்தரவாகும். இதனை எதிர்த்து ஐகோர்ட்டு பெஞ்சில் முறையிட ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் முடிவு செய்திருக்கிறார்கள்.

    வருகிற திங்கட்கிழமை (7-ந்தேதி) இது தொடர்பாக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×