search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆர்.எஸ்.எஸ். பேரணி"

    • நாமக்கல்லில் நேற்று ஆர்.எஸ்.எஸ். பேரணி நடைபெற்றது.
    • நாமக்கல் பூங்கா சாலை, அம்மா உணவகம் அருகில் இருந்து ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு தொடங்கியது.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் நேற்று ஆர்.எஸ்.எஸ். பேரணி நடைபெற்றது. நாமக்கல் பூங்கா சாலை, அம்மா உணவகம் அருகில் இருந்து ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு தொடங்கியது. நாமக்கல் பஸ் நிலையம், மணிக்கூண்டு, திருச்சி சாலை, ஸ்டேட் பேங்க் ரோடு, பி.எஸ்.என்.எல். சாலை, மோகனூர் சாலை, அய்யப்பன் கோவில் வழியாக பரமத்தி சாலை எம்.ஜி.ஆர் சிலை, காந்தி சிலை, உழவர் சந்தை வழியாக மீண்டும் பூங்கா சாலையை அடைந்தது.

    அம்மா உணவகத்தின் முன்பு நிகழ்ச்சி முடிந்தது. அங்கு அணிவகுப்பு மரியாதை செய்து சொற்பொழிவாற்றி நிகழ்ச்சியை முடித்தனர். இதையொட்டி நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலை செல்வன் தலைமையில் போலீசார் பலத்த பாதுகாப்பு வழங்கி இருந்தனர்.

    • தருமபுரியில் நாளை மாலை 3 மணியளவில் அணிவகுப்பு பேரணி தருமபுரி குமாரசாமிபேட்டையில் தொடங்குகிறது.
    • ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்கிறார்கள்.

    தருமபுரி,

    தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதியளித்தது.

    இதைத்தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு பேரணிக்கு போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். நாளை (16-ந் தேதி) மாலை 3 மணியளவில் இந்த அணிவகுப்பு பேரணி தருமபுரி குமாரசாமிபேட்டையில் இருந்து தொடங்குகிறது.

    இதைத்தொடர்ந்து 4ரோடு, தபால் நிலையம் வழியாக பி.எஸ்.என்.எல். வந்தடையும், அதன்பின்னர் அந்த பேரணி காந்தி நகர் வழியாக பை-பாஸ் சாைல அடைந்து மீண்டும் 4ரோடு வழியாக வந்து குமாரசாமிபேட்டை வந்தடையும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்கிறார்.

    அதன்பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருக்கும் மேடையில் பொதுகூட்டம் நடைபெறுகிறது.

    இந்த பேரணியில் எந்தவித அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தருமபுரி பகுதி முழுவதும் போலீசார் பலத்த வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், போலீசார் தருமபுரி, 4ரோடு, குமாரசாமிபேட்டை, ஒட்டப்பட்டி, பாரதிபுரம், மதிகோண்பாளையம் ஆகிய பகுதிகள் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • அமைதியாக ஆர்.எஸ்.எஸ். பேரணி நடந்தது
    • பெண்கள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர்

    பெரம்பலுார்:

    பெரம்பலூரில் மகாத்மா காந்தியின் 153-வது பிறந்த நாள் விழா மற்றும் 75-வது சுதந்திர தின நிறைவு விழாக்களை முன்னிட்டு, ஆர்எஸ்எஸ் அமைப்பு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பேரணி மற்றும்பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரியிருந்தது. இந்த நிலையில் பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் பேரணி நடத்த அரசு அனுமதி அளித்தது. அதன்படி பெரம்பலூரில் பதசஞ்சலன் சீருடை அணிவகுப்பு நிகழ்ச்சி என்ற பெயரில் நடைபெற்ற இந்த பேரணியை திருவிநாயக வேல்முருக சித்தர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    பேரணி ரோவர் ஆர்ச், சங்குபேட்டை , காமராஜர் வளைவு, கடைவீதி வழியாக மேற்கு வானொலி திடலில் பொதுக்கூட்ட மேடை அருகில் நிறைவடைந்தது. வழிநெடுகிலும் தொண்டர்களுக்கு பா.ஜ.க.வினர், ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த பெண்கள் மலர் தூவி வரவேற்றனர். மேலும் ஊர்வலத்தில் வந்து பாரதமாதா அலங்கார ஊர்த்திக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த ஊர்வலத்தில் 250க்கு மேற்பட்ட தொண்டர்கள் கலந்துகொண்டு அணிவகுத்து வந்தனர்.

    இதைத்தொடர்ந்து, மாலை 5 மணியளவில் வானொலி திடலில் ஆர்எஸ்எஸ் பொதுக்கூட்டம் நடந்தது.

    • மதுரையில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
    • தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். சார்பில் அக்டோபர் 2-ந் தேதி பேரணி அணிவகுப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    மதுரை

    தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். சார்பில் அக்டோபர் 2-ந் தேதி பேரணி அணிவகுப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு தமிழகத்தில் ஆளும் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். பேரணி வேறு ஒரு நாளுக்கு தள்ளி வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். பேரணி அணிவகுப்பு நடத்துவதற்காக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த கோர்ட்டு தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.

    இதனைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். பேரணி நாளை (6-ந் தேதி) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. மதுரை மாவட்டத்தில் வண்டியூர் சீனிவாச பெருமாள் கோவிலில் இருந்து அண்ணா நகர் அம்பிகா தியேட்டர் வரை ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்துவதற்கான ஏற்பாடுகளில் நிர்வாகிகள் செயல்பட்டனர்.

    ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் சீனிவாசன், மங்கள முருகன், மகேஷ், மாநிலச் செயலாளர் முத்துக்குமார், மாவட்ட தலைவர் அழகர்சாமி மற்றும் மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க தலைவர் சுசீந்திரன் உள்பட 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.

    இது தொடர்பாக மதுரை மாவட்ட இந்து முன்னணி தலைவர் அழகர்சாமி கூறுகையில், "மதுரை மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு மீண்டும் போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்வது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

    ×