search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "RSS march"

    • ஏற்கனவே நடத்தப்பட்ட பேரணி அமைதியாக நடந்து முடிந்துள்ளதாக ஆர்.எஸ்.எஸ். தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
    • விரும்பும் இடத்தில் ஊர்வலங்களை நடத்துவதற்கு தனி உரிமை இருக்க முடியுமா? என அரசு தரப்பு வழக்கறிஞர் கேள்வி

    புதுடெல்லி:

    தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் பேரணி நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தது. பொது சாலைகளில் பேரணி நடத்துவது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை; இதுபோன்ற அணிவகுப்புகள், கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளதே தவிர, முழுமையாகத் தடை செய்ய முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்தது.

    சட்டம்-ஒழுங்கை பராமரிக்க வேண்டியது மாநில அரசின் கடமை. அந்த வகையில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு தேவையான பாதுகாப்பை வழங்கி, அதன் அடிப்படை உரிமையை உறுதி செய்திருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

    இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, ஆர்எஸ்எஸ் பேரணிக்கு முழுமையாக தடை விதிக்கும் எண்ணம் இல்லை, ஆனால் ஒவ்வொரு தெருவிலும் பேரணியை நடத்த அனுமதி அளிக்க முடியாது என தமிழ்நாடு அரசு தரப்பில் வாதிடப்பட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை உள்ளதாகவும் கூறியது. ஏற்கனவே நடத்தப்பட்ட பேரணி அமைதியாக நடந்து முடிந்துள்ளதாக ஆர்.எஸ்.எஸ். தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோகத்கி, ஒரு அமைப்பு தான் விரும்பும் இடத்தில், ஊர்வலங்களை நடத்துவதற்கு தனி உரிமை இருக்க முடியுமா? என கேள்வி எழுப்பினார். ஆர்.எஸ்.எஸ். குறிப்பிட்ட வழித்தடங்களில் பேரணி நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது, அதேநேரம் மற்ற பகுதிகளில் மூடப்பட்ட அரங்குகளில் பேரணிகளை நடத்துமாறு அறிவுறுத்துகிறது. பொது ஒழுங்கையும் அமைதியையும் பராமரிக்க இவ்வாறு அறிவுறுத்தப்பட்டது என்றும் முகுல் ரேகத்கி கூறினார்.

    ஆர்.எஸ்.எஸ். தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி வாதாடும்போது, அரசியலமைப்பு சட்டம் 19(1)(பி) பிரிவின் கீழ் ஆயுதங்கள் இல்லாமல் அமைதியாக ஒன்றுகூடும் உரிமையை, வலுவான காரணம் எதுவும் இல்லாமல் நிராகரிக்க முடியாது என்றார்.

    பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பும் தடை செய்யப்பட்டதாக கூறி, சில பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அரசு விதித்துள்ள தடை குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.

    அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததையடுத்து வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். 

    • உறுதி மொழி ஏற்புக்கு பின்னர் அணிவகுத்துச் சென்ற ஆர்.எஸ்.எஸ்.தொண்டர்கள்.
    • அணிவகுப்பு நடைபெற்ற இடங்களில் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு

    தமிழகத்தின் 3 மாவட்டங்களில் மட்டும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் அணிவகுப்பு நடத்த சென்னை உயர்நீதிமன்றம் முதலில் அனுமதி அளித்திருந்தது. மேலும் 44 இடங்களில் சுற்றுச்சுவர் அமைந்திருக்கும் மைதானத்திற்குள் அணி வகுப்பு நடத்த வேண்டும் உள்பட 11 நிபந்தனைகளுடன் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு உயர்நீதிமன்றம் பின்னர் அனுமதி அளித்தது. இந்த நிலையில் 44 இடங்களில் இன்று நடைபெற இருந்த அணிவகுப்பை தற்காலிகமாக ஒத்தி வைக்கவும், 3 மாவட்டங்களில் மட்டும் அணிவகுப்பை நடத்தவும் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு முடிவு செய்தது. 


    அதன்படி கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு இன்று மாலை தொடங்கி நடைபெற்றது. முன்னதாக உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கைகளில் காவிக் கொடி ஏந்திய ஆர்.எஸ்.எஸ்.தொண்டர்கள் கம்பீரமாக அணி வகுத்துச் சென்றனர். இந்த அணிவகுப்பு நடைபெறும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1000-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

    ×